வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகர் சுரங்க பாதையை திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி….

சென்னை:  வடசென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ராயபுரம் பகுதி  போஜராஜன் நகரில் அமைக்கப்பட்டுள்ள  சுரங்க பாதையை துணைமுதல்வர் உதயநிதி இன்று  திறந்து வைத்தார். சென்னை ராயபுரம் வண்ணாரப்பேட்டை போஜராஜன் நகரில் ரூ.30.13 கோடி மதிப்பீட்டில்  ரயில்வே வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. வடசென்னை பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதை துணைமுதல்வர் ஸ்டாலின் இன்றுதிறந்து வைத்தார். வடசென்னையின் முக்கிய பகுதியான வண்ணாரப்பேட்டை , ராயபுரத்தின்  மூன்று பக்கமும் ரயில்வே … Read more

அண்ணா சாலையில் போக்குவரத்து மாற்றம் வாகன ஓட்டிகள் அவதி…

சென்னை அண்ணாசாலையில் நேற்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரையிலான 3.2 கி.மீ. நீளத்திற்கு உயர்மட்டப் பாலம் அமைக்கும் பணியில் சைதாப்பேட்டை முதல் நந்தனம் வரையில் மேம்பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் பணி ஓரளவு முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்டமாக செனடாப் ரோடு சந்திப்பு முதல் அறிவாலயம் வரை பணிகள் நடைபெற உள்ளதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டையில் இருந்து ஜெமினி நோக்கி செல்லும் வாகனங்கள் எல்டாம்ஸ் சாலை சந்திப்பில் இடதுபுறமாக தியாகராய சாலையில் திரும்பி … Read more

ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி ரூ.32.69 கோடிக்கு பங்குகள் வாங்கிய விவகாரம்: திமுக எம்.பி.க்கான எதிரான ED நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் தடை

டெல்லி:   திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன்  ரிசர்வ் வங்கி ஒப்புதல் இன்றி ரூ.32.69 கோடிக்கு   வெளிநாட்டு  பங்குகள் வாங்கிய விவகாரம் குறித்து விளக்கம் கோரிய  அமலாக்கத்துறை யின் நோட்டீசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இதற்கிடையில், கடந்த 2017 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உள்ள ஒரு ஷெல் நிறுவனத்தில் ரூ.42 கோடி முதலீடு செய்தமை, சிங்கப்பூர் வெளிநாட்டுப் பங்குகளை கையகப்படுத்துதல் மற்றும் அதைத் தொடர்ந்து குடும்ப உறுப்பினர்களிடையே மாற்றுதல் … Read more

மகாராஷ்டிரா மாநில ஆளுநராகிறார் எச்.ராஜா? பரபரப்பு தகவல்கள்…

சென்னை:  பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா, மகாராஷ்டிரா மாநில கவர்னராக நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது மகாராஷ்டிரா மாநில கவர்னராக இருந்து வரும், தமிழ்நாடு மாநில பாஜகவின் முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது இடத்துக்கு தமிழ்நாட்டைச்  சேர்ந்த மூத்த பாஜக தாலைவரும்,காரைக்குடி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான   எச். ராஜா என்று அழைக்கப்படும் ஹரிகரன் ராஜா சர்மா (Hariharan Raja Sharma)  … Read more

குடியரசு துணைத்தலைவர் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய மத்திய அமைச்சர்…

சென்னை: குடியரசு துணைத்தலைவர் தேர்தல் வேட்பாளராக தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தை சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சிபி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக எம்.பி.க்கள் ஆதரவு கோரி,  முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே முதல்வர் ஸ்டாலினுக்கும் மத்தியஅமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கும் இடையே  நட்பு  இருந்து வரும் நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற  தி.மு.க-வின் முன்னாள் தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டையொட்டி, அவரது உருவம் பொறித்த … Read more

கிட்னியை தொடர்ந்து கல்லீரல் திருட்டு – பரபரக்கும் நாமக்கல் மாவட்டம்…

நாமக்கல்: ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்காக அவர்களை ஏமாற்றி கிட்னி திருடப்பட்ட சம்பவம் அதிர்கலைகளை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டத்தில், தற்போது கல்லீரல் திருட்டு நடைபெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதுபோல வேறு சிலருக்கும்  முறையான அனுமதியின்றி மற்ற பாகங்கள் திருடப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழிலாளர்களை மூளைச்சலவை செய்து, அவர்களின் கிட்னியை விற்பனை செய்த மோசடியில் ஈடுபட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திமுக நபர்களின் இரண்டு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று … Read more

தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது – அரசியல் கட்சியினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்! தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்

டெல்லி: தேர்தல் ஆணையம் பாரபட்சமின்றி செயல்படுகிறது – அரசியல் கட்சியினர் மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார்கள்  என பீகார் தீவிர தேர்தல் சீர்திருத்தம் மற்றும் எதிர்க்கட்சிகிளின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து இந்திய தேர்தல் ஆணையர்கள் பதில் அளித்துள்ளனர். ஏற்கனவே வாக்காளர் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து ராகுல் காந்திக்கு CEC ஆதாரங்களை சமர்ப்பிக்கவும் அல்லது கருத்துக்களை திரும்பப் பெறவும் என கூறிய நிலையில்,  செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர், வாக்குதிருட்டு என  எதிர்க்கட்சிகள் பொய்களை கூறி … Read more

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிப்பை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை!

சென்னை;’ திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த  உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. திமுக அமைச்சராக இருந்து வரும்,  ஐ.பெரியசாமி மீது, கடந்த  அதிமுக ஆட்சியில் 2012ல் சொத்துக்குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. 2006 முதல் 2011 வரை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. … Read more

தனியார் நிறுவனத்தின் சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை…

சென்னை: சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் தனியார்  தொழில்துறை நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, காஞ்சி, வேலூர் உள்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை ஈக்காட்டுத்தாங்கல் டிஃபன்ஸ் காலனியில் உள்ள இன்டர் ஆர்க் பில்டிங் நிறுவனத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மற்றும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பிரபல இரும்புப்பொருள் தயாரிக்கும் தொழில்நிறுவனத்திற்குச்சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (18.08.2025) காலை முதல் … Read more

பீகார் எஸ்ஐஆர்: எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் நடைபெற்று வரும் 16 நாட்கள் வாக்குரிமைப் பேரணி….

பாட்னா: பீகார் மாநிலத்தில், தேர்தல்ஆணையத்தின் தீவிர வாக்காளார் பட்டியல் சீர்திருத்தம் நடைபெறுவதற்கு எதிராக, மக்களை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமை யில் மாநில எதிர்க்கட்சிகளின் 16 நாட்கள் சுமார் 1300 கிமீ தூரம்  நடைபெற உள்ளது. இநத  மெகா  வாக்குரிமை பேரணி (‘Vote Adhikar Yatra’ ) நேற்று (ஆகஸ்டு 17)ந்தேதி அன்று  தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகாா் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ளது. இங்குள்ள வாக்காளர் பட்டியலில் வெளிநாடுகளை அகதிகள் … Read more