கார்கிவ் நகரில் களமிறங்கியுள்ள ரஷ்ய படை! ரஷ்யா-உக்ரைன் தொடர்பிலான சமீபத்திய முக்கிய செய்திகள்

உக்ரைன்-ரஷ்யா இடையே இன்று தொடர்ந்து ஏழாவது நாளாக போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனின் இரண்டாவது முக்கிய நகரமான கார்கிவில் ரஷ்ய வான்குடை மிதவை படையினர் (Paratroopers) பாராசூட் மூலம் தரையிறங்கி தொடர்ந்து தாக்குதல் நடத்திவருகின்றனர். ‘கார்கிவில் இன்னும் பீரங்கி குண்டுகள் தாக்காத பகுதிகள் எதுவும் இல்லை’ என உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். ரஷ்யா ஏவுகணை மற்றும் துப்பாக்கிச்சூடு தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில், உக்ரைன் பிரதான தொலைக்காட்சி சமிக்ஞை கோபுரம், கீவின் மேற்கே ஒரு நகரத்தில் … Read more

சுவிட்சர்லாந்து தடைகள் விதித்ததால் உடனடியாக பழிக்குப் பழி வாங்கிய ரஷ்யா

ரஷ்யா மீது தடைகள் விதித்த சுவிட்சர்லாந்தை உடனடியாக பழி வாங்கியுள்ளது அந்நாடு. ஆம், சுவிட்சர்லாந்தின் Zug மாகாணத்தில், Nord Stream 2 pipeline அலுவலகம் அமைந்துள்ளது. அதாவது, ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்வதை பொறுப்பேற்றுள்ள அலுவலகம் சுவிட்சர்லாந்திலுள்ள Zug மாகாணத்தில்தான் அமைந்துள்ளது. Nord Stream 2 pipeline நிறுவனம், ரஷ்ய எரிபொருள் ஜாம்பவானான Gazprom என்னும் நிறுவனத்துக்கு சொந்தமானதாகும். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது தடைகள் விதித்தன. … Read more

கைப்பற்றிவிட்டோம்! ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் தொடர்ந்து 7வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி 24 அன்று, ரஷ்யா உக்ரைனில் ஒரு சிறப்பு இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இந்நிலையில், உக்ரைனின் கெர்சன் நகரை ரஷ்ய இராணுவ படைகள் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ரஷ்யா பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.  ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Igor Konashenkov கூறியதாவது, கெர்சன் நகரில் உணவு … Read more

உக்ரைன் தலைநகரை நெருங்கும் ரஷ்யப் படை: தப்புவதற்காக மக்கள் மேற்கொண்ட கடைசி நேர நடவடிக்கை

உக்ரைன் தலைநகரை ரஷ்ய இராணுவத்தின் பிரிவு ஒன்று நெருங்குவதை அறிந்து மக்கள் ரயிலில் ஏறித் தப்ப முயல்வதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு உக்ரைன் தலைநகர் Kyivஇல், குடியிருப்புப் பகுதிகளில் வான்வெளித்தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், ரஷ்ய இராணுவத்தின் ஒரு முழு பிரிவு, சுமார் 15,000 இராணுவ வீரர்கள் கொண்ட இராணுவப் பிரிவு ஒன்று நெருங்குவதாக தகவல் கிடைத்துள்ளது. அத்துடன், தென் கிழக்கு திசையிலிருந்து மற்றொரு படைப்பிரிவும் Kyivஐ நெருங்குவதாகவும், உக்ரைன் தலைநகரை சுற்றி வளைப்பது அதன் திட்டம் … Read more

திருநங்கையாக மாறிய மகனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர்! நெகிழ வைத்த சம்பவம்

தமிழகத்தில் திருநங்கை ஒருவருக்கு அவரது பெற்றோரே மஞ்சள் நீராட்டு விழா நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. விருத்தாசலம் இந்திராநகரில் வசிக்கும் கொளஞ்சி-அமுதா தம்பதியினர் மகன் நிஷாந்த் (21). டிப்ளமோ கேட்டரிங் முடித்துள்ள நிஷாந்த்துக்கு, உடலில் மாற்றங்கள் தெரிந்துள்ளது, இதை பெற்றோரிடம் கூற அவர்கள் கண்டித்துள்ளனர். இதனால் வீட்டை விட்டு வெளியேறி திருநங்கைகளிடம் தஞ்சமடைந்தார், அங்கு சென்ற நிஷாந்தின் பெற்றோர் அவரை சமாதானம் செய்து அழைத்து வந்தனர். அவரது பெயரை நிஷா என மாற்றியதுடன், உறவினர்களை அழைத்து மஞ்சள் … Read more

