இலங்கை மக்களுக்கு சேவை செய்ய தயார் – அதிமுக குழுவினர்

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள தமிழகத்தின் முன்னாள் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையிலான அதிமுக குழுவினர், நேற்று (08) அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தித்துள்ளனர். இதன்போது எம்.ஜி.ஆர். அறக்கட்டளை மூலம் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பில் அமைச்சரிடம் எடுத்துரைத்த அவர்கள், இலங்கை மக்களுக்கும் சேவை செய்ய தயாராக இருப்பதாக தமது விருப்பத்தை தெரிவித்துள்ளனர். இதற்கமைய இந்த குழுவினர் இன்றும், நாளையும், மலையக பகுதிகளுக்கு விஜயம் செய்து, மக்களுடன் கலந்துரையாடவுள்ளனர். இந்த குழுவினரால் மக்களுக்கான உதவி திட்டங்கள் முன்னெடுக்கும் பட்சத்தில் … Read more

இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் இந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட மாட்டாது – பிரதமர்

மத்திய வங்கி சட்டமூலங்களை இந்த வாரம் பாராளுமன்றத்தில் விவாதிக்காமல் ஒத்திவைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இன்று (09) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

ஐரோப்பா மற்றும் ஜப்பானின் மீன் தேவையை பூர்த்தி செய்து, நாட்டின் மீன்பிடி தொழிற் துறை ஏற்றுமதி மையமாக மாற்றப்படும் – பிரதமர்

(2023.05.08) கொழும்பு இலங்கை மன்றத்தில் நடைபெற்ற சீநோர் நிறுவனத்தின் ஐம்பத்தைந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமர்ப்பிக்கப்பட்ட ஐந்தாண்டுத் திட்டம் மற்றும் இணையத்தள வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். உயர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறைந்த செலவில் அதிக மீன் உற்பத்திக்கான படகுகளை உற்பத்தி செய்வதன் மூலம் கடற்றொழில் அமைச்சின் திட்டங்களுக்கு பங்களிக்கும் சீநோர் நிறுவனம் 1967 இல் நோர்வே அரசாங்கத்தின் அனுசரணையுடன் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், “எமது நாடு … Read more

வெளிநாட்டு முதலீட்டை விரைவாக ஈர்க்கும் வகையில் விசேட பெக்கேஜ் ஒன்று…

வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்குவதற்கான விசேட பெக்கேஜ் ஒன்றை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விரைவில் அறிவிக்க உள்ளார் என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (09) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். முதலீட்டாளர்கள் அச்சமின்றி இலங்கையில் முதலீடு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்தால் மாத்திரம் தான் அவர்கள்; இலங்கைக்கு வருவார்கள் என தெரிவித்த அமைச்சர், … Read more

யாழ்ப்பாணத்தில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 85 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா

யாழ்ப்பாணம், மண்டத்தீவின் தென் கரையோரப் பகுதியில் நேற்று (08) இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 85 கிலோவுக்கும் அதிகமான (ஈரமான எடை) கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் கடற்கரையை உள்ளடக்கி கடற்படை பல ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதற்கமைய, நேற்று (08) காலை யாழ்ப்பாணம், மண்டத்தீவின் தெற்கு கடற்கரையில், வடக்கு கடற்படை கட்டளைக்கு … Read more

இலாபமீட்டும் துறையாக கடற்றொழில் துறை மாறிவருகிறது – பிரதமர்

நஷ்டத்தில் இயங்கிவந்த கடற்றொழில் துறை இலாபமீட்டும் துறையாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர்ச்சியான முயற்சி காரணமாக மாற்றியமைக்கப்பட்டு வருவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில் செயற்பட்டு வருகின்ற சீநோர் நிறுவனத்தின் 55 ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்று (08) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நோர்வே அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட சீநோர் நிறுவனமானது மரத்தினாலான படகுகளையே நிர்மாணித்து … Read more

திருகோணமலையிலிருந்து கண்டி வரை பாத யாத்திரை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல்

இலங்கைத் தீவிற்கு சமய சகல துணை உரிமை கிடைக்கப்பெற்று 270 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு தாய்லாந்து நாட்டின் சுமார் 50க்கும் மேற்பட்ட பிக்குகளால் திருகோணமலையிலிருந்து கண்டி வரை பாத யாத்திரை மேற்கொள்வது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (08) திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மே மாதம் 14 திகதி திருகோணமலையிலிருந்து ஆரம்பமாகும் இப்பாதயாத்திரை மே மாதம் 23 ஆம் திகதி பயணத்தின் முடிவான கண்டி மல்வத்தை மற்றும் அஸ்கிரி மகா விகாரைகளை சென்றடைய எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது பாதயாத்திரை … Read more

தேசிய தாதியர் பல்கலைக்கழகத்தை நிறுவ கொள்கை ரீதியான ஒப்புதல்

தற்போது சுகாதார அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற தாதியர் கல்லூரியை, இலங்கை தேசிய தாதியர் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு (2023-05-08) :  

உள்நாட்டு கோதுமை மாவின் விலையை 5 சதத்தினாலேனும் அதிகரிக்கவில்லை

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற கோதுமை மாவின் விலையை 5 சதத்தினாலேனும் அதிகரிக்கவில்லை, என்று அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். மாறாக, இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை மாத்திரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் கோதுமை மா உற்பத்தி செய்யும் நிறுவனங்களிடம் அடுத்த 06 மாதங்களுக்கு தேவையான கோதுமை மா கையிருப்பு காணப்படுகின்றது என்பதை நாட்டு மக்களுக்கு அறிவிக்குமாறு உள்நாட்டு கோதுமை மா உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க … Read more

அரச வைத்தியசாலைகளில், கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை அமைக்க அமைச்சரவை அனுமதி

அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை விரிவாக்கம் செய்வது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆலோசனைக்கு அமைச்சரவை நேற்று (08) அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று (09) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான பந்துல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய, இலங்கை பிரஜைகளுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் அரச வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தும் நோயாளர் விடுதி வசதிகளை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது இதுதொடர்பான அமைச்சரவை முடிவு வருமாறு :