இப்படி செய்தால்… ரஷ்யா-சீனாவை மோதவிட்டு வேடிக்கை பார்க்கலாம்! டிரம்ப் கொடுத்த ஐடியா

 ரஷ்யா-சீனாவை மோதவிட்டு வேடிக்கை பார்க்க அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். பிப்ரவரி 24ம் திகதி முதல் உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா, மற்ற நாடுகளில் இதில் தலையிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. எனினும், மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக, ரஷ்யாவின் பங்கு சந்தை மற்றும் ரூபிள் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில், ரிபப்ளிக்கன் … Read more

உக்ரைன் ’நாடு’ என்ற அந்தஸ்தை இழக்கும்! ஆட்டத்தை வேறு வழியில் திருப்பும் புடின் பகிரங்க மிரட்டல்

உக்ரைன் – ரஷ்யா விவகாரத்தில் 3-வது நாடுகள் மூக்கை நுழைத்தார், உக்ரைன் ஒரு நாடு என்ற அந்தஸ்தையே இழக்கும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மிரட்டியுள்ளார். ரஷ்ய படைகள் நடத்தும் தாக்குதல்களால் உக்ரைன் மோசமான விளைவுகளை சந்தித்து வருகிறது. அதிலிருந்து தப்பிக்க உக்ரைன் வான் பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என நேட்டோவிடம் உக்ரைன் கூறியது. ஆனால் இது போருக்கு வித்திடும் என நேட்டோ ஒதுங்கிக்கொண்டது. இந்நிலையில் உக்ரைன் வான்பரப்புக்கு … Read more

பல பெண்களுடன் பழக்கம்! கடைசி நேரத்தில் நின்ற இரண்டாவது திருமணம்.. மறைந்த ஷேன் வார்னேவை வட்டமிட்ட சர்ச்சைகள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே சமீபத்தில் உயிரிழந்தார். உலகின் மிக பிரபலமான கிரிக்கெட் வீரராக இவர் இருந்தாலும் இவர் வாழும் வரை சர்ச்சை நாயகனாக வலம் வந்தார். 1994ம் ஆண்டு இலங்கையுடனான டூரில் இவரும் மார்க் வாக் என்பவரும் சேர்ந்து கிரிக்கெட் பெட்டிங் புக்கீகளுக்கு பிட்ச் குறித்த தகவல்களையும், வானிலை குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார். இதனால் இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஷேன் வார்ன், 2003 ஐசிசி உலககோப்பை போட்டியில் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை … Read more

ஜெலென்ஸ்கி உயிருக்கு ஆபத்து? தயார் நிலையில் அமெரிக்க- பிரித்தானிய சிறப்பு படைகள்

ரஷ்ய போர் அடுத்தகட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கும் நிலையில், உக்ரைன் ஜனாதிபதியை மீட்டுவர பிரித்தானியா மற்றும் அமெரிக்க சிறப்பு படைகள் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிக ஆபத்து மிகுந்த குறித்த நடவடிக்கை தொடர்பில் 70 பிரித்தானிய வீரர்களும் 150 அமெரிக்க வீரர்களும் இரவு நேர இரகசிய பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. லிதுவேனியா நாட்டில் குறித்த பயிற்சிகள் முன்னெடுக்கப்படுகிறது என தகவல் கசிந்துள்ளது. இவர்களுடன் உக்ரேனிய சிறப்பு படை வீரர்களும் இணைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால், … Read more

மூன்றாம் சுற்று பேச்சுவார்த்தையில்… நம்பிக்கை தெரிவித்த உக்ரைன்

கடும் நெருக்கடிக்கு மத்தியில் உக்ரைன்-ரஷ்யா இடையே மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரண்டு சுற்று பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு, முடிவு எட்டாத நிலையில், வரும் 7ம் திகதி மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா போரை கை விட்டு பேச்சுவார்த்தைக்கு உடன்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மன்ற பொது சபை உறுப்பு நாடுகளும் வலியுறுத்தி வந்துள்ளன. இதனிடையே, இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை தொடர்பில் ரஷ்ய தூதுக்குழுவினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில், … Read more

