பாதுகாப்பு சேவைகள் விளையாட்டில் இராணுவ காற்பந்து வீரர்கள் சாம்பியன்ஸ்

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு – 2023 (ஆண்கள்) காற்பந்து சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் திங்கட்கிழமை (22) நடைபெற்றதில் இலங்கை இராணுவ காற்பந்து வீரர்கள் இரண்டு கோல்களை அடித்து காற்பந்து ரசிகர்களை பரவசப்படுத்தினர். இரு அணிகளும் தீவிரமாக விளையாடிய போதிலும் இலங்கை இராணுவ காற்பந்து வீரர்கள் கடற்படை அணியை தோற்கடித்து வெற்றியைடைந்தனர். இலங்கை இராணுவ பொது சேவை படையணியின் கோப்ரல் எல்சிஎஸ்கே மென்டிஸ் மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் லான்ஸ் கோப்ரல் எம்எஎ. … Read more

அரசாங்க நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாகன முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

அரசாங்க நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக கோபா குழுவினால் 2023.03.23 ஆம் திகதி பிரதமரின் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் 2023.03.23ஆம் ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கூடியபோது அரசாங்க நிறுவனங்களில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது தொடர்பில் திகதிகளுடன் கூடிய வேலைத்திட்டமொன்றை 2023.05.15ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு அறிவுறுத்தி பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டது. இதற்கு அமைய அக்குழுவினால் தயாரிக்கப்பட்ட வேலைத்திட்டத்தை … Read more

நீதி அமைச்சின் ஏற்பாட்டில் மாபெரும் நடமாடும் சேவை!!

நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு அமைச்சினால், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 2023.05.27 திகதி காலை 9.00 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் இம்மாபெரும் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த அகதிகளின் பிரச்சினைகள் போன்றவற்றிற்கு ஒரே நாளில், ஒரே இடத்தில் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கான மாபெரும் நடமாடும் சேவை மட்டக்களப்பில் இடம்பெறவுள்ளது. மட்டக்களப்பு … Read more

வடக்கில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு அனைத்து ஒத்துழைப்புகளும் வழங்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

வடக்கு மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வை வழங்குவதற்கு தன்னால் முடிந்த அனைத்து ஒத்துழைப்புகளும் நிச்சயம் வழங்கப்படும் என்று நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் உடனான சந்திப்பின்போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வடக்கு மாகாணத்தில் குடிநீர் பிரச்சினையை எதிர்கொண்டுள்ள … Read more

இலங்கையில் வெற்றிலையில் இருந்து புதிய கண்டுபிடிப்பு!

வெற்றிலையைப் பயன்படுத்தி இனிப்பு பண்டம் ஒன்றை உற்பத்தி செய்ய முடிந்ததாக ஊடுபயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரவீனா திஸாநாயக்க தெரிவித்தார். வெற்றிலையைப் உபயோகித்து பெறுமதி சேர்க்கப்பட்ட பொருட்களை அறிமுகப்படுத்த நடத்தப்பட்ட ஆராய்ச்சியின் விளைவாக, வெற்றிலை பாக்கு உற்பத்தியின் ஆராய்ச்சி வெற்றிகரமாக உள்ளது. இதேவேளை, வெற்றிலை, பாக்கு மற்றும் சுண்ணாம்பு சாப்பிடுபவர்களுக்கும், வெற்றிலையை மென்று சாப்பிடும் பழக்கமுள்ளவர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கும் கொடுக்கும் வகையில் இனிப்பு பண்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், புகையிலைக்கு பதிலாக அதிக … Read more

சீன அரசாங்கத்தின் மண்ணெண்ணெய் – கடற்றொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிப்பு

