தமிழ்நாட்டில் 3மாதத்துக்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பு – வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தம்!

சென்னை: தமிழ்நாட்டில் 3மாதத்துக்கு தேவையான சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சென்னை உள்பட  சில இடங்களில்  வர்த்தக எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம்  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. .ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந்தேதி தொடங்கிய இந்த போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.  இதனால், ஈரான், கச்சா எண்ணை போக்குவரத்து பகுதியான ஹோர்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடி நடவடிக்கை எடுத்துள்ளது. … Read more

பெருங்குடி, எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் மேம்பாலங்கள்! சென்னை மெட்ரோ ரயில் ஒப்பந்தம்…

சென்னை: பெருங்குடி மற்றும் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்புகளில் ரூ.113.80 கோடியில் மேம்பாலம் அமைக்க, தனியார் நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் வழங்கியுள்ளது. ஓஎம்ஆர் சாலை பகுதியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டு வரும் மேம்பால மெட்ரோ ரயில் பணிகள் மற்றும் திட்ட அமலாக்கத்தில் தேவைப்படும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த மேம்பாலங்களை அமைக்கும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை, வைப்புத்தொகை அடிப்படையில் மெட்ரோ நிறுவனத் திடம் ஒப்படைத்துள்ளது. அதன்படி, பெருங்குடி மற்றும் … Read more

டி20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ.131 கோடி பரிசு! பிசிசிஐ

மும்பை: நியூசிலாந்தை வீழ்த்தி 3வது முறையாக டி20 உலக கோப்பையை  வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ ரூ.131 கோடி பரிச தொகை அறிவித்து உள்ளது. மார்ச் 8ந்தேதி குஜராத் மாநிலம் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற டி20 இறுதிப்போட்டியில்,  நியூசிலாந்து அணியை  96 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது. இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்த நிலையில், தற்போது பிசிசிஐ பரிசு தொகையை அறிவித்துள்ளது. ஐசிசி … Read more

போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை…

சென்னை: போரினால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து  தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் போர் 11-வது நாளாக நீடித்து வருகிறது.  இதன் தொடர்ச்சியாக வணிக கப்பல்கள் மற்றும் கச்சா எண்ணை கொண்டு வரும் கப்பல்கள் செல்லும் பகுதியான  ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. இதனால்,  உலகளாவிய எண்ணெய் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதன் எதிரொலியாக  கச்சா எண்ணை விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஈரானின் இந்த  நடவடிக்கை உலகளாவிய எண்ணெய் … Read more

எல்பிஜி விநியோகம் பாதிக்காமல் இருக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது…

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் அழுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், வீட்டு சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மத்திய அரசு முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை (Essential Commodities Act) பயன்படுத்தியுள்ளது. இதன் அடிப்படையில், நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களுக்கு எல்.பி.ஜி. உற்பத்தியை அதிகரிக்கவும், அதற்குத் தேவையான முக்கிய ஹைட்ரோகார்பன் மூலப்பொருட்களை எல்.பி.ஜி. உற்பத்திக்காக மாற்றி … Read more

தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: 30 நாட்களுக்குள் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களின் கனவுகளையும் கேட்டறிந்து ஆய்வு செய்து, தமிழ்நாட்டுக்கான ஒரு மாபெரும் கனவுத் திட்டத்தை அறிவிக்கப் போகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழக அரசு கடந்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தப்பட்ட பல்வேறு அரசு திட்டங்களில் பயனடைந்துள்ள பயனாளிகளின் தரவுகள் மற்றும் விவரங்களை உறுதிப்படுத்தவும், அத்திட்டங்களின் தற்போதைய செயல்பாட்டு நிலை குறித்து பொதுமக்களின் கருத்தை அறியவும், மக்களின் எதிர்கால கனவுகள் மற்றும் தேவைகளைக் கண்டறியவும் அவர்களது வசிப்பிடங்களுக்கே சென்று நேரடியாக … Read more

கோவிட் தடுப்பூசி பக்கவிளைவுகள்: பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு திட்டம் உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகு ஏற்படும் கடுமையான பக்கவிளைவுகளால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்கும் வகையில் “தவறில்லா இழப்பீடு கொள்கை” (No-fault compensation policy) ஒன்றை உருவாக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாய்க்கிழமை (மார்ச் 10, 2026) இந்த உத்தரவை வழங்கியது. கோவிட் தடுப்பூசி எடுத்த பிறகு ஏற்பட்டதாகக் கூறப்படும் ‘AEFI’ (After Effects From Immunisation) மரணங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று … Read more

தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை! கூட்டணி கட்சியான மார்சிஸ்டு அதிருப்தி…

சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில், மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கிய தொகுதி எண்ணிக்கையில் திருப்தி இல்லை என அக்கட்சி செயலாளர் அதிருப்தி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ளது. விரைவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையில் திமுக தலைமையிலான கூட்டணியில் இதுவரை இல்லாத அளவுக்கு 21 கட்சிகள் இணைந்துள்ளன. இக்கட்சிகளுக்குதொகுதிகளை ஒதுக்கும் பணியில் திமுக தலைமை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அது தொடர்பாக கூட்டணி … Read more

அதிமுக எம்.பி. தம்பிதுரை காலேஜ் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க உத்தரவு! சென்னை உயர்நீதிமன்றம்…

சென்னை: அதிமுக எம்.பி. தம்பிதுரை  கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள அரசு நிலங்களை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதிமுக எம்.பி. தம்பித்துரை பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதற்காக அவர்,  அவரது நிலத்தை சுற்றிஉள்ள அரசு புறம்போக்கு நிலங்களையும் மடக்கி  கட்டிடங்கள் கட்டி உள்ளார். இதை அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  அதிமுக எம்.பி. தம்பிதுரைக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்க வேண்டுமென திருவள்ளூர் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. … Read more

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு…

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு போட்டியிட்ட 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் விரைவில், புதிய எம்பிக்களாக நாடாளுமன்றத்தில் பதவி ஏற்கிறார்கள். தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் தேதி பிப்ரவரி = மாதம் அறிவிக்கப்பட்டது.  அதன்படி, தமிழகத்தில் திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு மற்றும் தம்பிதுரை (அதிமுக), ஜி.கே.வாசன் (தமாகா) ஆகியோரின் பதவிக்காலம் … Read more