இன்று ரஷ்ய அதிபருடன் இந்தியப் பிரதமர் பேச்சுவார்த்தை

டில்லி உக்ரைன் மீதான போரை நிறுத்த ரஷ்ய அதிபர் புதினுடன் இன்று இந்தியப் பிரதமர் மோடி பேச உள்ளார். இன்று உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது.  இதையொட்டி ரஷ்ய ராணுவத்தினர் தரை வழி மற்றும் வான் வழி மூலம் அந்நாட்டின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.   நாடெங்கும் ரஷ்ய விமானங்கள் குண்டு மழை பெய்து வருகின்றன.  இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் இரு தரப்பு … Read more

நேரடியாக உக்ரைனுக்குப் படைகளை அனுப்ப முடியாது : நேட்டோ அமைப்பு அறிவிப்பு

நியூயார்க் நேரடியாக உக்ரைனுக்கு நேட்டோ படைகளை அனுப்ப முடியாது என அந்த அமைப்பு அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகெங்கும் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  ரஷ்ய போர் விமானங்களின் குண்டு வீச்சு தாக்குதலால் விமான நிலையங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன.  இதனால் உக்ரைன் நாட்டில் விமான போக்குவரத்து முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது.   இதையொட்டி நேட்டோ அமைப்பின் பொதுச் செயலர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பர்க், “ரஷ்யா உக்ரைன்மீது போர் தொடுத்துள்ளதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.  இது ஐரோப்பியக் கண்டத்தில் … Read more

உக்ரைன் போர் எதிரொலி: தங்கம், கச்சா எண்ணை விலை கிடுகிடு உயர்வு, பங்கு சந்தைகள் சரிவு…

டெல்லி: உக்ரைன் போர் எதிரொலியாக தங்கம், கச்சா எண்ணை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பங்கு சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.   இன்று ஒரேநாளில், இந்தியாவில் தங்கத்தின் விலை . ரூ.864 உயர்ந்து உயர்ந்து புதிய உச்சத்துக்கு சென்றுள்ளது. இது பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி உக்ரைன் மீது, ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது.இந்த தாக்குதலாம் உலக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா உள்பட உலக நாடுகள் கடும் … Read more

இந்த வாரம் சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் கிடையாது! அமைச்சர் மா.சு. தகவல்…

சென்னை: இந்த வாரம் சனிக்கிழமை தடுப்பூசி மெகா முகாம் நடைபெறாது என்றும்,  அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட 2,534 இடங்களில் தினந்தோறும் தடுப்பூசி போடுவதில் மாற்றம் இருக்காது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் அமைந்துள்ள மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக அலுவலகத்தில் நடைபெற்ற பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரூ 1.11 கோடி செலவில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்ட இணை இயக்குனர் நலப்பணிகள் பணியிடங்க ளுக்கான 6 பணி … Read more

ராணுவ கட்டுப்பாட்டில் உக்ரைன்… நாட்டை விட்டு வெளியேற தவிக்கும் மக்கள்…

உக்ரைன் ராணுவம் தனது கையில் உள்ள ஆயுதங்களைக் கீழே போடும் வரை ரஷ்யா-வின் வழியில் குறுக்கிடுபவர்கள் யாராக இருந்தாலும் அதன் விளைவைச் சந்திக்க வேண்டி வரும் என்ற புடினின் போர் அறிவிப்பைத் தொடர்ந்து உக்ரைன் மீது குண்டு மழை பொழியப்பட்டு வருகிறது. மெட்ரோ ரயில் சுரங்கத்தில் தஞ்சமடைந்துள்ள மக்கள் உக்ரைனில் சிவில் சட்டம் முடக்கப்பட்டு நாட்டை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு சென்றுள்ளார் உக்ரைன் அதிபர் ஸிலென்ஸ்கி. ஏ.டி.எம்.களில் வரிசை கட்டி நிற்கும் மக்கள் இதனால் உக்ரைனில் உள்ள … Read more

கர்நாடக ஹிஜாப் போராட்டத்துக்கு இஸ்லாமிய மாணவர் அமைப்பு காரணம்! நீதிமன்றத்தில் பரபரப்பு தகவல்…

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ள ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிஎப்ஐ அமைப்பினர் தலையீடு உள்ளதாகவும், அவர்களின் அச்சுறுத்தல் காரணமாகவே,  முஸ்லிம் மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் கல்லூரியில் போராட தொடங்கினர் என்று உடுப்பி கல்லூரி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணாக்கர்களிடையே ஏற்றத்தாழ்வு, சாதி மத வேறுபாடுகளை களையும் வகையில், சீருடை திட்டம் அமல் படுத்தப்பட்டு உள்ளது. இதனால் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணியவும் … Read more

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இரட்டை சதமடித்த இந்திய வீரர்கள்…

ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை மொத்தம் எட்டு முறை இரட்டை சதம் அடிக்கப்பட்டிருக்கிறது. ஆறு வீரர்கள் இந்த சாதனையை செய்திருக்கின்றனர். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை இரட்டை சதமடித்துள்ளது இந்தியாவின் ரோஹித் சர்மா மட்டுமே இவர் மூன்று முறை இரட்டை சதமடித்துள்ளார். மேலும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இவர் அடித்த 264 ரன்கள் அதிகபட்ச ரன்னாக உள்ளது. இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் 2010 ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் … Read more

மேலும் 1 வாரம் மக்கள் தமிழக அரசின் அலங்கார ஊர்திகளை பார்க்கலாம் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை தமிழக அரசின் 3 அலங்கார ஊர்திகளை மேலும் 1 வாரம் பொதுமக்கள் பார்க்கலாம் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் கடந்த 26ம் ேததி நடந்த குடியரசு நாள் விழாவில் செய்தித் துறை சார்பில் விடுதலைப் போரில்  தமிழகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்தும் வகையில் தமிழக சுதந்திரப் போராட்ட  வீரர்களின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைக்கும் மூன்று அலங்கார ஊர்திகளின்  அணிவகுப்பு நடந்தது. அதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் உள்ள மக்கள்  கண்டுகளிக்கின்ற வகையில் முதல்வர் … Read more

மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது

மும்பை தாதா இப்ராகிம் தொடர்புடைய பண மோசடி வழக்கில் மகாராஷ்டிர மந்திரி நவாப் மாலிக் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிர அமைச்சர் நவாப் மாலிக் தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார்.  இவர் மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாகப் புகார்கள் எழுந்தன.   இவரிடம் இது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்யச் சம்மன் அனுப்பினர். இதையொட்டி இன்று காலை 6 … Read more

விவசாயிகளை கார் ஏற்றிக் கொன்ற விவகாரம் : ராணுவ பாதுகாப்புடன் அமைச்சர் அஜய் மிஸ்ரா வாக்களிப்பு

லக்கிம்பூர் கேரி லக்கிம்பூர் கேரி பகுதியில் விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற விவகாரத்தில் தொடர்புடைஅய் அமைச்சர் அஜய் மிஸ்ரா ராணுவ பாதுகாப்புடன் வந்து வாக்களித்தார். ஏழு கட்டங்களாக நடைபெற்று வரும் உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் இன்று 4 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்துள்ளது.  இன்று வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் லக்கிம்பூர் கேரி மாவட்டமும் ஒன்றாகும்.  இங்கு நடந்த விவசாயிகள் போராட்டத்தின் போது 4 விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டது நினைவிருக்கலாம். இதில் தொடர்புள்ளதாகக் கூறப்படும் மத்திய இணை அமைச்சர் … Read more