யாழ்ப்பாணத்தில் பயிரிடப்படும் இயற்கை உரத்திலான புளிப்பு வாழைப்பழங்கள் துபாய் சந்தைக்கு

யாழ்ப்பாணத்தில் 350 ஏக்கரில் இயற்கை உரத்தினால் பயிரிடப்பட்ட புளிப்பு வாழைப்பழங்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் வாரந்தோறும் 25,000 கிலோகிராம் வீதம் துபாய் சந்தைக்கு ஏற்றுமதி செய்ய விவசாய அமைச்சு நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். விவசாய அமைச்சின் கீழுள்ள விவசாயத்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பின் கீழ், … Read more

கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2023 ஏப்ரல் 12ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை:புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று :நாட்டைச் … Read more

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன்வசதி வேலைத்திட்டம் தொடர்பில் ஏப்ரல் 25ஆம் திகதி பாராளுமன்ற விவாதம்

அரசியல் கட்சிகள் தமது நாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்குமா இல்லையா என்பது குறித்து அங்கு தீர்மானிக்கலாம். சமூக நலன்புரி நன்மைகள் வழங்கும் பணிகள் ஜூன் 01 முதல் -சாகல ரத்நாயக்க தெரிவிப்புசர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி (IMF/EFF) திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகவும், அது ஏப்ரல் 25 முதல் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார். அரசியல் கட்சிகள் தமது நாட்டுக்கு … Read more

நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடந்தால் சட்டங்கள் குறித்து அச்சம்கொள்ளத் தேவையில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் குறித்து எவரும் எந்தவித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைமைக் காரியாலயத்தை திறந்துவைத்த பின்னர் உரையாற்றியபோதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் தமிழ் மக்கள் முன்னெடுத்த போராட்டங்களை முடக்குவதற்கு அன்று கொண்டுவரப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தை விட இச்சட்டம் குறித்து கவலையடையத் தேவையில்லை என்றும் குறிப்பிட்டார். ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு சட்டங்கள் அவசியமாகும் என்றும் … Read more

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தில் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மேலும் 15 ஆயிரத்து 149 இலட்சம் ரூபாய் இழப்பீடு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான இழப்பீட்டின் நான்காவது கட்டத்தினை தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பிற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடற்றொழில் அமைச்சரின் தொடர்ச்சியான முயற்சியினால் குறித்த கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் சார்ந்த மக்களுக்கான நான்காவது கட்ட இழப்பீட்டு தொகையாக சுமார் 15 ஆயிரத்து 149 இலட்சம் ரூபாய் (ரூ.1,514,900,000) கடற்றொழில் அமைச்சிற்கு கிடைத்துள்ள நிலையில், அவற்றை உடனடியாக பயனாளிகளுக்கு வழங்கி வைப்பதற்கான ஆலோசனைகளும் கடற்றொழில் … Read more

க.பொ.த சாதாரண தர பரீட்சை மே 29 ஆம் திகதி ஆரம்பம்

2022 க.பொ.த. சாதாரண தர பரீட்சைகளை 2023 மே 29 ஆம் திகதி முதல் ஜூன் 08ஆம் திகதி வரை நடத்த திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மே 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சீ. அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் 16 ஆம் திகதி ஆரம்பம்

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் எதிர்வரும் 16 ஆம் திகதி ஆர்மபமாகவுள்ளது. இலங்கையுடனான இரண்டு டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் பங்கேற்பதற்காக அயர்லாந்து கிரிக்கெட் அணி நேற்று (09) இலங்கையை வந்தடைந்தது. இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளும் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்கமைய இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஏப்ரல் 16 ஆம் திகதியும், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஏப்ரல் 24 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்வதற்கு புதிய வேலைத்திட்டம்

நகரத்திற்கு நீர் முகாமைத்துவம் மற்றும் குடிநீர் பிரச்சினைக்கு நிலையான தீர்வை வழங்குவதற்கு ஜனாதிபதி அறிவுரை. உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான சூழலுடன் நுவரெலியாவை அபிவிருத்தி செய்ய வேண்டும். சம்பிரதாய முறைமைகளை விடுத்து நாட்டிற்கு அவசியமான புதிய வேலைத்திட்டத்திற்காக அனைவரும் ஒன்றிவோம் -ஜனாதிபதி தெரிவிப்பு. நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டின் ஸ்திரமான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கான பிரதான சுற்றுலா நகரமாக காணப்படும் நுவரெலியாவின் அதிகபட்ச பங்களிப்பினை பெற்றுக்கொள்ளவதற்கான திட்டமிடலுடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் அதிகாரிகளுக்கு … Read more

மலையகத்திற்கு பல்கலைக்கழகம் – ஜனாதிபதி உத்தரவு

மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார் என்று நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்று (10) நடைபெற்றது. இதன்போது, பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் நான் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்தேன். அதற்கினங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த கோரிக்கையை விடுத்துள்ளார் … Read more

இரு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரின் நியமனத்துக்குப் பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவில் அனுமதி

இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் புதிய தூதுவர் ஒருவரின் நியமனங்களுக்கு பாராளுமன்ற உயர் பதவிகள் பற்றிய குழுவின் அனுமதி அண்மையில் (06) கிடைத்திருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். இதற்கமைய நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ.எஸ். சத்யானந்தாவின் நியமனத்துக்கு உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி வழங்கியது. அத்துடன், முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் புதிய செயலாளராக எம்.எம். நைமுதீனின் நியமனத்துக்கும் உயர் பதவிகள் பற்றிய குழு அனுமதி … Read more