நியூசிலாந்து முன்னாள் பிரதமர்களான ஜசிந்தா ஆடர்ன், ஹெலன் கிளார்க் ஆகியோருடன் சந்திப்பு

நியூசிலாந்துக்கு ஆய்வுப் பயணமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைப் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நியூசிலாந்து முன்னாள் பிரதமர்களான ஜசிந்தா ஆடர்ன் மற்றும் ஹெலன் கிளார்க் ஆகியோரை அண்மையில் சந்தித்ததுள்ளது. இந்தச் சந்திப்பில் அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், பாலின சமத்துவ ரீதியான பல்வகைத் தன்மையைக் கட்டியெழுப்புதல் தொடர்பில் முன்னாள் பிரதமர்களுடன் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. 2017 முதல் 2023 வரை நியூசிலாந்தில் பிரதமர் பதவியை வகித்த ஜசிந்தா ஆடர்ன் தனது பதவி காலத்தில் பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் போன்று கொவிட் … Read more

101வது தேசிய தடகள சம்பியன்ஷிப் போட்டியில் இராணுவ தடகள வீரர்கள் வெற்றி

சுகததாச தேசிய விளையாட்டரங்கில் ஜூலை 28- 30 ம் திகதி வரை தேசிய தடகள கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 101வது தேசிய தடகள சம்பியன்ஷிப் – 2023 போட்டியில் இலங்கை இராணுவ வீர வீராங்கனைகள், 16 தங்கப் பதக்கங்கள், 23 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 22 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ளனர். இராணுவத்திற்கான தடகள விளையாட்டு போட்டியில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 5000 மீ, 10,000 மீ, 110 … Read more

உலக தெங்கு தினத்தை முன்னிட்டு வட மாகாணத்தில் தெங்கு முக்கோணம் ஆரம்பிக்கப்படும்

இவ்வருடத்தில் 290 மில்லியன் கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்ய எதிர்பார்ப்பு.இறப்பர் உற்பத்திகளில் 900 மில்லியன் டொலர், தென்னை சார் உற்பத்திகளில் 700 மில்லியன் டொலர் வருமானம் இவ்வருடத்தில் எதிர்பார்க்கப்படுகிறது.கறுவா உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு முறையான திட்டம்.இலங்கையில் கோப்பி பயிற்செய்கையை மீள விரிவுபடுத்துவது குறித்து கவனம் – அமைச்சர் ரமேஷ் பத்திரன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய செப்டெம்பர் 02 ஆம் திகதி உலக தெங்கு தினத்தை முன்னிட்டு நாட்டின் இரண்டாவது தெங்கு முக்கோணத்தை யாழ்ப்பாணம் ,மன்னார் மற்றும் முல்லைத்தீவு … Read more

இவ் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் சுற்றுலாத்துறையினூடாக 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்

2023 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் வருகை: 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் 2022 உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை 205% அதிகரிப்பு.சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக World Travel Awards இறுதிப் போட்டியை இலங்கையில் நடத்துவது குறித்து அவதானம்.சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க இரவு நேரப் பொருளாதார முறைமை (Night Economy)- சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே.இவ்வருடத்தின் முதல் ஏழு மாதங்களில் 763,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை … Read more

யாழ்ப்பாணம் அரியாலை கடற்கரை பகுதியில் இருந்து 51 வர்த்தக வெடி பொருட்கள் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் 2023 ஜூலை மாதம் 29 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது அரியாலை கடற்கரைப் பகுதியில் மிக நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 51 வர்த்தக வெடி பொருட்களை கைப்பற்றியுள்ளனர். வெடிமருந்துகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடித்தலால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் வேலுசுமண நிறுவனத்தின் … Read more

அமைச்சர் ஜீவன் – தமிழக முதலமைச்சர் ஆகியோரக்;கு இடையிலான கலந்துரையாடல்

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து (29) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது பல்வேறுப்பட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன என்று அமைச்சரின் முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இங்கு பின்வரும் விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. – மலையக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைப்பு– எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள மலையகம் – 200 நிகழ்வு குறித்தும் விளக்கமளிப்பு– இந்தியா சிறந்த முதலீட்டு வலயமாக மாறியுள்ள நிலையில், … Read more

போலி பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபான போத்தல்களை அடையாளம் காண புதிய செயலி

போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்குப் புதிய செயலியொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு வழிவகைகள் பற்றிய குழு, மதுவரித் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் போலியான பாதுகாப்பு ஸ்டிக்கர்களுடன் கூடிய மதுபானப் போத்தல்களை அடையாளம் காண்பதற்குப் புதிய செயலியொன்றை உடனடியாகத் தயாரிக்குமாறு வழிவகைகள் பற்றிய குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, இலங்கை மதுவரித் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கினார். 2023.07.24 ஆம் திகதி மதுவரித் திணைக்களத்துக்குக் களப்பயணமொன்றை மேற்கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். … Read more

கடல் அட்டைகள் பதப்படுத்தும் நிலையம் கிளிநொச்சியில் திறந்து வைப்பு

கடல் அட்டைகள் பதப்படுத்தும் நிலையம் ஒன்று கிளிநொச்சி பள்ளிக்குடா பிரதேசத்தில் கடந்த 28 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தவினால் திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கடல் அட்டைகள் வளர்க்கப்படுகின்றன. இவ்வாறு வளர்க்கப்படுகின்ற கடல் அட்டைகள் வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்காhன பதப்படுத்தல் நிலையமாக இது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்போது கருத்துத் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர்… வடமாகாணத்தில் மீனவ சமூகம் மற்றும் வியாபாரிகள் கடல் அட்டைகளை வளர்ப்பதில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். … Read more

ஜப்பான் அரசால் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு இடை நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை  மீள ஆரம்பிப்பது குறித்து கவனம்

ஜப்பானிய அரசின் ஆதரவுடன் இந்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு இடை நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை விரைவில் மீள ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஜப்பானின் அமைச்சரவை அலுவலக இராஜாங்க அமைச்சர் புஜிமாரு சடோஷி (FUJIMARU Satoshi) மற்றும் பிராந்திய மறுமலர்ச்சி மற்றும் கண்காணிப்பு மறுசீரமைப்புக்கான முன்னாள் இராஜாங்க அமைச்சர் யமமோட்டோ கோசோ(YAMAMOTO Kozo) ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தனர். ஜப்பானிய அரசாங்கத்தின் அனுசரணையுடன் இந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டு தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை மக்களுக்குப் … Read more

சுகாதாரத் துறையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமன்றி அனைவரினதும் பொறுப்பாகும் – வைத்தியர் ரத்னசிறி ஹேவகே.

தரம் குறைந்த மருந்துகள் என்று எதுவும் இல்லை – பதிவு செய்யப்படாத மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதில்லை – ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே. உலகிலேயே தலைசிறந்த சுகாதார கட்டமைப்புடன் கூடிய நமது நாட்டின் இலவச சுகாதாரத் துறையைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, சுகாதாரத் துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மட்டுமன்றி ஊடகங்களினதும் பொறுப்பாகும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனை பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே … Read more