அடுத்த கட்ட ஐஎம்எப் பேச்சுவார்த்தையில் அரசு ஊழியர்களுக்கு முதல் சலுகை…

எதிர்வரும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுவார்த்தையில் நிவாரணம் கிடைக்குமாயின் முதலில் அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமென அரசாங்கம் கொள்கையாக தெரிவித்துள்ளது என்ற அமைச்சரவை பேச்சாளர், ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்கம் என்ற ரீதியில் நாம் ஒரு துறையைப் பற்றி மாத்திரம் சிந்திப்பதில்லை. எனவும், இந்த நேரத்தில் அனைத்து … Read more

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிப்பு – யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்

யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துவருவதாக யாழ் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். மலேரியா பரவும் வாய்ப்புள்ள நாடுகளுக்கு சென்று வருபவர்கள் சுகாதார மற்றும் மலேரியா தடுப்பு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். டெங்கு மற்றும் மலேரியா நோய் தொடர்பாக நேற்றைய தினம் (02) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில் மட்டும் சுமார் 1132 டெங்கு நோயாளிகள் … Read more

காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் விசேட வெசாக் நிகழ்ச்சி இன்று ஆரம்பம்

புத்த ரஷ்மி தேசிய வெசாக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, காலி முகத்திடல் ஷங்ரிலா பசுமை மைதானம் மற்றும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மே 03, 04, 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் வெசாக் தோரணங்கள், வெசாக் கூடுகள், பக்திப் பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று (03) மாலை 7.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக படிக்கட்டுகளுக்கு முன்பாக வண்ணமயமான பக்திப் பாடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதுடன், இந்நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் பங்கேற்க உள்ளார். மே … Read more

இந்திய விமானப்படை தளபதி இலங்கை கடற்படை தளபதியுடன் சந்திப்பு

இலங்கைக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்தியவிமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதாரி, நேற்று (02) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவை சந்தித்தார். அதன்படி, கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீஃப் மார்ஷல் விவேக் ராம் சௌதாரி கடற்படை மரபுகளுக்கு இணங்க வரவேற்கப்பட்டதுடன் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, இந்திய விமானப்படைத் தளபதியை அன்புடன் வரவேற்று, … Read more

இன்றிலிருந்து வெசாக் வாரம்

அரச வெசாக் விழா மே மாதம் 04-05 ஆம் திகதிகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வின் தலைமையில் புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் மாதம்பே கெபெல்லேவல ஸ்ரீ ரதனஷிலி பிரிவென விகாரையில் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை முன்னிட்டு இன்றிலிருந்து மே மாதம் 8ஆம் திகதி வரை வெசாக் வாரம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் அதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவிருப்பதாக பௌத்த மற்றும் கலாசார அலுவல்கள்அமைச்சர் விதுர விக்ரமநாயக தெரிவித்தார். இம்முறை வெசாக் விழா வழமை போன்று வெசாக் விழா பாரிய … Read more

தேசிய செயற்திறன் ஆணைக்குழுவின் பணிகளுக்கு அவுஸ்திரேலியா உதவி

அவுஸ்திரேலிய தேசிய செயற்திறன் ஆணைக்குழு மற்றும் இலங்கை தேசிய செயற்திறன் ஆணைக்குழு ஆகியவற்றின் செயற்பாட்டாளர்களுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்துகொள்வதற்கான இணையவழி அமர்வொன்று அண்மையில் இடம்பெற்றது. ஜனாதிபதி அலுவலகத்தினால் இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக இலங்கை பரந்த அளவிலான திட்டமிடல்களை அமுல்படுத்தியிருக்கின்ற நிலையில் அதன் முதன்மைத் திட்டமாக தேசிய செயற்திறன் ஆணைக்குழு நிறுவப்பட வேண்டுமென அடையாளங்காணப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே நாட்டின் நெருக்கடியை பொருட்படுத்தாமல் 2023 வரவு செலவு திட்டத்தில் ஆணைக்குழுவை நிறுவுவதற்காக அரசாங்க நிதி … Read more

வெளிநாடுகளில் நடைபெறுகின்ற டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும் – திமுத் கருணாரத்ன

அயர்லாந்து அணியுடனான டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றிய போதிலும், இலங்கை அணி பங்கேற்கும் வெளிநாட்டு; போட்டிகளில் வெற்றி பெறுவது ஒரு நாடு என்ற வகையில் மிகவும் முக்கியமானது என இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன தெரிவித்தார். காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்றதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ‘அயர்லாந்துக்கு எதிரான போட்டி முழுவதும் நன்றாக இருந்தது. இந்த … Read more

யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி பகுதியில் இருந்து 50 வர்த்தக வெடிபொருள் குச்சிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டன

யாழ்ப்பாணம் ஆல்லப்பிட்டி பகுதியில் 2023 ஏப்ரல் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 50 வர்த்தக வெடிபொருட்கள், பதினைந்து மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள் மற்றும் 172 செ.மீ நீளமான பாதுகாப்பு உருகிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. வெடிபொருட்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடியினால் கடல்சார் சூழலுக்கு ஏற்படும் சேதங்களைத் தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை … Read more

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் வழங்கிய பங்களிப்புக்காக, கடற்படை கப்பல்துறைக்கு ஜனாதிபதி சுற்றுச்சூழல் தங்க விருது வழங்கப்பட்டது

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் 2023 ஏப்ரல் 28 ஆம் திகதி இடம்பெற்ற 2021-2022 ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில், இலங்கை கடற்படை திருகோணமலை கடற்படைத் கப்பல்துறையில் சுற்றாடல் பாதுகாப்புக்காக மேற்கொள்கின்ற சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்பட்ட தங்க விருது கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி மற்றும் தன்னார்வ கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க குமார கௌரவ ஜனாதிபதியிடமிருந்து பெற்றுக் கொண்டார். கடற்படைத் … Read more

மின் விளக்குகளை பயன்படுத்தி வடக்கு கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 02 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம், சுண்டிக்குளம் கடற்பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது மின்சார விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் (02), இரண்டு டிங்கி படகுகள் (02) மற்றும் சட்டவிரோத மீன்பிடி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கரையோர வலயத்தில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் கடற்படையினர் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி 2023 ஏப்ரல் மாதம் 30 … Read more