லைவ் அப்டேட்ஸ்: 256 உக்ரைன் வீரர்கள் ரஷியாவிடம் சரண்

18.05.2022 18:00: ஐரோபிய நாடுகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அந்த நாடுகளின் தூதர்களை ரஷியா வெளியேற்றி வருகிறது. அந்த வகையில் பிரான்ஸ் நாட்டின் 34 தூதரக அதிகாரிகளையும், இத்தாலியின் 24 தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றுகிறது.  16:30: உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை என ரஷிய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர்  திமித்ரி பெஸ்கோவ் கூறி உள்ளார். உக்ரைன் தரப்பில் பேச்சுவார்த்தை நடத்துபவர்களுக்கு, இந்த செயல்முறையைத் தொடர முழு விருப்பம் இல்லை எனவும் அவர் கூறினார்.  … Read more

இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படங்களை தயாரிப்போருக்கு ஊக்கத் தொகை- மத்திய மந்திரி அறிவிப்பு

கேன்ஸ்: பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் கேன் திரைப்பட விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார்.  அப்போது இந்தியாவில் திரைப்படம் எடுப்பது, இந்தியாவுடன் இணைந்து கூட்டாக வெளிநாட்டுப் படங்களை எடுப்பதை ஊக்குவிப்பது ஆகியவை தொடர்பாக  2 திட்டங்களை அவர் அறிவித்தார். இந்திய ஊடகம் மற்றும் பொழுபோக்குத் தொழில்துறையின் வாய்ப்புகளை பயன்படுத்தும் விதமாக இந்த இரண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி வெளிநாட்டுப் படங்களை இந்தியாவுடன் இணைந்து … Read more

கண் ஆரோக்கியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்- குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

ஊட்டி: ஊட்டியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற  குடியரசு துணைத் தலைவர் வெங்கையாநாயுடு, அங்குள்ள ஆளுநர் மாளிகையிலிருந்து காணொலி காட்சி மூலம் தனியார் நிறுவன கண்விழி ஆய்வு நிறுவனத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கண் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும் என்றார். இதற்கான ஊடக பிரச்சாரத்தில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆளுமைகளை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். பார்வை குறைபாடு என்பது தவிர்க்கபடக் கூடியதும், குணப்படுத்தக் … Read more

மகன் இறந்தது தெரியாமல் மாயமானதாக போலீசில் புகார் அளித்த தந்தை

பெங்களூரு: பெங்களூரு வித்யரண்யபுராவில் வசித்து வருபவர் சதீஷ். இவரது மகன் சந்தோஷ்குமார் (வயது 15). இவன் அந்தப்பகுதியில் தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் சந்தோஷ் மோட்டார் சைக்கிளில் சககாரநகருக்கு சென்றுவிட்டு வித்யரண்யபுரா நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தான். அப்போது வித்யரண்யபுரா ஜி.கே.வி.கே. சாலையில் வந்தபோது சந்தோசின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தடுப்பு சுவரில் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சந்தோஷ் பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தான். … Read more

ஐபிஎல் கிரிக்கெட்- கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னோ அணி திரில் வெற்றி

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நவி மும்பை டி.ஒய் பாட்டில் மைதானத்தில் நடைபெற்ற 66-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே எல் ராகுல் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கேப்டன் கே எல் ராகுல் – குயின்டன் டி காக் ஜோடி ஆரம்பம் முதலே எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தது.. இந்த சீசனில் … Read more

பள்ளி பாடப்புத்தகத்தில் பகத்சிங் குறித்த பாடத்தை நீக்கியதற்கு குமாரசாமி கண்டனம்

பெங்களூரு: முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- நாட்டின் மிகப்பெரிய தேசபக்தர், ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த பகத்சிங்கின் வாழ்க்கை வரலாற்றை பள்ளி பாடப்புத்தகத்தில் இருந்து இந்த அரசு நீக்கியுள்ளது. இதை கண்டிக்கிறேன். அதற்கு பதிலாக ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ஹெடகேவார் குறித்த வரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. பாடப்புத்தகங்களை கட்சி புத்தகங்களாக மாற்ற நடைபெறும் சதியை கண்டிக்கிறேன். ஆபரேஷன் தாமரை மூலம் கர்நாடகத்தில் முறைகேடான வழியில் ஆட்சிக்கு வந்து தங்களை தேசப்பக்தர்கள் என்று கூறிக்கொள்பவர்களால் … Read more

உண்மை, நியாயம் மட்டுமே எங்களுக்கு வலிமையை கொடுத்தது- விடுதலைக்குப் பின் பேரறிவாளன் பேட்டி

ஜோலார்பேட்டை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை கேட்டதும் பேரறிவாளன் குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தன் விடுதலையை கொண்டாடிய பேரறிவாளன். பேரறிவாளன் விடுதலைக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நன்றி தெரிவித்தார். பேரறிவாளன் விடுதலைக்காக 31 ஆண்டு காலம் … Read more

கேரளாவில் மழை நீடிப்பு- 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலைகொண்டிருந்த சூறாவளி தற்போது கேரளா நோக்கி நகர்ந்து வருவதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதையடுத்து கேரளாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை அடுத்த 3 நாட்களுக்கு பெய்யும் என்று கூறப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கேரளாவில் உள்ள பாலக்காடு, திருச்சூர், மலப்புரம், வயநாடு, கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதுபோல கேரள கடல் பகுதியிலும் … Read more

அதிரடியாக ஆடிய குவின்டன் டி காக்- கொல்கத்தாவுக்கு 211 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ

மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜியான்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை டாக்டர் டிஒய் பாட்டில் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் லக்னோ அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால், முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 210 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக குவின்டன் டி காக் 70 பந்துகளில் பத்து 6, 10 … Read more

மெட்ரோ ரெயிலில் வெட்டிங் போட்டோ ஷூட்- கொச்சி நிர்வாகம் அனுமதி

இரு மனங்கள் இணையும் திருமணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கியமான தருணமாக அமைகிறது. அப்படிப்பட்ட தருணம் அந்நாளில் மட்டும் இல்லாமல் காலத்திற்கும் நினைவுக்கூரும் மகிழ்ச்சியூட்டும் நினைவுகளாக நமக்கு அமைத்து தருவது புகைப்படங்கள் மட்டுமே. திருமண நிகழ்வுகளில் தற்போது புகைப்படங்கள் முக்கிய பங்காற்றி வருகிறது. சமீப காலமாக வெட்டிங் போட்டோஷூட் டிரெண்டாகி வருகிறது. முன்பெல்லாம் திருமணம் அன்று மட்டுமே புகைப்படங்கள் எடுப்பார்கள். தற்போது, ப்ரீ வெட்டிங்- போஸ்ட் வெட்டிங் உள்பட பல்வேறு திருமண நிகழ்வுகளையும் படம்பிடிக்கும் வெட்டிங் போட்டோஷூட்டிங் மணமக்கள் … Read more