கிராமிய பெண் சுயதொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்துவதற்காக 2000மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

கிராமியத் துறையில் சிறுகைத்தொழிலில் ஈடுபடும் பெண் சுயதொழில் முயற்சியாண்மையை வலுப்படுத்துவதற்காக மானிய அடிப்படையில் கடனுதவி வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவையினால் அனுமதி கிடைத்துள்ளது.    அதன்படி இவ்வருடத்தில் அதற்காக 2000மில்லியன் ரூபாவை நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இளைஞர் விவசாயக் கிராம வாரத்தை ஆரம்பித்த முதலாவது கிராமமாக ஹங்குரன்கெத கலஉடகல கிராமத்தின் விவசாயக் குடும்பங்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் … Read more

சீன அரசின் பொருத்து வீடுகள் அமைப்பதற்கான பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தை வந்தடைவு

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சீன அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்படவுள்ள பொருத்து வீட்டுத்திட்டத்தின் வீடுகள் அமைப்பதற்காக பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தை நேற்று (07) வந்தடைந்தன. எட்டு பார ஊர்திகளில் பொருத்து வீடுகளுக்கான பொருட்கள் கிளிநொச்சி மாவட்டத்தாற்று  கொண்டு வரப்பட்டுள்ளன. குறித்த பொருத்து வீடுகளைக் கொண்ட பார ஊர்திகளை கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடித்தலை கட்டுப்படுத்துதல் –  முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடித்தலை கட்டுப்படுத்துதல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் கடற்றொழில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று முன்தினம் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில்  பல படகுகள் மின் விளக்கினை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதனால் பல ஆயிரம் கிலோவில் மீன்களை பிடிக்கின்றார்கள். இதனால் சாதாரன மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் மீன்வளம் அழிக்கப்படுவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட … Read more

ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்க ஏற்பாடு

க.பொ.த (உ/த) மற்றும் முதலாம் தரம் முதல் 11 ஆம் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை ஜூலை 12 முதல் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, மாவட்ட செயலாளர்கள் தலைமையில், அனைத்து வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அதிபர்களின் ஒருங்கிணைப்புடன், இந்த புலமைப்பரிசில் வழங்கல் மேற்கொள்ளப்படும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புலமைப்பரிசில்கள் வழங்கப்படும் திகதி, நேரம், இடங்கள் … Read more

பிரிக்கப்படாத இலங்கைக்குள் தீர்வுகாண ஆர். சம்பந்தனும் நானும் எப்போதும் பணியாற்றினோம்

• உடன்பாட்டுடன் நடத்தப்பட்டு வந்த அந்தக் கலந்துரையாடல்களை வெற்றிகரமாக நிறைவு செய்ய அனைவரும் ஒன்றிணைவோம்.   • எதிர்க்கட்சித் தலைவர் என்பவர் மாற்றுப் பிரதமர் – ஆர். சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சிறப்பாக வகித்த ஒரு தலைவர்.   • அவரது மறைவு நீண்டகால நண்பரின் இழப்பாகும்.   • தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றேன்.   • தேசிய காணி ஆணைக்குழுவின் வரைவு தற்போது தயாராக உள்ளது – அது பாராளுமன்றத்தில் … Read more

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும்….

2024 ஜூலை 07ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 06ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.   நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கு மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது … Read more

நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்

• பொறுப்பை ஏற்று அச்சமின்றி உண்மையைப் பேசக்கூடிய அரசியல் தலைவர்கள் நாட்டுக்குத் தேவை.   • கனவுலகில் இருக்காமல் நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் செயற்படுத்தி முன்னேறுவோம்.   • சிலர் முன்மாதிரியாகக் கருதும் அர்ஜென்டினாவின் மார்ட்டின் குஸ்மான் தோல்வியடைந்த ஒருவர்.   • சிங்கள சமூகம் ஒருபோதும் யாசகம் கேட்டதில்லை – ஏற்றுமதி பொருளாதாரத்தின் மூலம் நாடு முன்னேற்றப்படும்.   • அந்த திட்டத்தில் வங்கிக் கட்டமைப்பின் வகிபாகம் முக்கியமானது – வங்கியாளர்களின் ஒன்றியத்தின் நிகழ்வில் ஜனாதிபதி … Read more

புதிய பொருளாதாரத்துடன், புதிய கல்வி முறையும் நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும்

• நவீன தொழில்நுட்பத்துடன் முன்னேறிச் செல்ல இந்தியா வழங்கும் ஆதரவு மிகவும் பாராட்டத்தக்கது.   • மத்திய கல்லூரிகள் மற்றும் தேசிய பாடசாலைகளை செயற்கை நுண்ணறிவு பாடசாலைகளாக மேம்படுத்த வேண்டும் – தென் மாகாணத்தின் 200 பாடசாலைகளுக்கு நவீன வகுப்பறைகள் மற்றும் டெப் கணினிகள் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும், அதற்கான கல்விச் சீர்திருத்தங்கள் தற்போது நாட்டில் … Read more

“சுவசெரிய வைத்தியசாலை சேவை” எனும் பெயரில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு விசேட பஸ் சேவை 

எவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் குறுகிய காலத்துக்குள் மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்புவதற்கான திறமை நாட்டின் சுகாதார சேவைக்கு காணப்படுவதாக சுகாதார அமைச்சர் வலியுறுத்தினார். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைக்கு விசேட பஸ் சேவை ஒன்று அவசியமானதுடன், அது தொடர்பாக கவனம் செலுத்திய சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரணவின் தலைமையில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தனவின் பங்கு பற்றலுடன் “சுவசெரிய வைத்தியசாலை சேவை” எனும் பெயரில் விசேட பஸ் சேவை … Read more

கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் 08 பில்லியன் டொலர் நிவாரணம் பெற முடிந்துள்ளது

• “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் குருணாகல் மாவட்டத்தில் 73,143 பேருக்கு காணி உறுதிகள்.   • மக்களுக்கு காணி உரிமை வழங்குவதே உண்மையான சோசலிசம்.   • நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவித்த அரசாங்கம் தற்போது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்க ஆரம்பித்துள்ளது.   • புதிய பொருளாதாரத்துடன் நாடு முன்னேறும் போது குருணாகலைக்கு புதிய அபிவிருத்தித் திட்டம்- ஜனாதிபதி. கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் … Read more