இந்திய வீட்டுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம்…

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பத்தாயிரம் வீட்டு திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (11.10.2023) கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இதற்கான நிகழ்வில் இலங்கை சார்பில் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள்; அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானும், இந்தியாவின் சார்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கைச்சாத்திட்டனர். அத்துடன், இந்திய அரசின் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள 126 வீடுகள், நிகழ்நிலை ஊடாக திறந்து வைக்கப்பட்டு, பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன. பதுளை, மாத்தளை … Read more

தேசிய லொத்தர் சபையினால் புதிய லொத்தர் சீட்டுக்கள் ஜனாதிபதியின் தலைமையில் அறிமுகம்

தேசிய லொத்தர் சபையின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, புதிய லொத்தர் சீட்டுகளான ‘மெகா மில்லியனர்ஸ்’ மற்றும் ‘மெகா 60’ சந்தைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன் வெற்றியாளர்களுக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (10) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றன. கொவிசெத்த 3471 மற்றும் 3477 சீட்டிழுப்புகளின் போது வெற்றியாளர்களாக தெரிவாக அதுருகிரிய எம்.ஏ. ரசாஞ்சலி பெரோரா (ரூ. 61,271,108.00) மற்றும் மத்துகம கே. சமிந்த ஜெயவிக்ரம (ரூ. 60,503,772.80) … Read more

ஆண், பெண் பாலினம் சார்ந்த வன்முறைகளை தடுப்பதற்காக மிக முக்கியமான 03 சட்டங்களை கொண்டுவர நடவடிக்கை – இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நாட்டில் ஆண், பெண் பாலினம் சார்ந்த வன்முறைகளை தடுப்பதற்கான மிக முக்கியமான 03 சட்டங்களை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகாரம், சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்தியிருக்கும் அதேநேரம், 10 மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் பெண்கள் பாதுகாப்புக்கான மத்தியஸ்தானங்களை நிர்மாணிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (10) … Read more

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கித் தலைவர்களை நிதி இராஜாங்க அமைச்சர் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றின் வருடாந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக மொறோக்கோவிற்குச் சென்ற நிதி இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க மற்றும் உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் அய்யரை சந்தித்து உரையாடினார். இதன்போது இலங்கைக்கு உதவியளிக்கும் திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்டார். உலக வங்கி நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மை மற்றும் மறுசீரமைப்பை வெற்றிகொள்வதற்காக வழங்கும் ஒத்துழைப்புக்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்தார். அத்துடன் இராஜாங்க அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்தின் … Read more

நாட்டை தொழில்நுட்ப, பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு ஜனாதிபதி தனியார் துறையினருக்கு அழைப்பு

தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வணிக செயல்முறை முகாமைத்துவத் தொழில் கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம். தொழில்நுட்பம் மற்றும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்தும் வேலைத்திட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு தனியார் துறையினருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்த அழைப்பு விடுத்தார். தேசிய தகவல் தொழிநுட்பம் மற்றும் வர்த்தக செயல்முறை முகாமைத்துவத் தொழில் கண்காட்சியை இன்று (11) முற்பகல் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் … Read more

ஆயுள்வேதம் (திருத்தம்) சட்டமூலத்தை சான்றுரைப் படுத்தினார் சபாநாயகர்

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆயுள்வேதம் (திருத்தம்) சட்டமூலத்தை சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு (09) சான்றுரைப்படுத்தினார். 1961 ஆம் ஆண்டின் 31 ஆம் இலக்க ஆயுள்வேத சட்டத்தை திருத்துவதற்கு முன்வைக்கப்பட்ட ஆயுள்வேதம் (திருத்தம்) சட்டமூலம் அண்மையில் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய இந்த சட்டமூலம் 2023 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஆயுள்வேதம் (திருத்தம்) சட்டமாக நேற்று முதல் நடைமுறைக்கு வருகின்றது.

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் குடிநீர் விநியோகம்

அண்மையில் பெய்த கடும் மழையினால் பாதிக்கப்பட்ட காலி மற்றும் மாத்தறை மாவட்ட மக்களுக்கு பதினைந்தாயிரம் (15,000) குடிநீர் போத்தல்கள் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திலுள்ள இராஜாங்க அமைச்சில் (ஒக்டோபர் 10) இடம்பெற்றது. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள கிணறுகள் மற்றும் நீர் வழங்கல் சபையின் குடிநீர் வளங்கள் கடுமையாக மாசுபட்டுள்ளதால், தற்போது காலி மற்றும் மாத்தறை … Read more

இந்து-பசிபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வரவேற்றார்

இந்து-பசிபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சர் கௌரவ ஆன்-மேரி ட்ரெவல்யன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (10) இலங்கையை வந்தடைந்தார். பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இந்து-பசிபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க அமைச்சரை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் வரவேற்றார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு அன்ட்ரூ பேட்ரிக்கும் இராஜாங்க அமைச்சர் தென்னகோனுடன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார். கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் (அக். 11) நடைபெறவுள்ள இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கத்தின் … Read more

ஜ.நா உலக உணவு வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய அன்பளிப்பை உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில்

அவசர பதிலளிப்பு வேலைத்திட்டம், பாடசாலை மாணவர்களுக்கான உணவு வேலைத்திட்டம் மற்றும் தேசிய சமூக பாதுகாப்பு வேலைத்திட்டம் என்பவற்றுக்காக ஐக்கிய நாடுகளின் உணவு வேலைத்திட்டத்தின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு  (09) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜப்பானின் வெளிநாட்டு அலுவல்கள் தொடர்பிலான பாராளுமன்ற உப அமைச்சர் கொமுரா மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி ஆகியோருடன் ஜனாதிபதியின் பொருளாதார அலுவல்கள் தொடர்பிலான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ் சமரதுங்க உள்ளிட்ட … Read more

ஐக்கிய ராஜ்ஜியத்தின் இந்து – பசுபிக் அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் மற்றும் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியுடன் சந்திப்பு

இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கத்தின் (IORA) கூட்டத்தில் பங்கேற்க நாட்டிற்கு வருகை தந்திருக்கும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் இந்து – பசுபிக் அலுவல்கள் தொடர்பான இராஜாங்க அமைச்சர் ஏன் – மெரி டெவிலியன் (Anne-Marie Trevelyan) மற்றும் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் கலாநிதி நலேட் பெண்டோர் (Dr. Naledi Pandor) ஆகியோர் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (10) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடினர். இதன் போது முதலாவதாக இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய ராஜ்ஜியத்தின் … Read more