மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 25ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பிரதேசங்களில் … Read more

இலங்கை மற்றும் ஈரான் ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு

இலங்கையின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் தொடர்பில் ஈரானிய ஜனாதிபதியின் வலுவான நம்பிக்கை. இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், கடன் மறுசீரமைப்பிற்கும் ஈரான் அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு இலங்கை ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு. இரு நாடுகளுக்கும் இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்து. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ … Read more

ஓகஸ்ட் மாதத்திற்குள் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் – போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன

மோட்டார் வாகனத் திணைக்களத்தில் குவிந்துள்ள அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரண்டு கட்டளைகள் மீதான பாராளுமன்ற விவாhராதத்தில் இன்று (25) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அரச நிறுவனங்களுக்கு பெரும் பணத்தை மீதப்படுத்துகிறது. இலங்கைக்கு இறக்குமதி … Read more

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை முடித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கினால் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க முடியும்

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணையை முடித்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ள அனுமதி வழங்கினால் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியும் என்று கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 33 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் அடிப்படை உரிமைகள் தொடர்பான மனுவை சமர்ப்பித்து 14 மாதங்கள் ஆகியும் இன்று வரை பரீட்சை … Read more

பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் சபாநாயகரைச் சந்தித்தார்

பாகிஸ்தானின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாஹீமுல் அஸீஸ் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் நேற்று (24) சந்தித்தார். இந்த சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் பாகிஸ்தானின் பிரதி உயர்ஸ்தானிகர் வாஜித் ஹஸன் ஹஷ்மி ஆகியோரும் கலந்துகொண்டனர். பரஸ்பர நலன்கள் தொடர்பில் கவனம் செலுத்தி அவர்களுக்கிடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கலந்துரையாடலில், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவி வரும் உறுதியான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. … Read more

வெளிநாட்டு வேலை வாய்ப்பு தொடர்பில் மோசடி செய்பவர்களுக்கு எதிராக   நடவடிக்கை 

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதாக கூறி மோசடியான முறையில் பணம் சம்பாதிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நேற்று (24) பணிப்புரை விடுத்தார். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதாக பொய்யாக கூறி பணம் சம்பாதிக்கப்படுவதை   தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மேலும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குகிறோம் என்ற போர்வையில் … Read more

“உமா ஓயா” பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளால் மக்கள் பாவனைக்கு கையளிப்பு

ஈரானுடனான தொடர்புகளை பலப்படுத்தி முன்னோக்கி கொண்டுச் செல்வதே நோக்கமாகும் – இலங்கை ஜனாதிபதி. இலங்கையின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்திக்கு கைகொடுக்கத் தயார் – ஈரான் ஜனாதிபதி. மகாவலி திட்டத்திற்கு அடுத்தபடியாக இலங்கையின் பாரிய நீர்ப்பாசனத் திட்டமாக வரலாற்றில் இடம்பெறும் “உமா திய ஜனனி” பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் நேற்று (24) இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளினால் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அழைப்பின் பேரில் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த ஈரான் ஜனாதிபதி … Read more

மட்டக்களப்பில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினுடாக பால் நிலை பரிணாம மாற்றம் தொடர்பான கண்காட்சி

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக பால் நிலை பரிணாம மாற்றம் தொடர்பான கண்காட்சி கடந்த திங்கட்கிழமை (22) முதல் இன்று (24) வரை மட்டக்களப்பு தெய்வநாயகம் மண்டபத்தில் இடம்பெறுகின்றது. கனடா அரசு மற்றும் ராயல் நார்வேஜியன் தூதரகத்தின் ஆதரவுடன் இடம்பெற்ற இப் பால்நிலை பரிணாம மாற்றம் மற்றும் பெண் தன் மேம்பாடடைதல் – ஓர் பயணம்; நெருக்கடிகளிலிருந்து வெளியேறுவதற்கான ஒரு வழி எனும் செயல் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. உலகின் 60 நாடுகளில் மேற்கொண்ட ஆய்வில் … Read more

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாட்டிற்குத் தீர்வு

அரசாங்கப் பாடசலைகளில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பாகக் கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளரினால் அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக விசாரிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு கல்வி அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த இன்று (24) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கொள்கை சம்பந்தமான விடயங்கள் தொடர்பில் ஒரு அதிகாரி விசாரணை நடத்த முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். 2024.03.28 அன்று அரசாங்கப் பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கிணங்க 2024.04.18 அன்று கல்வி அமைச்சின் … Read more

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மத்தளை விமான நிலையத்தில் வரவேற்பு !

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மத்தளை விமான நிலையத்தில் வரவேற்கப்பட்டார். உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கான கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக இன்று (24) இலங்கைக்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியை பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் மத்தளை விமான நிலையத்தில் வரவேற்றனர்.