மேற்கு வங்கம் புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! தமிழ்நாடு காவல்துறையினர் மரியாதை

சென்னை: தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநிலத்துக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் இன்று எதமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார். அவருக்கு தமிழ்நாடு காவல்துறை தரப்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநிலத்துக்கு குடியரசு தலைவர் மாற்றினார்.  கடந்த 2021 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டின் ஆளுநராக  இருந்து வந்த  ஆர்.என். ரவிக்கும்,  திமுக தலைமையிலான ஸ்டாலின்  அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தது.  இதையடுத்து அவர் … Read more

“சென்னையின் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்”! நூலை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை : “சென்னையின் 100 ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்”! என நூலை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,  காலத்தின் காவலர்கள் – “சென்னையின் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்” நூலினை வெளியிட்டு, 2025-26ஆம் ஆண்டிற்கான சிறந்த மாவட்ட வன அலுவலர்கள் மற்றும் வனச்சரக அலுவலர்களுக்கு விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.3.2026) … Read more

சிலிண்டர் தட்டுப்பாடு… வீலில் சிக்கிய மீல்; ‘ஆன்லைன் ரிஃபண்ட்’ அறிவித்த ஐஆர்சிடிசி

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் ஈரான் போர் காரணமாக எல்பிஜி (LPG) சிலிண்டர் விநியோகத்தில் சிக்கல் ஏற்படலாம் என்ற அச்சம் உருவாகியுள்ள நிலையில், ரயில்களில் வழங்கப்படும் உணவு சேவைக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதையடுத்து IRCTC அவசர நடவடிக்கைகளை எடுத்துள்ளது. மார்ச் 10 ஆம் தேதி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரயில் நிலையங்களில் உள்ள உணவகங்கள், ஃபுட் பிளாசாக்கள், ஜன்ஆஹார் உணவகங்கள் ஆகியவை எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டால் மாற்று சமையல் முறைகளை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் … Read more

தமிழகம் முழு​வதும் கொசு உற்​பத்​தி​யைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்? அறிக்கை கேட்கிறது உயர்நீதிமன்றம்…

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மலேரியா, டெங்கு காய்ச்சல்  பரவி வரும் நிலையில், மாநிலம்  முழுவதும் கொசு உற்பத்தியை தடுக்க தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கை என்ன? – என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இதுகுறித்து  தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை கோவை  மதுரை போன்ற மாநகராட்சி பகுதிகளில்  சுகாதார சீர்கேடுகள் காரணமாக கொசுக்கள் அதிகரித்துள்ளதால் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. குறிப்பாக  1. மலேரியா, 2. … Read more

திமுக ஏற்கனவே கூறியபடி சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்க வேண்டும்! பாமக எம்.பி. அன்புமணி வலியுறுத்தல்…

சென்னை: திமுக ஏற்கனவே  தேர்தல் அறிக்கையில் கூறியபடி சிலிண்டருக்கு ₹100 மானியம் வழங்க வேண்டும் என  பாமக எம்.பி. அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 2021ல் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியின் படி இப்போது ஒரு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் என்பதை திமுக அரசு இப்போதாவது வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமாதஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில் கூறியதாவது, “வளைகுடா போரால் ஏற்பட்டுள்ள சூழல் காரணமாக சென்னை உள்பட … Read more

மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள்: குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு..!

சென்னை: சென்னை விக்டோரியா பொது அரங்கில், அகில இந்திய குடிமைப் பணித் தேர்வு வெற்றியாளர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது, மக்களின் கனவை நிறைவேற்ற புறப்படுங்கள் என்று வாழ்த்து தெரிவித்தார். அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 60 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 56 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், … Read more

காரைக்குடியில் பரபரப்பு: கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

சிவகங்கை:  காரைக்குடியில்  உள்ள காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது   நள்ளிரவு  பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றது. இது அந்த பகுதியில் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஈரானின் உயர் தலைவர் அலி காமேனி அமெரிக்க இஸ்ரேல் தாக்குலால் உயிரிழந்தார். இதுகுறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்இ ஈரானில் இருக்கும் ஆட்சிக்கு நான் வக்காலத்து வாங்கவில்லை.. அது ஒரு கொடூரமான ஆட்சி.. என கூறியிருந்தார். இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். … Read more

பழைய நில எடுப்பு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் பட்டா குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு…

சென்னை: பழைய நில எடுப்பு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் பட்டா குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு  வெளியிட்டு உள்ளது. வீட்டுவசதி வாரியத்தின் பழைய நில எடுப்பு இடங்களில் வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களின் பட்டா கோரிக்கை குறித்து தீர்வு காணப்படும் என வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலமாக, தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வீடுகள் கட்டும் திட்டங்கள் செயல்படுத்த நில எடுப்பு … Read more

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக மாறியுள்ளது தமிழகம்! தமிழ்நாடு அரசு

சென்னை: திமுகவின் கடந்த 5 ஆண்டுகால ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்டு தலைநக​ராக தமிழகம் உரு​வாகி​யுள்​ளது’ என தமிழக அரசு பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கடும் உழைப்பால் இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு புகழ்ந்துள்ளது. இதுகுறித்து, அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், திமுக ஆட்​சி​யில், இந்​தி​யா​வின் விளை​யாட்​டுத் தலைநக​ராக தமிழகம் உரு​வெடுத்​துள்​ளது. இளைஞர்​களை ஆக்​கப்பூர்​வ​மான பணி​களில் ஈடு​படுத்​த​வும், சிதறிக் கிடக்​கும் இளைஞர்​களின் ஆற்​றல்​களைத் திரட்​ட​வும், … Read more

நாளை திருச்சி வரும் பிரதமர் மோடி, தேசிய- ஊரக சாலைகள், 2 அம்ரித் பாரத் ரயில்கள் உள்பட புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்…

திருச்சி: பிரதமர் மோடி, என்டிஏ பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள  நாளை திருச்சி வரும் நிலையில், தேசிய- ஊரக சாலைகள்,  அம்ரித் பாரத் ரயில்கள் உள்பட பல்வேறு சேவைகளை தொடங்கி வைக்கிறார். திருச்சிராப்பள்ளியில் தமிழகத்தின் எரிசக்தி, சாலை மற்றும் ரயில்வே துறைகளை மேம்படுத்தும் வகையில் ரூ.5,650 கோடி மதிப்பிலான பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்களையும்  தொடங்கி வைக்கிறார். தமிழகச் சட்டமன்றத் தேர்தல்  தேதி இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் தகதகவென தகிக்கத் தொடங்கி உள்ளது.  … Read more