பாதுகாப்பு படை வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டான பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வு பாராளுமன்றத்தில்.

உயிரிழந்த பாதுகாப்புப் படைவீரர்களின் நினைவான பொப்பி தினத்தினை முன்னிட்டு பாராளுமன்றத்தில் (18) பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. இதற்கமைய இலங்கை முன்னாள் பாதுகாப்புப் படை வீரர்கள் சங்கத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேராவினால் பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தனவுக்கு பொப்பி மலல் அணிவிக்கப்பட்டதுடன், இதனைத் தொடர்ந்து பிரதமர் குறித்த சங்கத்துக்கான நிதி ஒத்துழைப்பை வழங்கினார். அதன் பின்னர் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன, எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் பொப்பி மலர் அணிவிக்கப்பட்டது. … Read more

சீனாவில் உள்ள “வெள்ளை குதிரை” (சுது துரங்க) விகாரை வளாகத்தின் இலங்கை விகாரை மண்டபத்தின் நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும்

சீனாவின் முதல் பௌத்த விகாரையாக கருதப்படும் ஹினன் மாகாணத்தில் உள்ள “வெள்ளை குதிரை ” (சுது துரங்க) விகாரை வளாகத்தில் இலங்கை பாரம்பரிய கட்டிடக்கலை அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் விகாரை மற்றும் ஸ்தூபி அமைக்கும் பணிகள் உடனடியாக ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். பீஜிங்கில் “வெள்ளை குதிரை” (சுது துரங்க) விகாரையின் விகாராதிபதி வண. யின் லீ தேரர் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் நேற்று (19) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் … Read more

உத்தேச காலநிலை மாற்றங்கள் தொடர்பான சர்வதேச பல்கலைக்கழகத்திற்கு ஒத்துழைக்க சீன நிறுவனங்கள் விருப்பம்

காலநிலை மாற்றங்கள் தொடர்பிலான சர்வதேச பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவும் இலங்கையின் யோசனைக்கமைய, அதன் கற்பித்தல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளுக்கான ஒத்துழைப்புக்களை வழங்க சீன நிறுவனங்கள் பலவற்றின் பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சீனாவின் சுற்றாடல் பல்கலைக்கழகம், காலநிலை தொடர்பிலான முகவர் நிலையங்கள் பலவற்றின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (19) பீஜிங் நகரில் நடைபெற்றது. இதன்போது, காலநிலை மாற்றம் தொடர்பிலான சர்வதேச பல்கலைக்கழகத்தை நிறுவும் இலங்கையின் யோசனை மிகவும் காலோசிதமானதாகவும் தூரநோக்குடையதாகவும் காணப்படுகிறது … Read more

மண்டோஸ்(Mandous) புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மண்டோஸ்(Mandous) புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் நேற்று (19) பிற்பகல் ஒரு மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மன்னாா் மெசிடோ நிறுவனத்தினால் ஊர்காவற்றுறை, நெடுந்தீவு , வேலணை, தெல்லிப்பழை , பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலகங்களைச் சேர்ந்த 52 மீனவர்களுக்கு 45000/= பெறுமதியா வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், (மன்னாா்)மெசிடோ … Read more

சீரற்ற கால நிலை காரணமாக இவ் வருடத்திற்கான தேசிய மீலாத் விழா மன்னார் முசலி தேசிய பாடசாலைக்கு இடமாற்றம்.

மன்னார் சிலாவத்துறை முஸ்லிம் மகா வித்யாலயத்தில் இடம்பெறவிருந்த ஜனாதிபதி தலைமையிலான 2023 தேசிய மீலாதுன் நபி விழா சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் முசலி தேசியப் பாடசாலைக்கு இடம் மாற்றப்பட்டுள்ளது. குறித்த விழா சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் ஒன்று மன்னார் முசலி பிரதேச செயலகத்தில் கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ காதர் மஸ்தான் மற்றும் ஜனாதிபதியின் வடமாகணத்துக்கான இணைப்புச் செயலாளர் திரு.இலங்கோவன் அவர்களின் பங்களிப்புடன் இடம் பெற்ற கூட்டத்தின் பின் மேற்கொள்ளப்பட்ட கள விஜயத்தின் பின்பே … Read more

