கிராமிய வீதிகள் அபிவிருத்தி தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல்

கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற மணல் வீதிகளை கிறவல் வீதிகளாக மாற்றும் வேலைத்திட்டம் தொடர்பாக மீளாய்வு செய்வதற்கான கலந்துரையாடல் நடை பெற்றது. மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (26) இடம் பெற்ற இந் நிகழ்வில் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சின் மேலதிக செயலாளர் பி.ரணவிர கலந்துகொண்டார். “மணல் வீதிகள் அற்ற கிராமங்கள்” எனும் தொணிப்பொருளில் … Read more

இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அணி வெற்றி

2023 ஆம் ஆண்டு உலகக் கிண்ண ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நேற்று (26) நடைபெற்ற இலங்கை மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களால் வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலாவது துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 33 ஓவர்களில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக டீநn ளுவழமநள 43 ஓட்டங்களையும், துழnலெ டீயசைளவழற 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் … Read more

ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை உருவாக்குவது தொடர்பாக மட்டக்களப்பில் விசேட கலந்துரையாடல்!!

ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை உருவாக்குவது தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (26) மட்டக்களப்பில் நடைபெற்றது. அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் முன்னுரிமைகளுக்கு இணங்க, வெகுசன ஊடக அமைச்சு, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்துடன் (UNDP) இணைந்து இலங்கையில் தேசிய ஊடகக் கொள்கைக்கான கட்டமைப்பொன்றை உருவாக்கும் பணியிலும் இலங்கை ஊடகத்துறைக்கான கொள்கை சட்டமொன்றை அமைப்பதிலும் ஈடுபட்டுவருகின்றது. அதற்கமைய, வெகுசன ஊடக அமைச்சினால் கல்வியாளர்கள் மற்றும் ஊடகத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை உள்ளடக்கி வழிநடத்தல் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு பல சந்தர்ப்பங்களில் கூடி … Read more

பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு உடனடியாக உரிய நிறுவனங்களில் நியமனங்களை வழங்கவும். – பிரதமர் தினேஷ் குணவர்தன

இதுவரை நியமனம் வழங்கப்படாதுள்ள பல்நோக்கு அபிவிருத்தி உதவியாளர்களுக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் உரிய நிறுவனங்களுக்கு நியமனங்களை வழங்குமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு பிரதமர் தினேஷ் குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். பல்நோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் செயற்பாடுகள் மற்றும் நியமனத்தை துரிதப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் (.2023.10.25) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், அரசாங்க ஆட்சேர்ப்பு செயன்முறையை மீளாய்வு செய்வதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட உத்தியோகபூர்வ குழுவினால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் … Read more

சிறு மற்றும் மத்தியத்தர மக்களுக்காக கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

சிறு மற்றும் மத்தியத்தர மக்களுக்காக கொழும்பு நகரத்தில் 05 வீட்டுத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார். அதற்கான இணக்கப்பாட்டினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சீன அரசாங்கத்துடன் செய்துகொண்டுள்ளார் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 2024 ஆம் வரவு செலவுத் திட்டத்தின் பின்னர் வீடமைப்பு அதிகார சபையில் தடைப்பட்ட திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே … Read more

விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்காக பல்வேறு புதிய திட்டங்கள்

  அதற்காக மேலதிக நிபுணத்துவத் தெரிவுகளைப் பெற்றுக்கொள்ள அமைச்சுடன் இணைந்த புத்தாக்க முயற்சிகள் ஊக்குவிக்கப்படும் – 117 ஆவது இலங்கை பொறியிலாளர்கள் நிறுவனத்தின் வருடாந்த அமர்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. விவசாய மற்றும் தொழில்நுட்பத் துறைகளின் புரட்சிகர மாற்றத்திற்கான பல்வேறு புதிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் போது, பொறியியலாளர்களின் பங்களிப்பு மிக மிக்கியமானது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சுக்களின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதாகவும் மேலதிக நிபுணத்துவத் தெரிவுகளைப் பெற்றுக்கொள்வதற்கான … Read more

மக்கள் எதிர்பார்க்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக புதிய சட்டங்களைக் கொண்டு வர அரசாங்கம் நடவடிக்கை

  அனைத்துத் துறைகளுக்கும் மாற்றமடையாத கொள்கை – அமைச்சர் மனுஷ நாணாயக்கார. மக்கள் எதிர்பார்க்கும் முறைமைகளில் (Systems Change) மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தற்காலத்திற்கு ஏற்ற புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில்   (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணாயக்கார இவ்வாறு தெரிவித்தார். இங்கு மேலும் … Read more

மூன்று புதிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்

  புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான மூன்று தூதுவர்கள்  (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தனர். சுவிட்சர்லாந்து, ஐரோப்பிய யூனியன் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு புதிய தூதுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்று நற்சான்றிதழ்கள் சமர்ப்பிக்கப்பட்ட தூதுவர்களின் பெயர்கள் பின்வருமாறு : 01. இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் அதிமேதகு கலாநிதி சிரி வோல்ப் ( H.E Dr (Ms) Siri Walf – Ambassador of Switzerland in Colombo) … Read more

வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி சலுகைகளை பெற்றுக்கொள்ளுமாறு அஸ்வெசும பயனாளிகளுக்கு அறிவிப்பு

  06 மாதங்களுக்குள் தேசிய அடையாள அட்டையை சமர்பிக்க முடியும் என்ற நிபந்தனையுடன் கணக்குகளை ஆரம்பிக்க வாய்ப்பு. டிசம்பர் மாதமளவில் கொடுப்பனவுகளை பூர்த்தி செய்ய விசேட வேலை வாரம். அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பெயர்ப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள போதும், இதுவரையில் அந்த நன்மைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி அந்த நலன்களை பெற்றுக் கொள்ளுமாறு நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார். உரிய … Read more

“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

“நாம் 200” நிகழ்வு ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 02 ஆம் திகதி நடைபெறும் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், இந்த ஆண்டு இறுதி வரை நீர் கட்டணங்கள் திருத்தப்பட மாட்டாது என்றும், 2024 ஜனவரி முதல் நீர் கட்டண சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்த அமைச்சு நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில்   (24) … Read more