தேசிய இப்தார் நிகழ்வு ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அலரி மாளிகையில்

முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பை முன்னிட்டு நடத்தப்படும் தேசிய இப்தார் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நேற்று (18) அலரி மாளிகையில் நடைபெற்றது. தேசிய நல்லிணக்கத்துக்கான ஆசிர்வாத நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன. தேசிய ஒருமைப்பாட்டினை வளர்ப்பதற்கு பல தசாப்தங்களாக தொடர்ச்சியான பங்களிப்பை வழங்கிவரும் முஸ்லிம் பக்தர்கள் எதிர்காலத்திலும் ஒற்றுமையான இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென பிரதமர் தினேஷ் குணவர்தன கேட்டுக்கொண்டார். முஸ்லிங்களின் ரமழான் நோன்பு மாதம் ஆன்மீக … Read more

குரங்குகள் ஏற்றுமதி செய்வது குறித்து சீனாவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை

இலங்கை அரசாங்கம், சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக அவ் அரசாங்கத்துடன் எவ்வித உடன்படிக்கையையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார். சீனாவிற்கு 1000 குரங்குகளை ஏற்றுமதி செய்யவது குறித்து, தற்போது, சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படும் பிரச்சாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் … Read more

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் மூன்றாவது சிரார்த்த தினத்தையொட்டி பெரும் கண்காட்சி

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் மூன்றாவது சிரார்த்த தினம் எதிர்வரும் மே மாதம் 26ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை கொழும்பு சௌமியபவனில் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு தேசிய தலைவரது ஆளுமையை இளைய தலைமுறையினரும் உள்வாங்கிக் கொள்ளும் வகையில் கண்காட்சி ஒன்று இடம்பெற உள்ளதாக இ.தொ.கா ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து ஊடகப்பிரிவு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, இக்கண்காட்சியில் அமரர் பயன்படுத்திய பொருட்கள் அவரது நினைவுகளின் நிழல்களாக விளங்கும் புகைப்படங்கள், விருதுகள், … Read more

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் செயற்பாடுகள் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பம்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சு அதன் பணிகளை ஆரம்பித்துள்ளது. பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன ஆகியோரின் அழைப்பின் பேரில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான திரு. சாகல ரத்நாயக்க ஆகியோர் பாதுகாப்பு அமைச்சு வளாகத்தில் நேற்று (17) காலை … Read more

ஏப்ரல் 20ஆம் திகதிக்குப் பின்னர் காலி முகத்திடலில் பொதுமக்கள் சுதந்திரமாக பொழுதைக் கழிக்க முடியும்

பொதுமக்கள் அச்சமோ சந்தேகமோ இன்றி சுதந்திரமாக சுவாசிக்கக்கூடிய இடமாக காலி முகத்திடல் காணப்பட்டது. ஆனால் கடந்த காலங்களில் நடந்த இசை நிகழ்ச்சிகளாலும், ஆர்ப்பாட்டங்களினாலும், காலி முகத்திடல் வெகுவாக சேதமடைந்துள்ளது. இதன்காரணமாக, இலங்கை துறைமுக அதிகாரசபையானது இப்பகுதியை சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமாக அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்காக சுமார் 220 மில்லியன் ரூபாவை அந்த அதிகார சபை செலவிடவுள்ளது. கடந்த போராட்ட காலத்தில் குறித்த பிரதேசத்தில் ஏற்பட்ட சொத்து சேதங்களை சீர் செய்வதற்கு மாத்திரம் சுமார் 6.6 … Read more

தினமும் 3 லீட்டருக்கும் அதிகமான நீர் பருக வேண்டும் – யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர்

தினமும் மூன்று லீட்டருக்கும் அதிகமான நீர் பருக வேண்டும் என்று யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் சி.யமுனாநந்தா நேற்றைய தினம் (17) தெரிவித்துள்ளார். “தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான கால நிலையினால் உடலில் உள்ள நீர் சத்துக்கள் இழக்கப்படும் இதனால் சூரியன் உச்சம் கொடுக்கும் மதிய நேரங்களில் வெளி பயணங்களை தவிர்த்து கொள்வது நன்மையளிக்கும் என்றும் குறிப்பிட்டார். ஒருவர் ஒரு நாளைக்கு சராசரியாக தினமும் 3 லீட்டர் வரையில் நீர் அருந்த வேண்டும் அத்துடன், போதியளவு … Read more

எட்டு மாவட்டங்களில் அதிக வெப்பமான காலநிலை

கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், அநுராதபுரம், குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு அதிக வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மேற்குறிப்பிடப்பட்ட 8 மாவட்டங்களும் வெப்பமான காலநிலையினால் பாதிக்கப்படும் என திணைக்களம் வெளியிட்டுள்ள வெப்பச் சுட்டெண்ணில் தெரிவித்துள்ளது. இந்த பகுதிகளில் தொழில் புரிவோர் வேலை செய்யும் இடங்களில் முடிந்தவரை அடிக்கடி நிழலில் இருக்கவும், ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கமைய வெளிப்புற தொழிலாளர்கள் கடினமான வேலைகளை குறைத்து, நிழல் உள்ள இடங்களில் … Read more

இசைக் கச்சேரியுடன் கூடிய தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம், ஏப்ரல் 22 ஆம் திகதி காலிமுகத்திடலில்

திறந்த மற்றும் வெளிநாட்டவர்களுக்கான பல்வேறு போட்டிகள். ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம் , அனைத்து அமைச்சுக்கள் உள்ளிட்ட அரச துறை நிறுவனங்கள் பலவற்றின் ஊழியர் குழாம் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களுக்குமான திறந்த போட்டிகள் மற்றும் வெளிநாட்டவர்ளுக்கான போட்டிகள் அடங்கிய “வசந்த சிரிய 2023” (வசந்தத்தின் வனப்பு 2023) தமிழ் சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டம் ஏப்ரல் 22 ஆம் திகதி சனிக் கிழமை கொழும்பு காலிமுகத்திடல் மைதானததில் நடைபெறும். காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி … Read more

அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் இன்று.

சுற்றுலா அயர்லாந்து அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் இன்று. நேற்று ஆட்டம் நிறுத்தப்படும் போது, தனது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இலங்கை அணி, 4 விக்கெட் இழப்புக்கு 386 ரன்கள் பெற்றிருந்தது. ஆட்டமிழக்காமல் களமிறங்கிய தினேஷ் சந்திமால் 18 ஓட்டங்களையும், தடுப்பாட்டக்காரராக களம் இறங்கிய பிரபாத் ஜெயசூர்யா ஆட்டமிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்றனர். நேற்றைய தினம் இலங்கையின் முதல் இன்னிங்ஸில் இரண்டு சதங்கள் பதிவாகின. கேப்டன் திமுத் … Read more

இதுவரை கால துன்பங்களில் இருந்து விடுபட்டு முன்னோக்கிச் செல்ல உறுதி கொள்வோம் – பிரதமர் தினேஷ் குணவர்தன

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் ’புதியதோர் கிராமம் – புதியதோர் நாடு’ நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புத்தாண்டின் முதல் நிகழ்ச்சித்திட்டத்தை (16) கொட்டாவ ஸ்ரீ தம்மகித்திகாராம விகாரையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய பிரதமர், “இந்த சந்தர்ப்பத்தில், இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரரின் ஆசியும் வழிகாட்டுதலும் முக்கியமானது. பௌத்த சாசனத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. நான் உங்களது மக்கள் பிரதிநிதியாக கடந்த நாற்பது ஆண்டுகளாக பணியாற்றிய காலத்தில் முடியுமான அனைத்து … Read more