தொடங்கியது புதுமாதம்! இந்த ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமாம்! இன்றைய ராசிப்பலன்

2022 ஆம் ஆண்டின் மூன்றாவது மாதத்தில் நுழைந்துள்ளோம். இந்த மாதத்தில் நிறைய கிரக பெயர்ச்சிகள் நடக்கவுள்ளன. ஒவ்வொரு மாதமும் பலன்கள் வேறுபடும். அந்த வகையில் மார்ச் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. அந்தவகையில் இன்றைய நாள் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிக்காரர் யார் என்பதை இங்கே பார்பபோம். உங்களது ராசிப்பலனை இன்றே உடனே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW          … Read more

எதற்கும் தயார்… ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளிப்படை

அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை முன்னெடுத்துவரும் நிலையில், சீனா மற்றும் பெலாரஸ் நாடுகள் மட்டும் ரஷ்யாவை இதுவரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன. ஆனால் பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்கா மற்றும் கனடா, மெக்சிக்கோ நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிராக தமது … Read more

முதலில் உக்ரைன்… மேலும் நான்கு நாடுகளுக்கு குறி வைக்கும் ரஷ்ய ஜனாதிபதி புடின்

உக்ரைன் மீதான தாக்குதல் முறியடிக்கப்படாமல் போனால் மேலும் நான்கு நாடுகளுக்கு ரஷ்ய ஜனாதிபதியால் ஆபத்து என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய படையெடுப்புக்கு உக்ரைன் சரணடைந்தால் ஜனாதிபதி விளாடிமிர் புடின் இனி ராட்சத பலத்துடன் நடந்து கொள்வார் என உக்ரைன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். ரஷ்ய ஜனாதிபதியின் திட்டம் உக்ரைனில் வெற்றிபெற்றால், அடுத்து அவரை எந்த உலக சக்திகளாலும் கட்டுப்படுத்த முடியாது எனவும், அவரது அடுத்த குறி போலந்து, லாத்வியா, லிதுவேனியா, எஸ்தோனியா ஆகிய நான்கு … Read more

5,000 கடந்த ரஷ்ய துருப்புகளின் பலி எண்ணிக்கை… உக்ரைனில் இருந்து வெளிவரும் பகீர் தகவல்

மூன்றே நாட்களில் உக்ரைனை கைப்பற்றி, புதிய அரசை நிறுவ இருப்பதாக சூளுரைத்த ரஷ்யாவின் அனைத்து திட்டங்களும் சுக்கலாக நொறுங்கியுள்ள நிலையில், முதல் நான்கு நாட்களில் பலியான ரஷ்ய துருப்புகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது. ரஷ்யா திட்டமிட்டது போன்று உக்ரைனில் நிலைமை கட்டுக்குள் இல்லை என்பது மட்டுமின்றி, மூன்றே நாட்களில் உக்ரைன் தலைநகரை கைப்பற்றி, தற்போதைய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பதவியை பறித்து, ரஷ்யாவுக்கு ஆதரவான ஒருவரை ஜனாதிபதியாக நியமிக்கவே புடின் திட்டமிட்டிருந்தார். ஆனால் எதிர்பாராதவகையில் உக்ரைன் ராணுவத்தின் எதிர்தாக்குதலில் ரஷ்யாவின் … Read more

ரஷ்யாவுக்கு எதிராக முழுமையான பொருளாதார போரை பிரகடனம் செய்தது பிரான்ஸ்!

உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யாவுக்கு எதிராக முழுமையான பொருளாதா மற்றும் நிதிப் போரை பிரான்ஸ் பிரகடனம் செய்துள்ளது. உக்ரைன் போர் தொடுத்து வரும் ரஷ்யா மீது, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் மிகவும் பயனுள்ளவை என்பதை நிரூபித்து வருகின்றன என பிரான்ஸ் நிதியமைச்சர் Bruno Le Maire விவரித்துள்ளார். மேலும், நாங்கள் ரஷ்யா மீது ஒரு முழுமையான பொருளாதார மற்றும் நிதிப் … Read more