ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் காத்தான்க்குடியில் விசேட இப்தார் நிகழ்வு!
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இம்முறை காத்தான்குடியில் விசேட இப்தார் நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. இந்நிகழ்வானது பள்ளிவாசல் சம்மேளனம்,வர்த்தக சம்மேளனம் ஜம்மியத்துல் உலமா காத்தான்குடி கிளை உட்பட அரச திணைக்களங்களுடன் இணைந்து இந்நிகழ்வு மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.