கபில்தேவின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா இன்று தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார் முதல் இன்னிங்ஸ் முடிவில் 228 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். … Read more

காங்கிரஸ் கட்சியின்  தேர்தல் வியூக நிபுணராக பிரசாந்த் கிஷோரின் ‘முன்னாள்’ உதவியாளர் சுனில் கானுகோலு நியமனம்!

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிபுணராக பிரசாந்த் கிஷோரின் ‘முன்னாள்’ உதவியாளர் சுனில் கானுகோலு நியமிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலையொட்டி, தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூங்களை வகுக்கும் வகையில் கனுகோலு நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுகவின் பெரு வெற்றிக்கு வியூகம் அமைத்தவர் அரசியல் சாணக்கியன் என கூறப்படும் பிரசாந்த் கிஷோர். இவர் ஏற்கனவே பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, நிதிஷ்குமார், ஆந்திராவின் … Read more

#ஈ.விகே.சம்பத் #ஆர்.வி.சுவாமிநாதன் #சோ.அழகர்சாமி! கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

#ஈ.விகே.சம்பத் #ஆர்.வி.சுவாமிநாதன் #சோ.அழகர்சாமி நெட்டிசன் திமுக செய்தி தொடர்பாளர்  – கே.எஸ்.ராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு ———————————— இன்று காலை நடை பயணம் செல்லும்போது ஈவிகே சம்பத் அவர்களுடைய பிறந்தநாள் என்றும், நெருக்கமாக இருந்து, அவருக்கு எதிராகவே சட்டமன்றத்தில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான கோவில்பட்டி சோ.அழகிரிசாமி அவர்களின் நினைவு நாள், அத்தோடு மத்திய முன்னாள் அமைச்சர் ஆர்.வி.சுவாமிநாதன் (ஆர்விஎஸ்) நினைவெல்லாம் நினைவுக்கு வந்தது. காமராஜர் காலத்தில், நாங்களெல்லாம் அரசியலில் இருந்தபொழுது, ஈவிகே சம்பத் அவர்களோடு … Read more

கத்தார் கல்லறையில் பழமையான முத்து கண்டுபிடிப்பு

தோஹா:  கத்தார் கல்லறையில் 6,500 ஆண்டுகள் பழமையான முத்து மணியைத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் எட்டு மாதங்களுக்கு நடைபெறவுள்ள ஃபிஃபா 2022 உலகக் கோப்பையின் தொகுப்பாளராக இருக்கும் தீபகற்ப நாட்டின் முத்து-டைவிங் வரலாற்றில் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. கத்தார் அருங்காட்சியகங்களின் அகழ்வாராய்ச்சி மற்றும் தள நிர்வாகத்தின் தலைவரான ஃபெர்ஹான் சாகல் தலைமையிலான உள்ளூர் அகழ்வாராய்ச்சி பணி, தீபகற்பத்தில் உள்ள ஆரம்பக்கால மனித குடியிருப்புகளுக்கு ஒத்த பழமையான இயற்கை முத்து மணிகளை கத்தாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிமு 4600 தேதியிட்ட இந்த முத்து,  நாட்டின் பழமையான கற்கால தளங்களில் ஒன்றான வாடி அல் டெபாயனில் உள்ள கல்லறைக்குள் … Read more

சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ் ஓபிஎஸ் அதிரடி

சென்னை: சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ் தம்பி ராஜா உள்பட 3 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக  அதிமுக ஒருங்கிப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிவித்து உள்ளனர். மற்றொரு அறிக்கையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக போட்டியிட்ட 10 அதிமுகவினரை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளனர். இன்னொரு அறிக்கையில்,  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது அதிமுகவுக்கு எதிராகவும், திமுகவுக்கு ஆதரவாகவும் செயல்பட்ட தேனி மாவட்டத்தைச் சேர்ந்த  அதிமுக நிர்வாகிகள் 23 பேர் … Read more

உக்ரைனில் இருந்து வரும் மருத்துவ மாணவர்கள் எஃப்எம்ஜிஇ தேர்வை முடித்தால் இன்டர்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம்!

டெல்லி: உக்ரைனில் இருந்து வரும் மருத்துவ மாணவர்கள் இன்டர்ன்ஷிப் முடிக்காமல் இருந்தால், அவர்கள் எஃப்எம்ஜிஇ தேர்வை (FMGE/Foreign Medical Graduates Examination /வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி களுக்கான தேர்வு) எழுதி தேர்ச்சி பெற்றால், அவர்கள் இந்தியாவில் இன்டர்ன்ஷிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ கவுன்சில் அறிவித்து உள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக வெளிநாடுகளில் மருத்துவம் படித்து வந்த பல ஆயிரக்கணக்கான மாணவர்கள், மருத்துவ படிப்பினை தொடர்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. இறுதியாண்டு வரை பலர் படித்து … Read more

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியால் ரூ.564 கோடி மோசடி: கோஸ்டல் எனர்ஜி நிறுவன நிர்வாகி கைது…

சென்னை: தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதியால் ரூ.564 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளதால், பிரபல நிலக்கரி இறக்குமதி நிறுவனமான  கோஸ்டல் எனர்ஜி நிறுவன நிர்வாகியை அமலாக்கத் துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தியாவின் முன்னணி நிலக்கரி இறக்குமதி நிறுவனங்களில் கோல்டன் குரூப்பும் ஒன்று. இந்த நிறுவனம், கோஸ்டல் எனர்ஜன், கோஸ்டல் எனர்ஜி அன்டு ரிசோர்சஸ் என பல பெயர்களில்  நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாகியாக அகமது ஏ.ஆர் புகாரி என்பவர் இருந்து … Read more

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கும்,   2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் நடப்பாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் இறுதியில் தொடங்க வாய்ப்பு உள்ளது. இதையொட்டி, வணிகர் சங்கங்கள், தொழில் பிரிவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களுடன் அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் கருத்துக்களை கேட்டு வருகிறார். மேலும், துறை … Read more

தலைமையை மீறிப் போட்டியிட்டு வென்ற திமுகவினரைப் பதவி விலக முதல்வர் வலியுறுத்தல்

சென்னை திமுக தலைமையை மீறி தோழமைக் கட்சிகளுக்கு எதிராகப் போட்டியிட்டு வென்ற திமுகவினர் பதவி விலக வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி வாகை சூடி உள்ளது.  இந்த தேர்தலில் திமுக தனது தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் ஒரு சில திமுகவினர் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்  தற்போது அவர்கள் மீண்டும் திமுகவில் இணையத் தொடங்கி உள்ளனர்.   இது … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் இப்போதைக்கு முடிய வாய்ப்பில்லை?

கீவ் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே நடந்த 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தையில் போர் நிறுத்தம் குறித்து எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. ரஷ்யப்படைகள் உக்ரைனில் தாக்குதல்கள் தொடங்கி இரண்டாம் வாரத்தை எட்டி உள்ள நிலையில் தெற்கு நகரமான கெர்சனை ரஷ்யா கைப்பற்றி உள்ளது.  தொடர்ந்து 3ஆம் நாளாக கார்கில் நகரில் ரஷ்யப்படைகள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.  உக்ரைன் நாட்டின் தலைநகரை சுற்றி வளைத்த ரஷ்யா அந்நகரை முழுமையாகக் கைப்பற்றவில்லை. கீவ் நகரில் உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குச் … Read more