பிப்ரவரி 27 ஆம் தேதி தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்

சென்னை வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெறுவதால்  தொடர்ந்து 18 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலையை நமது மாநிலம்  அடைந்துள்ளது.  இதை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளைப் போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதும் மிகவும் இன்றியமையாததாகும். ஆகவே, பெற்றோர்கள் மத்திய மாநில அரசுகள்  ஒவ்வொரு வருடமும் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அமைத்து வருகிறது. தமிழக மருத்துவம் … Read more

ராஜிவ் காந்தி கொலை வழக்கு : சிறையில் உள்ள முருகனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை

வேலூர் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் உள்ள முருகனுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டோர் வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.  இவர்களில் முருகனும் ஒருவர் ஆவார்.  இவர் கடந்த சில வாரங்களாக பல்வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறாப்ப்டுகிறது. அவருக்குச் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  அவர் தமக்கு வலி குறையவில்லை எனத் தெரிவித்து தமக்கு … Read more

செங்கல்பட்டு பாலாறு பாலம் நாளை இரவு திறப்பு! தமிழகஅரசு தகவல்…

சென்னை: சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டிருந்த பாலாறு பாலம் நாளை திறக்கப்பட இருப்பதாக  தமிழகஅரசு  அறிவித்து உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாலாறு பாலம் மழை வெள்ளத்தால் சேதமடைந்தது. இதனால், அந்த பாலன் ஒருவழியாக மட்டுமே சில மாதங்களாக போக்குவரத்து அனுமதிக்கப்பட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பாலம் சீரமைப்பு பணிக்காக, பாலத்தை மூடுவதாக 7ந்தேதி நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, விழுப்புரத்தில் இருந்து சென்னை வரும் வாகனங்கள்,  … Read more

திமுகவில் அதிமுக சங்கமாகி விடும்! அமைச்சர் பெரியசாமி

சென்னை: காலப்போக்கில் திமுகவில் அதிமுக சங்கமாகி விடும் என்று அமைச்சர் பெரியசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சி செய்த அதிமக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. 21 மாநகராட்சிகளையும் இழந்துள்ளதுடன் 90 சதவிகிம் தோல்வியை சந்தித்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை எழுப்பி உள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, காலப்போக்கில் அதிமுக, திமுகவில் சங்கமாகி விடும் என்று கூறினார். … Read more

உத்தரப்பிரதேச 4வது கட்ட தேர்தல்: மதியம் 1 மணி நிலவரப்படி 37.45% வாக்குகள் பதிவாகியுள்ளன

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று நடைபெற்று வரும் 4வது கட்ட தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 37.45% வாக்குகள் பதிவாகி இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச சட்டமன்ற ஆட்சி காலம் 2022ம் ஆண்டு  மே மாதம் 14ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து  அங்கு சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 10, 14, 20, 23, 27 மற்றும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் … Read more

மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல்: திமுக மாவட்டச் செயலாளர்கள் தீவிர ஆலோசனை.

சென்னை: நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 90 சதவிகித வெற்றியை பெற்றுள்ளது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றி சாதனை படைத்து உள்ளது. இதையடுத்து,. மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தல் குறித்து  திமுக மாவட்டச் செயலாளர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை உள்பட பல மாநகராட்சிகளில் மேயர் பதவிகளை பிடிக்க கடுமையான போட்டி நிலவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாட்டில் மொத்தமாக தற்போது 21 மாநகராட்சிகள் இருக்கின்றன. … Read more

“மரியாதையை காப்பாத்திக்க..!” : ஆர்.கே.சுரேஷூக்கு பாலா அறிவுரை

இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோ தயாரிப்பில் ஆர்.கே.சுரேஷ் முதன்மை நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘விசித்திரன்’. மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவித்த ‘ஜோசப்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ மறுஉருவாக்கம் தான் விசித்திரன். மலையாளப் படத்தை இயக்கிய இயக்குநர் எம்.பத்மகுமார் தமிழ் பதிப்பையும் இயக்கியுள்ளார். படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில், இன்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர், திரை பிரபலங்கள் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இயக்குநர் சீனு … Read more

அநேகமாக 2 நகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற அதிமுகவுக்கு வாய்ப்பு

சென்னை அதிமுக அநேகமாக 2 மாநகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது.  அதிமுக மிகவும் குறைவான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.  இதனால் திமுக பல நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்களைக் கைப்பற்றி உள்ளது.  தற்போதைய நிலையில் அதிமுக மற்ற கட்சிகளின் ஆதரவு இருந்தால் இரு நகராட்சிகளைக் கைப்பற்ற வாய்ப்புள்ளது. இதில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகராட்சியும் ஒன்றாகும்.  இங்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 24 … Read more

மோடியுடன் தொலைக்காட்சியில் விவாதம் நடத்த விரும்பும் இம்ரான் கான்

மாஸ்கோ பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொலைக்காட்சியில் இந்தியப் பிரதமர் மோடியுடன் விவாதம் நடத்த விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.   பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தற்போது ரஷ்யாவின் அழைப்பை ஏற்று ரஷ்ய நாட்டுக்குச் சென்றுள்ளார்.  அவர் மாஸ்கோவில் உள்ள ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க உள்ளார்.  இம்ரான் கானிடம் ரஷ்ய ஊடகமான ரஷ்யா டுடே செய்தியாளர் சந்திப்பு நடத்தி உள்ளார்.   அப்போது அவரிடம் இந்தியாவுடனான உறவு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு இம்ரான் கான், “எங்களுக்கு இந்தியா … Read more

மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் ஸ்டாலின் மரியாதை

சென்னை திமுக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளதால் மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தி உள்ளார். கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற்றது. அந்த வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றி உள்ளது. மேலும் அதிமுக மற்றும் பாஜகவின் கோட்டையாக உள்ள கொங்கு மண்டலத்தில் போட்டி கடுமையாக இருக்கும் என … Read more