கடலில் பயணம் செய்வோருக்கும், மீனவ சமூகத்திற்கும் எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.  அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 10ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது ஆழமான ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து 2023 மே 10ஆம் திகதி 08.30 மணிக்கு வட அகலாங்கு 8.80 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு … Read more

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. 2023 மே 10ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 … Read more

கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் அவதானமாக இருக்க வேண்டும்

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 மே 10ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கமானது 2023 மே 9ஆம் திகதி 23.30 மணிக்கு வட அகலாங்கு 8.50 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 89.30 E இற்கும் அருகில் மையம் … Read more

“அஸ்வெசும” நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு ஜூலை 01 முதல் வழங்கப்படும்

33 இலட்சத்துக்கும் அதிகமானோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் “அஸ்வெசும”(ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் … Read more

தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு இம்முறையும் பெருமையுடன் நடைபெறும்

இலங்கையில் முப்பது வருடகால யுத்தத்தின் போது வீரமரணம் அடைந்த படைவீரர்களுக்கு தேசத்தின் நன்றி தெரிவிக்கும் தேசிய படைவீரர் நினைவுதின நிகழ்வு முப்படைத்தளபதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பூர்வாங்க கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் (08) காலை ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் இடம்பெற்றது. எதிர்வரும் மே 19 ஆம் திகதி பத்தரமுல்லை படைவீரர் நினைவுத்தூபிக்கு முன்பாக தேசிய படைவீரர் … Read more

சர்வதேச சந்தைகளில் யாழ். வாழைப்பழம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்தி உள்ளூர் உற்பத்திகளை சர்வதேச சந்தைகளுக்கு எடுத்துச் செல்லுகின்ற போது, எமது மக்களின் பொருளாதாரத்தினை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம், புத்தூரில் அமைக்கப்பட்டுள்ள, வாழைப்பழ ஏற்றுமதி தொழிற்சாலையை அண்மையில் பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் ஆழமான தீர்க்கதரிசனமான முயற்சிகளை முன்னெடுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார். உலக வங்கி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதியுதவியில் விவசாய செயற்பாடுகளை நவீனமயப்படுத்தும் திட்டத்திற்கு அமைய … Read more

லண்டன் பௌத்த விகாரையில் ஜனாதிபதி வழிபாடு

மூன்றாம் சார்ள்ஸ் மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்பதற்காக லண்டன் நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (07) லண்டனிலுள்ள பௌத்த விகாரையில் வழிபாடுகளில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து பௌத்த விகாராதிபதி இங்கிலாந்தின் பிரதான சங்கநாயக்கர் பேராசிரியர் வண.போகொட சீலவிமல நாயக்க தேரரிடம் ஆசி பெற்றுக்கொண்ட ஜனாதிபதி அவருடன் கலந்துரையாடி நலம் விசாரித்தார். பின்னர் வண.போகொட சீலவிமல நாயக்க தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆசிகளை வழங்கினர். இதன்போது … Read more

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆவண உறுதிப்படுத்தல் செயன்முறை தாமதம்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவில் உள்ள கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரங்கள் பிரிவு மற்றும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மாத்தறை, கண்டி, குருநாகல் பிராந்திய அலுவலகங்கள் ஆகியவற்றின் ஆவண அங்கீகார செயன்முறை மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்படவுள்ளது. சுமூகமான ஆவண அங்கீகார செயன்முறைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் முகமாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு துரிதமான திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தற்போது, மிகவும் … Read more

இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி

3 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்க ஆப்கானிஸ்தான் அணி ஜூன் மாதம் இலங்கை வரவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. ஜூன் 2 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த ஒரு நாள் போட்டியில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி மே 29 ஆம் திகதி இலங்கை வரவுள்ளது. இவ்வாணிகளுக்கிடையிலான போட்டிகள் அனைத்தும் ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெறவுள்ளது. முதலாவது போட்டி ஜூன் 2 ஆம் திகதியும், இரண்டாவது நாள் போட்டி ஜூன் 04 … Read more

டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு மாகாண பிரதம செயலாளர்களுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

டெங்கு நோயை கட்டுப்படுத்த பொலிஸ் , முப்படைகளின் முழுமையான ஆதரவு. பொதுமக்களின் முழு ஒத்துழைப்பு எதிர்பார்ப்பு. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம், டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு, அனைத்து மாகாண செயலாளர்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க எழுத்து மூலம் நேற்று (09) அறிவித்துள்ளார். டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டத்தின் தேவைக்கு ஏற்ப பிரதம செயலாளர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பொலிஸாருக்கும் முப்படைக்கும் ஜனாதிபதியின் செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த வாரத்தில் நாடளாவிய ரீதியில் … Read more