இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகரை சந்தித்தார்

சேவைக்காலத்தை முடித்துக்கொண்டு வெளியேறவுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்று (28) பாராளுமன்றத்தில் சந்தித்தார். கடந்த காலங்களில் இலங்கை முகங்கொடுத்த பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்த முதலாவது நாடு இந்தியா என்றும், அதற்காக தனது நன்றிகளை தெரிவிப்பதாகவும் சபாநாயகர் இதன்போது குறிப்பிட்டார். அத்துடன், தனது சேவைக்காலத்தில் இலங்கை – இந்திய தொடர்புகளை விருத்தி செய்வதற்கு இந்திய உயர்ஸ்தானிகர் வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் சபாநாயகர் நன்றியைத் தெரிவித்தார். … Read more

வருடாந்த வருமான அறிக்கையை நவம்பர் 30க்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கையளிக்க வேண்டும்

வருடாந்த வருமான அறிக்கையை நவம்பர் மதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கையளிக்க வேண்டும் – உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தற்போதைய உள்நாட்டு இறைவரிச் சட்டத்துக்கு அமைய 2022/2023 மதிப்பீடு ஆண்டுக்கான, அதாவது 2022 ஏப்ரல் 01 முதல் 2023 மார்ச் 31 வரையான காலகட்டத்துக்கான வருடாந்த வருமான அறிக்கையை நவம்பர் மதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கையளிக்க வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் … Read more

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2023 நவம்பர் 28ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 நவம்பர் 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், பல தடவைகள் மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய மாவட்டங்களில் … Read more

இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் ஆடை, சுற்றுலாத் துறை சார்ந்த உறவுகளை விரிவுபடுத்துவதில் கவனம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சவுதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் பைசல் எப் அலிப்ராஹீம்(Fisal F.Alibrahim) நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார். இலங்கைக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையில் நிலவும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன், குறிப்பாக இரு நாடுகளுக்குமிடையிலான ஆடை மற்றும் சுற்றுலாத்துறை தொடர்பிலான உறவுகளை மேம்படுத்த எதிர்பார்க்கப்பதாக சவூதி அரேபிய பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் தெரிவித்தார். சவூதி அரேபிய அரசாங்கம் … Read more

புதிய கல்விக் கொள்கையில் பரீட்சைகள் நடத்தப்படும் திகதிகள் மற்றும் பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதிகள் உட்படுத்தப்படும்

புதிய கல்விக் கொள்கையில் பரீட்சை திகதிகள் மற்றும் பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதிகள் கட்டாயமாக உட்படுத்தப்படவுள்ளன என்றும், கல்வி தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் தேவையான தீர்வுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தரம் 5 … Read more

'நியாயமான வர்த்தகக் கருத்தை' ஊக்குவிக்க நீதியான சர்வதேச வர்த்தக வலையமைப்பு பங்காளர்களுடன் ஒரு செயல் திட்டம்

இலங்கையில் ‘நியாயமான வர்த்தகக் கருத்தை’ மேம்படுத்துவதற்காக நீதியான சர்வதேச வர்த்தக வலையமைப்பின் (International Fair Trade Network) பங்குதாரர்களுடன் இணைந்து செயற்திட்டத்தை உருவாக்குவதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை முன்மொழியப்பட்டுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். International Fair … Read more

2038 புதிய கிராம அலுவலர்கள் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன – உளநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும், இம்முறை 2038 புதிய கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்படவுள்ளதாகவும் உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இன்று (28) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிராம உத்தியோகத்தர்களை ஆட்சேர்ப்பு செய்யாமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். குழு அறிக்கை கிடைத்தவுடன் கிராம உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் … Read more

தேசிய பாதுகாப்பு குறித்து அச்சப்பட தேவையில்லை – அமைச்சரவை பேச்சாளர்

தேசிய பாதுகாப்பு குறித்து அச்சப்படத் தேவையில்லை என்று வெகுஜன ஊடக, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், விடுதலைப் புலிகளின் முன்னாள் பயங்கரவாதத் தலைவர் பிரபாகரனின் மகள் என கூறப்படும் பெண் ஒருவர் விடுத்த அழைப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். மீண்டும் இந்த நாட்டில் … Read more

2024 வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்டது

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (27) பிற்பகல் நடைபெற்றது. இதில் தொழிற்சங்க தலைவர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புகள், சிவில் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 2048 ஆம் ஆண்டுக்குள் … Read more

இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான மற்றும் கப்பல் போக்குவரத்து குறித்து ஆராய்வு

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (27.11.2023) பாராளுமன்றத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, இத்தாலிக்கும் இலங்கைக்கும் இடையிலான சுற்றுலா உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், கொழும்புக்கு நேரடி விமான மற்றும் கடல் மார்க்கமான போக்குவரத்தை அறிமுகப்படுத்துவதற்கான விடயங்களை அவசரமாக ஆராய்வதற்கு இலங்கைக்கான புதிய இத்தாலிய தூதுவர் டாமியானோ பிராங்கோவிக் பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் இணக்கம் தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. … Read more