இமாச்சலப் பிரதேச மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கான எண்ணம் இல்லை: ஜெ..பி. நட்டா

‘நான் ஒரு பொறுப்பான பதவியில் இருக்கிறேன்.’ “எனவே, இமாச்சலப் பிரதேசத்தில் மாநில அரசியலுக்குத் திரும்புவதற்கான சாத்தியக்கூறு இல்லை” என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ..பி. நட்டா கூறியுள்ளார். பாஜக-வின் ஹிமாச்சல் உட்பட பல மாநில பிரிவுகளுக்கான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறை விரைவில் தொடங்க உள்ளது. மாநில தலைவர்கள் நியமிக்கப்பட்ட பிறகு, நட்டாவிற்கு பதிலாக அடுத்த தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் செயல்முறை தொடங்கும் என்று தெரிகிறது. இதற்கிடையில், நாட்டிலேயே காங்கிரஸ் அரசுகளில் இமாச்சலப் பிரதேசம் மிகவும் ஊழல் நிறைந்த … Read more

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவில் பெரும் சேதம்… 3 பேர் மரணம்…

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவுகள் பேரழிவை ஏற்படுத்தின, குறைந்தது மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் வீடுகளும் சேதமடைந்தன. இந்த நிலச்சரிவால் ஏற்பட்ட பெரும் பாதிப்பை அடுத்து மாநிலத்தின் முக்கியமான தேசிய நெடுஞ்சாலையான ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ராம்பனின் தரம்குண்ட் பகுதியில் உள்ள பாக்னாவில் ஏற்பட்ட மேக வெடிப்பின் தாக்கத்தில் வீடு இடிந்து விழுந்ததில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் இறந்ததை உறுதிப்படுத்திய அதிகாரிகள், திடீர் வெள்ளம் மற்றும் மண் … Read more

328 அடி அகல பள்ளம்… செவ்வாய் கிரகத்தின் அண்டர்வேர்ல்டு கேட்-வேவை கண்டுபிடித்த நாசா… ஏலியன்கள் இருப்பதற்கு வாய்ப்பு ?

செவ்வாய் கிரகத்தில் ஒரு பெரிய மர்ம பள்ளத்தை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 328 அடி அகலமுள்ள இப்பள்ளம் ‘ஏலியன்’ எனப்படும் வேற்றுகிரகவாசிகளின் நிலத்தடி உலகிற்கான “வாயில்” என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இத்தனை அகலமான இந்தப் பள்ளம் தோன்றியதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும், ஒரு விண்கல் தாக்கத்தால் இது உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். செவ்வாய் கிரகத்தின் தீவிர வெப்பநிலை மற்றும் மேற்பரப்பு அளவிலான கதிர்வீச்சு மனித வாழ்க்கைக்கு எளிதில் தீங்கு … Read more

பெங்களூரு விமான நிலையத்தில் வேன் – விமானம் மோதல்

பெங்களூரு பெங்களூரு விமான நிலையத்தில் விமானம் மீது வேன் ஒன்று மோதி உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் பெங்களூரு அருகே உள்ள தேவனஹள்ளியில் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், ஊழியர்களை கொண்டு சென்று விடவும், அங்கிருந்து அழைத்து வரவும் வேன் பயன்படுத்தப்படுகிறது. விமான நிலையத்தில் நேற்று பகல் 12.15 மணிக்கு விமான நிலைய ஊழியர்களை அழைத்து வரும் வேன் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட பகுதியில் சென்றபோது அங்கு வாகன நிறுத்த (பார்க்கிங்) பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இண்டிகோ … Read more

மராத்தியர்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநில நலனுக்காக ஒரே கட்சியாக செயல்பட வேண்டும் என்ற ராஜ் தாக்கரே பேச்சுக்கு சுப்ரியா சுலே வரவேற்பு

மராத்தியர்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநில நலனுக்காக ஒரே கட்சியாக செயல்பட வேண்டும் என்ற ராஜ் தாக்கரே பேசியுள்ளதற்கு சுப்ரியா சுலே வரவேற்பு தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவுக்காக உத்தவ் தாக்கரேவும் ராஜ் தாக்கரேவும் ஒன்றுபட்டால், அதை நாங்கள் முழு மனதுடன் வரவேற்போம் என்று தேசியவாத காங்கிரஸ் எம்பி சுப்ரியா சுலே கூறியுள்ளார். ‘மகாராஷ்டிரா எல்லாவற்றிற்கும் மேலானது’ என்று சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் தனித்தனியாக கூறியது … Read more

நடிகர் அர்ஜுனின் இளைய மகளுக்கு இத்தாலிய இளைஞனுடன் நிச்சயதார்த்தம்!

