மகாவலி அபிவிருத்தித் திட்டம் போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மூலம் கிழக்கு மாகாணம் முழுமையாக அபிவிருத்தி செய்யப்படும்

இந்திய அரசின் உதவியுடன் திருகோணமலையை பொருளாதார மையமாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை.2019-2023 திருகோணமலை மாவட்டத்தில் வழங்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் – ஜனாதிபதி. 1980களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி, போக்குவரத்து, துறை முகம், கப்பற்துறை, விமானம் , கைத்தொழில் மற்றும் சுற்றுலா … Read more

நாட்டில் தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை

நாட்டில் கடும் வறட்சி நிலவும் நிலையில், குடிநீர் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாகக் கருதி, தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிக்கைக்கமைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற கூட்டதின்போதே இது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நீர்வழங்கல், நீர்பாசனம், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுகள் இணைந்தே இக்கூட்டு வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளன. நாட்டில் நிலவும் … Read more

விளையாட்டு மற்றும் பயிற்சிகள் ஒரு தேசத்தின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கு பங்களிக்கின்றன

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று (24) நடைபெற்ற 47வது தேசிய விளையாட்டுப் போட்டியின் அங்குரார்ப்பண விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் இணைந்து நடத்தும் இந்த தேசிய விளையாட்டுப் போட்டியில் இவ்வருடம் 262 தங்கப் பதக்கங்களும், 262 வெள்ளிப் பதக்கங்களும், 360 வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன. இந்த விளையாட்டுப் போட்டியில், ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 916 விளையாட்டு வீரர்கள் (464 ஆண்கள் … Read more

இலங்கை மற்றும் தாய்லாந்து இருதரப்பு அரசியல் ஆலோசனையின் 5வது சுற்று கொழும்பில் நடைபெறவுள்ளது

இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான 5வது சுற்று இருதரப்பு அரசியல் ஆலோசனைகள் 2023 ஆகஸ்ட் 28ஆந் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெறவுள்ளது. வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் தாய்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான நிரந்தர செயலாளர் சருண் சரோன்சுவான் ஆகியோர் இணைந்து இந்த ஆலோசனைகளில் ஈடுபடவுள்ளனர். அரசியல், வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, கலாச்சாரம் மற்றும் சுற்றுலா உட்பட பரஸ்பரம் ஆர்வங்கள் பகிரப்பட்ட விடயங்கள் மற்றும் தற்போதைய ஒத்துழைப்பை உள்ளடக்கிய இருதரப்பு உறவுகளின் நிலை ஆகியன இந்த … Read more

ஐக்கிய இராச்சியத்தின் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் புலமைப்பரிசில் திட்டத்தை 2024 இல் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை…

ஐக்கிய இராச்சியத்தின் உதவித் திட்டத்தின் 2ஆம் கட்டத்தை இலங்கையில் ஆரம்பிப்பது தொடர்பாக பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் திருமதி லிசா வான்ஸ்டால், பிரித்தானிய சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஃப்ளெமிங் நிதியத்தின் பிரதிநிதிகள் மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் (23) கொழும்பு அலரி மாளிகையில் கலந்துரையாடலொன்று நடைபெற்றது. கோவிட் தொற்றுநோய் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த சுகாதாரப் பாதுகாப்பு உதவித் திட்டம் 2024 ஜனவரியில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பிரிட்டிஷ் பதில் … Read more

அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம்

சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி/பாதுகாப்பு இணைப்பாளர் லெப்டினன் கேணல் அந்தோனி நெல்சன் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் உதவி பாதுகாப்பு இணைப்பாளர் திரு. செத் நிவின்ஸ் ஆகியோர் புதன்கிழமை (ஓகஸ்ட் 23) யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். வருகை தந்த பிரதிநிதிகளை யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எஸ்கேஆர் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களால் வரவேற்கப்பட்டார்கள். இந்த சந்திப்பின் போது யாழ். தளபதி மற்றும் பிரதிநிதிகள் … Read more

பிரிவெனா ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் – பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட

பிரிவெனா ஆசிரியர்களின் ஓய்வூதியப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக பிரிவெனாக் கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட தெரிவித்தார். அதற்காக ஓய்வூதியச் சட்டம் மற்றும் பிரிவெனாக் கல்விச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அதற்கு அவசியமான ஆலோசனைகள் குறித்து ஓய்வூதியத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைவுத் திணைக்களம் ஆகியவற்றின் பரிந்துரைகளின்படி, அமைச்சரவையின் அங்கீகாரம் பெறுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று … Read more

சந்திராயன் 3 விண்கலத்தை சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்கிய இந்தியாவின் வரலாற்று சாதனைக்கு ஜனாதிபதி வாழ்த்து

சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்தியா அடைந்துள்ள தனித்துவமான சாதனைக்காக இந்திய பிரதமர் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியா பெற்றுள்ள இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி தொடர்பில் அண்டை சகோதர நாடாக இலங்கையும் பெருமிதம் கொள்வதாக மேலும் குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க … Read more

நாட்டில் இயங்கும் 90% வாகனங்களின் புகை வெளியீடு தரக்குறைவானது

நாட்டுக்குள் பஸ்களை கொண்டுவருவது தொடர்பில் குறைந்தபட்ச தரநிலையை தீர்மானிக்கும் பிரமாணங்களுக்கு வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பவைக் குழுவில் அனுமதி இந்நாட்டில் இயங்கும் 90% வாகனங்களின் புகை வெளியீடு தரக்குறைவானது என பாராளுமன்ற வலுசக்தி மற்றும் போக்குவரத்து பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் புலப்பட்டது. இந்தக் குழு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ நாலக பண்டார கோட்டேகொட தலைமையில் ஆகஸ்ட் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் கூடியதுடன், துறைசார் மேற்பவைக் குழுக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் பிரதிநிதிகளும் குழுவில் … Read more

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்பார்த்துள்ள மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி வழிகாட்டல் – கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார். நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் … Read more