ஜனாதிபதி மற்றும் சீன துணைப் பிரதமருக்கு இடையில் சந்திப்பு

சீன மக்கள் குடியரசுடன் இறப்பர் அரிசி உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டதன் மூலம் இலங்கை, தங்களுக்கு வழங்கிய ஆதரவை சீன மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும், சீனா இலங்கைக்கு தனது ஆதரவை எப்போதும் வழங்கும் என்றும் சீன துணைப் பிரதமர் Ding Xuxiang தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் சீன துணைப் பிரதமருக்கும் இடையில் நேற்று (19) பீஜிங் நகரில் இடம்பெற்ற, இருதரப்பு பேச்சுவார்த்தையின் போதே சீன துணைப் பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “பெல்ட் அண்ட் ரோட்” முன்னெடுப்புத் திட்டத்தின் … Read more

இலங்கை – வியட்நாம் தலைவர்கள் சந்திப்பு

இரு நாடுகளுக்குமிடையில் பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை – வியட்நாம் ஜனாதிபதி தெரிவிப்பு தென்கிழக்காசியா மற்றும் இலங்கைக்கு இடையிலான தொடர்புகளைப் பலப்படுத்திக்கொள்வதற்கான களமாக வியட்நாமை மாற்றியமைக்க தயாரெனவும், இலங்கை மற்றும் வியட்நாமுக்கிடையிலான பொருளாதார, சமூக, கலாசார தொடர்புகளைப் பலப்படுத்தும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதாகவும் வியட்நாம் ஜனாதிபதி வோ வென் தோக் (Vo Van Thuong) தெரிவித்தார் சீனாவில் நடைபெறும் பெல்ட் அண்ட் ரோட் முன்னெடுப்புத் திட்டத்தின் மூன்றாவது சர்வதேச மாநாட்டிற்கு இணையாக, ஜனாதிபதி … Read more

எதிர்கால காலநிலை மாற்றங்களை வலுவாக எதிர்கொள்ள வெப்ப வலய நாடுகளை மையப்படுத்திய விசேட திட்டத்தை செயற்படுத்த வேண்டும்

“இயற்கை இணக்கப்பாட்டுக்கான பசுமை பட்டுப்பாதை” உச்சி மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு. உலகில் வெப்ப வலய நாடுகளே, உயிரியல் பல்வகைத்தன்மையை அதிகமாக கொண்டுள்ளன. எனவே, அந்த நாடுகளை மையப்படுத்தி விசேட வேலைத்திட்டம ஒன்றை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில், எதிர்கால காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். உலகின் 80% உள்ளூர் தாவரங்களும், 50% பவளப்பாறைகள் மற்றும் சதுப்புநிலங்களும் வெப்ப வலயத்திற்குள்ளேயே காணப்படுவதாகவும், அதனை அடிப்படையாக கொண்டே காலநிலை மாற்றம் தொடர்பிலான பல்கலைக்கழகம் … Read more

வடக்கு மாகாண மீன்பிடித் தொழிலுக்கென பிரத்தியேகமான முதலீட்டு வலயம் அமைக்க நடவடிக்கை

வடமாகாணத்தில் மீன்பிடித் தொழிலுக்கு பிரத்தியேகமான முதலீட்டு வலயமொன்றை ஏற்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் மீன்பிடி தொழில் தொடர்பான முதலீடுகளை கொண்டுவர முடியும் எனவும் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்தார். இதன் ஊடாக அதிக எண்ணிக்கையிலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முடியும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். மீன்பிடித் தொழிலுக்கும் மட்டுமன்றி நுகர்வோருக்கும் பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் வகையில் இடைத்தரகர்கள் குழுவொன்று முறையற்ற இலாபம் ஈட்டும் மீன்பிடி மாபியாவை முடிவுக்குக் கொண்டுவர … Read more

சூரியபுர பகுதியிலுள்ள சூரிய ஏரியில் இருந்து காந்தி ஏரிக்கு நீர்வழங்கும் வான் கதவு சேதம்

சீரற்ற காலநிலையால் கந்தளாய் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சூரியபுர பகுதியிலுள்ள சூரிய ஏரியில் இருந்து காந்தி ஏரிக்கு நீர்வழங்கும் வான் கதவு உடைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் குறித்த பிரதேசத்தில் உள்ள பல வீடுகள் மற்றும் வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. அதனையடுத்து, ஏரியிலிருந்து பாயும் நீரை கட்டுப்படுத்தவும், வீடுகளிலும் வீதிகளிலும் வெள்ள நீர் தேங்குவதை தடுக்கவும் பாதுகாப்பு படையினர் மற்றும் கிராம மக்கள் இணைந்து மணல் மூடைகளை அடுக்கி வருகின்றனர். இந்நிலையில், கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் இது … Read more