காலத்தின் தேவையறிந்த உதவிக்கு அமைச்சர் டக்ளஸ் நன்றி தெரிவிப்பு சீன அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்காக வழங்கப்பட்ட, மண்ணெண்ணெய் விநியோகிக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு நேற்று (23.05.2023) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் இலங்கைக்கான சீன தூதுவர் கீ ஷென்ஹொங் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இதனடிப்படையில் நாடளாவிய ரீதியில் உள்ள சுமார் 128 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக 27,000 மீன்பிடி படகுகளின் உரிமையாளர்களுக்கு தலா 150 லீற்றர் … Read more

 நலன்புரி நன்மைகள் ஜூலை முதல் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்புச் செய்யப்படும்

அதிக வருமானம் பெறுவோர் சமுர்த்தி உள்ளிட்ட நலன்புரி உதவிகளைப் பெறுவோர் கட்டமைப்பில் தன்னிச்சையாக இருந்து நீக்கப்படுவர். மிகவும் ஏழ்மையில் உள்ள குடும்பத்திற்கு மாதம் 15,000 ரூபாய் உதவி.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் அமுல்படுத்தப்பட்டுள்ள ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகள், சமுர்த்தி மற்றும் முதியோர் உதவித்திட்டம் உட்பட தற்போது அரசாங்கத்தால் வழங்கப்படும் நலன்புரி உதவிகளை ஜூலை முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. நலன்புரி பயனாளிகள் தமது கொடுப்பனவுகளை … Read more

ஜப்பான் – இலங்கை நட்புறவு சங்கம் இலங்கை விமானப்படைக்கு தீயணைப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது

ஜப்பான் இலங்கை நட்புறவுச் சங்கம் திங்கட்கிழமை (மே 22) நடைபெற்ற வைபவத்தில் இலங்கை விமானப்படைக்கு தீயணைப்பு வாகனம் மற்றும் இரண்டு ஏணிகளையும் அன்பளிப்பு செய்துள்ளது. மேலும், தூதுக்குழுவினர் விமானப்படை வீரர்களின் பாடசாலை மாணவர்களுக்கு 13 புலமைப்பரிசில்கள் மற்றும் வாசிப்பு கண்ணாடிகள் ஆகியவற்றை திரு. கோடோ ஹிடேகி அவர்களின் ஆதரவுடன் வழங்கிவைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது. விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது, ஜப்பான்-இலங்கை நட்புறவு சங்கத்தின் தூதுக்குழுவினரால் இந்த நன்கொடை விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் … Read more

முல்லைத்தீவு இராணுவம் பயன்படுத்திய காணிகள் பொதுமக்களுக்கு விடுவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் இதுவரை இராணுவத்தின் செயற்பாடு மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளை விடுவிக்கும் கொள்கைக்கு அமைவாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகம் மொத்தம் 70.05 ஏக்கர் காணிகளை வியாழக்கிழமை (18) விடுவித்தது. 68 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரி முதலி ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் புதுக்குடியிருப்பு 68 வது காலாட் … Read more

மாலியில் இலங்கை அமைதி காக்கும் நான்கு படையினர் குண்டுவெடிப்பில் காயம்

மாலியில் ஞாயிற்றுக்கிழமை (21) மாலியில் ஐ.நா.வின் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்கு இலங்கை வீரர்கள், மினுஸ்மா (மாலி ஐ.நா பணி) மாலியில் ஞாயிற்றுக்கிழமை (21) குண்டு வெடித்ததில் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இலங்கை அமைதி காக்கும் படையினர் கவச வாகனத்தில், வழங்கல் வாகனத் தொடரணிக்கு பாதுகாப்பு வழங்குகின்றமை குறிப்பிடதக்கதாகும். பழங்குடியினக் கலவரங்களால் சிதைந்த நிலப்பரப்பு நாடான மாலியின் கிடால் பகுதியில் உள்ள டெஸ்ஸாலிட்டில் அவர்களின் முகாமுக்கு வடமேற்கே சுமார் 15 கிமீ தொலைவில் வெடிப்பு ஏற்பட்டது. … Read more