“ஹெல்த் டுவரிஸம்” மேம்படுத்துவதில் அரசு கவனம்

மக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதுடன், நாட்டுக்கு அந்நியச் செலாவணியை பெற்றுத்தரும் துறையாகவும் தாதியர் சேவையை மேம்படுத்த வேண்டும் – சர்வதேச தாதியர் தின நிகழ்வில் சாகல ரத்நாயக்க தெரிவிப்பு. “ஹெல்த் டுவரிஸம்” (Health Tourism) மூலம் நாட்டுக்கு வருமானம் ஈட்டும் வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்க எதிர்பார்க்கப்படுவதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கை போன்ற அழகிய சூழலைக் கொண்ட நாட்டில் “ ஹெல்த் டுவரிஸம்” வேலைத்திட்டம் சாதகமாக … Read more

நாட்டின் பல பாகங்களுக்கு இடியுடன் கூடிய மழை

நாட்டின் பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 12ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ … Read more

உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள்…

உரத்திற்கான வவுச்சர்கள் மே மாத இறுதிக்குள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த வவுச்சர்கள் இன்று அச்சிடுவதற்காக அரசாங்க அச்சகத்திற்கு வழங்கப்படும். அவற்றை 10 நாட்களுக்குள் அச்சடித்து முடிக்க முடியும். இந்த வவுச்சர்களை குறிப்பாக பண்டி உரம் கொள்வனவு செய்வதற்காக பயன்படுத்தவும். அத்துடன் இந்த வவுச்சர் ஊடாக விருப்பமான … Read more

தேர்தல் வேட்பாளர்களான அரச உத்தியோகத்தர்கள் வாக்களிக்கும் நிலையங்களுக்கு அருகில் உள்ள தொகுதிகளில் பணியாற்றுவது குறித்து சிக்கல்கள் இருந்தால் தீர்வு வழங்கப்படும்

தேர்தல் வேட்பாளர்களான அரச உத்தியோகத்தர்கள், தேர்தலில் போட்டியிடும் இடத்திற்கு அண்மையிலுள்ள பிரதேசங்களில் சேவையில் ஈடுபடுவது தொடர்பில் சிக்கல்கள் காணப்படுமிடத்து கலந்துரையாடி தீர்வு வழங்கப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன நேற்று (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேர்தல் சட்டம் ஒன்று இருப்பதால், பொது நிர்வாக அமைச்சின் அதிகாரிகளால் மாத்திரம் அந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. எனவே தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு இருக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் சிலருக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக, பாராளுமன்ற … Read more

யாழில் விசேட நுளம்புக் கட்டுப்பாட்டு செயற்திட்டம் – மே 16, 17 ஆம் திகதிகளில்

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் பரம்பல் அதிகரித்து வருகின்ற நிலையில் தற்போதைய காலநிலை காரணமாக டெங்கு நோய் பரப்பும் நுளம்புகள் அதிகரிப்பதற்கு அபாயநிலை காணப்படுகின்றது. இதனை கருத்தில் கொண்டு மே மாதம் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் யாழ் மாவட்டத்தில் விசேட நுளம்பு கட்டுப்பாட்டு செயற்திட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக யாழ் மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை முன்னெடுக்காதுவிடின் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அடுத்துவரும் மாதங்களில் அதிகரித்துச் செல்லும் என அஞ்சப்படுகின்றது. சுகாதார … Read more

ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது – ஜனாதிபதி

ஆசியாவின் முதலாவது மாநாட்டு மண்டபமான பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் நிர்மாணிக்கப்பட்ட 50 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.! ஆசியாவின் ஒற்றுமைக்கு இடையூறு விளைவிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இலங்கை ஆதரவளிக்காது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஆசிய பூகோள அரசியலுக்கும் பசுபிக் பிராந்திய அரசியலுக்கும் இடையில் பல வேறுபாடுகள் காணப்படுவதாகவும், அந்த வேறுபாடுகளை நாம் உணர்ந்து சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையையும் பேணுவதற்கு செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அடுத்த இரண்டு … Read more

காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி பணிப்புரை

நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை வழங்கினார். காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம் மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துக்களை திருத்துவது உள்ளீடு செய்வது தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். காலணித்துவ ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட காணிச் … Read more

உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படும்

காலநிலை மாற்றத்தை தடுப்பதற்குப் பதிலாக அதனை தாமதப்படுத்தல் மாத்திரமே இதுவரை நடந்துள்ளது- சுற்றுச்சூழல் முன்னோடி பதக்கம் வழங்கும் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. உலகின் முதலாவது சர்வதேச சுற்றாடல் பல்கலைக்கழகம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படும் எனவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு உலக நாடுகளுக்கு ஆதரவளிப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றம் இன்று உலகிற்கு சவாலாக உள்ள போதிலும் அது தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கான நிலையமொன்று கிடையாது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஏனைய நாடுகளை இணைத்து அதற்கான … Read more

கடற்படை வரலாற்றில் முதன்முறையாக பெண் மாலுமிகள் கடல் கடமைகளுக்கு நியமிப்பு

கடற்படை பெண் மாலுமிகளுக்கான கடல் கடமைகளுக்கு வாய்ப்பை திறந்து வைக்கும் வகையில் இலங்கை கடற்படை வரலாற்றில் முதல் தடவையாக இரண்டு (02) பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து (05) பெண் மாலுமிகள் அடங்கிய முதலாவது பெண் மாலுமிகள் குழு கடல் கடமைகளுக்காக நேற்று காலை (11) இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் இணைக்கப்பட்டனர். இதுவரை ஆண் மாலுமிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்ட கப்பல்கள் மற்றும் படகுகளின் கடமைகளுக்கான வாய்ப்பை பெண் மாலுமிகளுக்கு வழங்கும் கடற்படையின் முடிவின்படி, 2022 அக்டோபர் மாததில், … Read more

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ILO) பங்களிப்பு அவசியம்

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்புக்கு சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் (ILO) பங்களிப்பும் அவசியம் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். சர்வதேச தொழிலாளர் சம்மேளனத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸினருக்கும் இடையிலான சந்திப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையகமான சௌமிய பவனில் (10) நடைபெற்றது. இதன்போது மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவர்களுக்கான பாதுகாப்பு பொறிமுறை, சர்வதேச தொழில் … Read more