திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல இலவச பேருந்துகளை இயக்குகிறது கோவில் நிர்வாகம்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பக்தர்கள் பவுர்ணமி அன்று கிரிவலம் செல்லும் வசதியாக  கோவில் நிர்வாகம்  சார்பில் இலவச ஏசி பேருந்து இயக்கப்படுகிறது. ஏற்கனவே முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கிரிவலம் செல்ல என்எல்சி நிறுவனம்  இலவசமான பேருந்து வழங்கியது. அது பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், தற்போது, அண்ணாமலையார் கிரிவலம் செல்ல முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி 14 கிலோமீட்டர் கிரிவலம் செல்ல ஏதுவாக NLC இந்தியா நிறுவனத்தின் சார்பில் முதல் பேருந்து அண்ணாமலையார் கோவிலுக்கு ரூபாய் 50 லட்சம் … Read more

பரபரக்கும் அறிவாலயம்: தேர்தலில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கியவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தி வருகிறார். இதனால்,  திமுக தலைமையகமான  அண்ணா அறிவாலயம் கட்சியினரின் கூட்டத்தில் பரபரப்பாக காணப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுஉள்ளது. இந்த தேர்தலில்  தி.மு.க. தலைமையிலான ஒரு அணி, அ.தி.மு.க. தலைமையிலான ஒரு அணி, நடிகர் விஜய்யின் த.வெ.க., நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி  ஏற்பட்டுள்ளது. மேலும் கூட்டணி கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு … Read more

80% பெண்கள் திமுகவுக்கே வாக்கு – அ.தி.மு.க. ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கம் இருந்தது! அமைச்சர் ரகுபதி…

சென்னை: 80% பெண்கள் திமுகவுக்கே வாக்களிப்பார்கள் என்றும்,  தமிழ்நாட்டில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியிலும் போதைப்பொருள் புழக்கம் இருந்தது திமுக அமைச்சர் ரகுபதி பதில் தெரிவித்துள்ளார். அவரது கருத்து விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கும் போதை கலாச்சாரத்தால், மாநிலம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற சட்ட விரோத செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனால், போதை கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் திமுக அரசை … Read more

போர் நீடிக்கும் அபாயம் காரணமாக வாரத்திற்கு 4 நாள் வேலை… இலங்கை அரசு அறிவிப்பு

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் நீண்ட காலம் தொடரும் அபாயம் இருப்பதால், எரிபொருளைச் சேமிக்க இலங்கை அரசு முக்கிய முடிவு எடுத்துள்ளது. இதன்படி, அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலக எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹார்முஸ் நீர்வழிச் சாலை மூடப்பட்டதையடுத்து எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் அவசிய சேவைகள் ஆணையர் ஜெனரல் பிரபாத் சந்திரகீர்த்தி கூறுகையில், புதன்கிழமை … Read more

“காலாண்டு அறிக்கை அவசியமில்லை”… அமெரிக்கப் பங்குச்சந்தையில் பெரிய மாற்றம்…

அமெரிக்காவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் (Securities and Exchange Commission – SEC), நிறுவனங்கள் வெளியிடும் நிதி அறிக்கைகளில் முக்கிய மாற்றம் செய்யும் திட்டத்தைத் தயாரித்து வருகிறது. தற்போது காலாண்டு அடிப்படையில் ஆண்டுக்கு நான்கு முறை நிதி அறிக்கைகள் வெளியிடும் நடைமுறை உள்ளது. இதை மாற்றி, ஆண்டுக்கு இரண்டு முறை மட்டும் அறிக்கைகள் வெளியிடும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்படலாம். இந்த மாற்றத்திற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் SEC தலைவர் பவுல் அட்கின்ஸ் … Read more

வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன? தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல்

சென்னை:  தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அன்று வாக்களிக்க தேவையான ஆவணங்கள் என்னென்ன?  என்பதுகுறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்  தெரிவித்துள்ளார். அதன்படி, ஆதார் அட்டை உள்பட   13 அடையாள ஆவணங்கள் தகுதியானவை என குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக  தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி,  ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) அன்று தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை மே 4 (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அன்றைய தினம் மதியமே ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்பது தெரிய வரும். … Read more

உதயகுமாரும், எடப்பாடியும் அ.தி.மு.கவை குழிதோண்டி புதைத்து விட்டார்கள்! திமுக கூட்டத்தில் ஓபிஎஸ் காட்டம்…

தூத்துக்குடி: உதயகுமாரும், எடப்பாடி பழனிசாமியும் மண்வெட்டியை எடுத்து அ.தி.மு.கவை குழிதோண்டி புதைத்து விட்டார்கள். “ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தியவர்தான் எடப்பாடி பழனிசாமி!”  என சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓபிஎஸ், தனக்கு வாழ்வு கொடுத்த அதிமுகவையும், அதன் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுகவில் இருந்து எடப்பாடியால்  நீக்கப்பட்ட ஓபிஎஸ், மீண்டும் அதிமுகவில் சேர முயற்சித்த நிலையில், அவரை  இறுதிவரை சேர்க்க எடப்பாடி உள்பட அதிமுக தலைவர்கள் ஆர்வம் காட்வில்லை. இதனால், அரசியல் அனாதையான ஓபிஎஸ், சமீபத்தில், … Read more

காபூலில் உள்ள மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் தாக்குதல்! 400 பேர் பலி, 250 பேர் காயம்…

காபூல்: பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே மோதல் நடைபெற்று வரும் நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மீது  பாகிஸ்தான் திடீர் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் குறைந்த பட்சம் 400 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 250 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையே மோதல் நீடித்து வரும் நிலையில் ஆப்கானிஸ்தான் தலைநகர்  காபூலில் உள்ள ஒரு மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் … Read more

அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை! பேசியது என்ன?

சென்னை: அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசியல் கட்சகிள் சார்பில், பல்வேறு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது. அதை கட்சி தலைவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கினர். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை  இந்திய தேர்தல் ஆணையம்  மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது. அதன்படி, மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.   ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி … Read more

மேற்குவங்க மாநில தலைமைச்செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் அதிரடி நீக்கம்! தேர்தல் ஆணையம் நடவடிக்கை

டெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில், அம்மாநில  தலைமைச்செயலாளர் மற்றும் உள்துறை செயலாளர் அதிரடியாக நீக்கம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.  தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் ஆணையம் ஏப்ரல் 15ந்தேதி அன்று மாலை வெளியிட்டது. அதன்படி, மேற்குவங்க மாநிலத்தில் இருகட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேலும்,   வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற இருக்கிறது.  இந்த நிலையில், … Read more