மணி நேரத்தில் தயார்… உக்ரைன் விவகாரத்தில் கனேடிய துருப்புகள் சூளுரை

ஐரோப்பிய நாடான லாத்வியாவில் இராணுவ பயிற்சி அளித்துவரும் கனேடிய துருப்புகள், தேவை எனில் மணி நேரத்தில் போருக்கு தயாராக முடியும் என தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் அடுத்த கட்டத்தை எட்டும் நிலை ஏற்பட்டால் மணி நேரத்தில் பயிற்சியில் இருந்து போருக்கு தயாராக முடியும் என குழுவின் தளபதி கூறியுள்ளார். குட்டி நாடான லாத்வியா, ரஷ்யா மற்றும் பெலாரஸ் நாடுகளுடன் எல்லையை பகிர்ந்து கொள்கிறது. கடந்த 2017 முதல் 540 கனேடிய வீரர்கள் உட்பட 1,500 நேட்டோ இராணுவ … Read more

மறக்க மாட்டோம்… பிரித்தானியாவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா: வெளியான பின்னணி

உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலை குறித்து பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது ரஷ்யா. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உலகப் போராக வெடிக்கும் ஆபத்தை உருவாக்கியுள்ள நிலையில், பிரித்தானியாவை பகிரங்கமாக எச்சரித்துள்ளது ரஷ்யா. போரிஸ் ஜோன்சன் நிர்வாகத்தால் விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளால் ரஷ்யா கடும் அதிருப்தியில் இருப்பதாக உள்நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும், உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நடவடிக்கைகளை ஒருபோதும் ரஷ்யா மறந்துவிடாது எனவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ளார். … Read more

தடை செய்யப்பட்ட பகுதி… மேற்கத்திய நாடுகளுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த புடின்

உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கும் நாடுகள் ரஷ்யாவுடன் போருக்கு தயாரானதாகவே கருதப்படுவார்கள் என்று ஜனாதிபதி புடின் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். பெண் விமானிகளுடனான சந்திப்பு ஒன்றில் சனிக்கிழமை கலந்துகொண்ட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், அவ்வாறான தடை விதிப்பு என்பது, தங்கள் சேவையை முடக்குவதற்கு ஒப்பான ஒன்று என குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பார் என்றால், அடுத்த நொடியே அவர்களும் ரஷ்யாவுக்கு எதிராக போருக்கு … Read more

ரஷ்யா-உக்ரைன் போர்: சமீபத்திய முக்கிய தகவல்கள்…

ரஷ்யா மீதான மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் ஏறக்குறைய ஒரு போர்ப் பிரகடனம் என்றும், உக்ரைன் மீது பறக்கக் கூடாத வலயத்தை விதிக்கும் எவரும் மோதலில் நுழைந்ததாகக் கருதப்படும் என்றும் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். மரியுபோல் துறைமுகத்தில் பல நாட்கள் தாக்குதல் நடத்தப்பட்டுவரும் நிலையில் பிறகு பொதுமக்கள் தப்பிக்க அனுமதிக்கும் வகையில் ரஷ்யா போர்நிறுத்தத்தை அறிவித்தது. அதனுடன் அருகிலுள்ள வோல்னோவாகா நகரத்திலும் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனால் மரியுபோலில் உள்ள அதிகாரிகள் ரஷ்யர்கள் போர்நிறுத்தத்தை மீறி தொடர்ந்து ஷெல் … Read more

பிரித்தானிய பத்திரிகையாளர்கள் மீது ரஷ்ய இராணுவம் சரமாரி துப்பாக்கிச்சூடு! வெளியான பரபரப்பு வீடியோ

உக்ரைனில் பணிபுரியும் ஐந்து பேர் கொண்ட ஸ்கை நியூஸ் குழுவினர் மீது ரஷ்ய இராணுவ வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளது. மார்ச் 28-ஆம் திகதி திங்கட்கிழமையன்று உக்ரைன் தலைநகர் கீவில் இந்த சம்பவம் நடந்தது. பிரித்தானியாவைச் சேர்ந்த ஸ்கை நியூஸின் தலைமை நிருபர் ஸ்டூவர்ட் ராம்சே தனது குழுவினரை அழைத்துக்கொண்டு கீவ் நோக்கி சென்றபோது, திடீரென அவர்களது காரின் மீது தோட்டாக்கள் பாய்ந்தன. அவர்கள் அனைவரும் கவச உடைகளை அணிந்திருந்தனர். இருப்பினும் இந்த சம்பத்தில் … Read more