மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சனை தொடர்பில் நீதியமைச்சர் தலைமையில் கலந்துரையாடல்!!

மாவட்டத்தில் நிலவும் காணி பிரச்சனைகள் தொடர்பாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ  தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று (24) மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும்  இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பின் போரில் இரண்டு நாள் விஜத்தினை மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள நீதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று கள விஜங்களை மேற்கொண்டு மாவட்டத்தின் நிலமை தொடர்பாக அறிந்து கொண்டது மட்டுமல்லாமல், பல தரப்பட்ட துறைசார் அதிகாரிகள், … Read more

கங்காராம விகாரையின் நவம் மகா பெரஹரா ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றது

சுமார் நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கங்காராம விகாரையின் நவம் மஹா பெரஹராவை நவீன தொழில்நுட்பத்துடன் சிறப்பான பெரஹரா விழாவாக மாற்ற பக்தர்களின் ஒற்றுமை உதவியுள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கொழும்பு, ஹுனுப்பிட்டிய கங்காராம விகாரையின் வருடாந்த நவம் பெரஹெராவை (23) ஆரம்பித்துவைத்தே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். கொழும்பு நவம் பெரஹெரா நாற்பத்தைந்தாவது தடவையாகவும் நேற்று (23) இரவு வீதி உலா நடைபெற்றதுடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மங்கள ஹஸ்திராஜயா யானை … Read more

நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” ஐக்கிய குடியரசு முன்னணியின் முன்மொழிவு ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஐக்கிய குடியரசு முன்னணியின் “நாட்டிற்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (24) முற்பகல் கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது. ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், குறித்த முன்மொழிவை ஜனாதிபதியிடம் கையளித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டின் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை … Read more

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகள், கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை – ஜனாதிபதி செயலாளர் அறிவுறுத்தல்

சட்டத்துக்கு முரணாக தேசிய விருதுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவ்வாறான கௌரவ நாமங்களை பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். குறிப்பிட்ட ஒரு சில நியதிகளின் அடிப்படையில் உரிய செயன்முறைக்கமைய தெரிவு செய்யப்படும் சிறப்புக்குரிய இலங்கை பிரஜைகளுக்காக ஜனாதிபதியால் வழங்கப்படும் விருதுகள் மற்றும் கௌரவ நாமங்களுக்காக பயன்படுத்தப்படும் பெயர்களை பயன்படுத்தி சில நபர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக விருதுகள் மற்றும் சன்னஸ் பத்திரங்கள், சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றமை … Read more

ஊடகப் செயலமர்வில் அரச மற்றும் தனியார் துறைகளின் சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சம சந்தர்ப்பம் வழங்கப்பட்டது -அமைச்சர் பந்துல குணவர்தன  

ஊடகவியலாளர்களை அறிவூட்டுவதற்காக நடைபெறும் செயலமர்வில் அரச மற்றும் தனியார் துரையின் சிங்கள தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சமமான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக வெகுசன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன நேற்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்; ஊடகவியலாளர்களுக்கு அறிவூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக நாடு பூராகவும் செயலமர்வுகள் ஒருங்கு செய்யப்பட்டுள்ளன. இதன்போது குற்றங்களை அறிக்கையிடுதல், வெறுப்புப் பேச்சு, … Read more

எந்தவித அழுத்தங்கள் வந்தாலும் ஆரம்பிக்கப்பட்ட எந்தவொரு நடவடிக்கையும் நிறுத்தப்படமாட்டாது – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்

போதைப்பொருள் மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கும் நோக்கிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ள எந்தவொரு நடவடிக்கையையும் நிறுத்தத் தயாரில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். மேலும், 2023 டிசம்பர் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட “யுக்திய” நடவடிக்கையின் மூலம் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 7.8 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் … Read more

இரத்மலானை லலித் அத்துலத்முதலி தொழில் பயிற்சி நிலையத்திற்கு ஜனாதிபதி மேற்பார்வை விஜயம்

உலக சந்தையை வெற்றிபெறத் தகுந்த சூழல் உருவாக்கப்படும்.உலக சந்தையை வெற்றிபெறத் தகுந்த சூழல் உருவாக்கப்படும். நவீன உலகிற்கு ஏற்றவாறு தொழில் கல்வியை மறுசீரமைத்து, இந்நாட்டின் இளைஞர் யுவதிகள் போட்டித் தன்மை நிறைந்த உலக தொழில் சந்தையில் வெற்றி பெறுவதற்குத் உகந்த சூழல் உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். அதற்கமைய நாட்டின் அனைத்து தொழில் பயிற்சி நிறுவனங்களையும் ஒருங்கிணைத்து ஒரே பல்கலைக்கழக கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதோடு, புதிய விடயப்பரப்புக்களை உள்ளடக்கிய பாடநெறிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாகவும் … Read more

இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியை சுமார் 70% அதிகரிக்கலாம்

இரவு நேரப் பொருளாதாரத்திற்கு மாறுவதன் மூலம் நாட்டின் அந்நிய செலாவணியை சுமார் 70% வரை அதிகரிக்க முடியும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார். அதற்காக சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவரக் கூடிய இடங்கள் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களையும் ஒழுங்குமுறைகளையும் திருத்தியமைத்து, தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இவ்வாறு தெரிவித்தார். இரவுப் பொருளாதாரம் … Read more

புதிய கடற்றொழில் வரைபு ஒரு மாதத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் – உலக உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஐ.நா. உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதி பணிப்பாளர் நாயகம் மனுவேல் பராங்கே தலைமையிலான பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று கடற்றொழில் அமைச்சில் (21.02.2024) இடம்பெற்றது. இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் இலங்கை கடற்றொழில் சமூகத்தை சர்வதேச மட்டத்தில் உயர்த்துவதற்காக FAO அமைப்பின் உதவியுடன் உருவாக்கப்பட்டு வரும் தற்போது வரைபு மட்டத்திலுள்ள புதிய கடற்றொழில் சட்டத்தை ஒரு மாதத்திற்குள் கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களின் கருத்துக்களை உள்வாங்கி அமைச்சரவையின் … Read more

இலங்கையர்களாக ஒன்றுபட்டால் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்லலாம்

நாட்டுக்கு தேவையான நல்ல பிரஜைகளை உருவாக்கக் கூடியவாறு சாரணர் இயக்கத்தை விரிவுபடுத்த ஒத்துழைப்பு வழங்குவோம். சாரணர் இயக்கத்திற்கு தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து செயற்பட வாய்ப்பு – 10 ஆவது தேசிய சாரணர் ஜம்போரியை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு. அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டால் நாட்டை துரித அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல முடியும். அதனால் எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்ப முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். திருகோணமலை கோணேஷ்வரா இந்து கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு … Read more