மட்டக்களப்பில் நிலவும் கடும் வறட்சி! பாதிக்கப்பட்டோருக்கு தொடர்ந்தும் குடி நீர் விநியோகம்!!

நாட்டில் நிலவும் கடும் வறட்சியினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுமார் 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை காலமும் இம்மாவட்டத்தில் மழைவீழ்ச்சி எதுவும் கிடைக்கப் பெறாததால் வரட்சியான காலநிலை தெடர்ந்து நிலவுகின்றது. இதனால் மாவட்டத்தின் 6 பிரதேச செயலக பிரிவுகளில் 8,892 குடும்பங்களைச் சேர்ந்த 29,508 நபர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி செங்கலடி பிரதேச செயலக பிரிவில் 2,561 குடும்பங்களைச் சேர்ந்த 8,805 நபர்கள் அதிக பட்சமாக வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர். … Read more

உடலில் நீரிழப்பைத் தடுக்க குழந்தைகளுக்கு இயற்கையான திரவ உணவைக் கொடுங்கள் – குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா

இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று (27) ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர்; மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்த நாட்களில், சில குழந்தைகள் காரணமின்றி … Read more

சுகாதார சேவைகள் மற்றும் மருந்து போன்ற மக்களின் வாழ்க்கை மற்றும் முதன்மையாகப் பிண்ணிப் பிணைந்தவைகள் – சுகாதார அமைச்சர்

சுகாதார சேவைகள் மற்றும் மருந்து போன்றவை மக்களின் வாழ்க்கையுடன் பிண்ணிப் பிணைந்த முடிவில்லாத துறையாக செயற்படும் போது சிறந்த ஒருங்கிணைப்பு மற்றும் முகாமைத்துவம் என்பன முதன்மையாக செல்வாக்குச் செலுத்தும் என சுகாதார அமைச்சர் பேராசிரியர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். மருந்துகளை உற்பத்தி செய்தல், தரப்படுத்துதல், ஒழுங்கமைத்தல், வழங்குதல், விநியோகித்தல் என்பன தொடர்பாக சுகாதார அமைச்சின் சகல நிறுவனங்களின் தலைவர்களுடன் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். சுகாதார மற்றும் மருந்துத் துறையில் இடம்பெறும் ஒவ்வொரு … Read more

இன்று (28) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 ஓகஸ்ட் 28ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2023 ஓகஸ்ட் 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இன்று (28) முதல் அடுத்த சில நாட்களில் நாட்டின் தென்மேற்குப் பிரதேசத்தில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை, மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா … Read more

உகண்டா பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் சபாநாயகரைச் சந்தித்தனர்

உகண்டா பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ எலெய்ஜா ஒகுபு மற்றும் கௌரவ அப்து கடுன்டு ஆகியோர் மரியாதையின் நிமித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை (24) பாராளுமன்றத்தில் சந்தித்தனர். 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உகண்டாவில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மற்றும் தலைமைதாங்கும் அதிகாரிகளின் 27வது மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு இவர்கள் சபாநாயகருக்கு அழைப்பு விடுத்தனர்.இலங்கைக்கும் உகண்டாவுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டு பரஸ்பர கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.    

சட்டவிரோதமான பிரமிட் திட்டங்கள் பற்றிய பொதுமக்கள் முறைப்பாடுகள்

இணையவழித் தளங்க;டாகத் தொழிற்படுகின்ற சில திட்டங்கள் அவை சட்டபூர்வமான திட்டங்கள் என்பதனை நியாயப்படுத்தும் முயற்சியொன்றாக கீழே குறிப்பிடப்பட்டவை போன்ற சில விடயங்களைக் குறிப்பிட்டு இத்திட்டங்களில் பணத்தை வைப்புச் செய்யுமாறுஃமுதலிடுமாறு முதலீட்டாளர்களை தவறாக வழிநடாத்துகின்றன என்பதனைக் குறித்துக்காட்டுகின்ற பல முறைப்பாடுகள் அண்மையில் இலங்கை மத்திய வங்கிக்குக் கிடைக்கப்பெற்றுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குவிதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் இத்திட்டம் முதலீட்டாளர்களின் நிதியங்களைப் பாதுகாக்கின்றது;இத்திட்டமானது தொடர்புடைய வரிகளை அரசாங்கத்திற்குச் செலுத்துகின்றது; நிதியங்களை மீளப்பெறும் பொருட்டு இத்திட்டத்தில் பங்கேற்பவர்கள் தமது நிதியங்களிலிருந்து தனிப்பட்ட … Read more

செங்கலடி பிரதேசத்தில் கமத்தொழில் அமைச்சின் சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு நிகழ்வு

கமத்தொழில் அமைச்சினால் கிழக்கு மாகாணத்தின் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் ”சந்தைப்படுத்தல் ஊக்குவிப்பு” எனும் தொனிப் பொருளினாலான நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (24) இடம்பெற்றது பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில்நடைபெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் நிருபா பிருந்தன் வழிகாட்டலில் பயனாளிகளுக்கான நலனுதவிகளை, வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் கையளித்தார். இதன்போது பிரதேச செயலக காணிப் பிரிவினூடாக 100 காணி … Read more

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சி

  முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம் – மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க. முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறுபராய மேம்பாடு குறித்து முறையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில்   (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே … Read more

அதிக வருமானம் ஈட்டும் சுற்றுலாப் பிரதேசமாக ‘அருகம்பே’யை அபிவிருத்தி செய்யத் திட்டம்

  கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை இரண்டு கட்டங்களின் கீழ் 10 வருடங்களில் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும். அருகம்பே குடிநீர் பிரச்சினையை உடனடியாக தீர்க்குமாறு ஜனாதிபதி பணிப்புரை. வர்த்தக சமூகம் எதிர்நோக்கும் காணி உறுதிப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு. அம்பாறை, அருகம்பே சுற்றுலா வலயத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அதிக வருமானம் ஈட்டக்கூடிய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அபிவிருத்தி செய்யப்பட … Read more

2025 ஆம் ஆண்டளவில் இரத்தினக்கல் ஏற்றுமதியினால் வருடாந்தம் 02 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பு

இரத்தினக்கல் ஏற்றுமதி மூலம் 2025ஆம் ஆண்டாகும்போது வருடாந்தம் 02 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்த்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான விராஜ் டி சில்வா தெரிவித்தார். இந்த வருடத்தின் முதல் 07 மாதங்களில் மாத்திரம் இரத்தினக்கற்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் 312 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாகவும், இவ்வருட இறுதிக்குள் 500 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தலைவர் … Read more