பிரபல நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா, இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவரை மணக்கப் போகிறார். அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா, 25, இத்தாலியைச் சேர்ந்த எஷாயுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். நிச்சயதார்த்த புகைப்படங்களை அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார். இத்தாலியின் லேக் கோமோவில் அஞ்சனாவும் எஷாயும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். அஞ்சனா ஒரு கலைஞர் மற்றும் ஆடை வடிவமைப்பாளரும் கூட. எஷாய் இத்தாலியில் ஒரு பொழுதுபோக்கு தொழில்முனைவோர் என்று கூறப்படுகிறது. அஞ்சனாவும் எஷாயும் கடந்த 13 … Read more

ராஜஸ்தான் மற்றும்  டெல்லிக்கு சிறப்பு ரயில் சேவை

திருநெல்வேலி ராஜஸ்தான் மற்றும் டெல்லிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்ம் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில். ”மதுரையில் இருந்து பகத் கி கோதி செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06067) ஏப்ரல் 21, 2025 அன்று (நாளை) காலை 10.45 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். மறுமார்க்கத்தில் ராஜஸ்தான் பகத் கி கோதியில் இருந்து மதுரை செல்லும் சிறப்பு ரயில் (வண்டி எண்: 06067) ஏப்ரல் 21, 2025 அன்று (நாளை) … Read more

நாங்குநேரி மாணவர் மீது தாக்குதல் : இருவர் கைது

நாங்குநேரி நாங்குநேரியை சேர்ந்த மாணவர் சின்னத்துரை மீது தாக்குதல் நடத்தியதாக இருவர் /கைது செய்யப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சின்னத்துரை. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 படித்துக் கொண்டிருந்தபோது சக மாணவர்களால் அரிவாளால் வெட்டப்பட்டு தாக்குதலுக்கு ஆளான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. கல்லூரியில் படித்து வரும் அவர், மீண்டும் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர்,  திருமண அழைப்பிதழ் தரவேண்டும் என … Read more

நேற்று முதல் கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கன்னியாகுமரி நேற்று முதல் கன்னியாகுமரி கண்ணாடி நடை பாலத்தில்  சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது/ கன்னியாகுமரியில் கடலின் நடுவே ஒரு பாறையில் திருவள்ளுவர் சிலையும் மற்றொரு பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அமைந்துள்ளன. அண்மையில் விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலைக்கு செல்ல கடலின் நடுவே கண்ணாடி நடை பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கண்ணாடி நடை பாலத்தில் பராமரிப்பு பணிகளை நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் கடந்த 15-ந் தேதி தொடங்கினர். எனவே இந்த பாலத்தில் சுற்றுலா பயணிகள் … Read more

திருநெல்வேலி மாவட்டம், முறப்பநாடு, கைலாசநாதர் ஆலயம்.

திருநெல்வேலி மாவட்டம், முறப்பநாடு, கைலாசநாதர் ஆலயம். திருவிழா: திருவாதிரை, சிவராத்திரி, பிரதோஷம், மாதபிறப்பு நாட்கள் மற்றும் குருப்பெயர்ச்சி. தல சிறப்பு: இத்தலம் நவகைலாயங்களில் ஐந்தாவது தலமாம். இது வியாழன் தலமாகும். இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. பொது தகவல்: பிரகாரத்தில் சூரியன், அதிகார நந்தி, ஜுரதேவர், சப்தகன்னி, நாயன்மார், பஞ்சலிங்கம், கன்னிவிநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், சனீஸ்வரர் ஆகியோரும் உள்ளனர். பிரார்த்தனை: … Read more