புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் $577.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு அனுப்பியுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டைக் பொறுப்பேற்றதிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்களால் 12.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் 577.5 மில்லியன் டொலர்களை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வங்கி முறை மூலம் இலங்கைக்கு சட்டப்பூர்வமாக அனுப்பியுள்ளனர். 2023 ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் நாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ள பணம் 11 வீதத்தால் அதிகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதவியேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சை முன்னாள் அமைச்சர் மனுஷ … Read more

பெருந்தொகையான மஞ்சள் கடற்படையினரால் மீட்பு

புத்தளம் – சேரக்குளி கடற்பிரதேசத்தில் இருந்து ஒருதொகை மஞ்சள் நேற்று (10) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடமேற்கு கடற்படைக் கட்டளையின் விரைவான நடவடிக்கை கடற்படைப் படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த சில உரமூடைகளை சோதனை செய்துள்ளனர். இதன்போது,  குறித்த உரமூடைகளில் உலர்ந்த மஞ்சள் இருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 14 உர மூடைகளில் இருந்து 470 கிலோ கிராம் மஞ்சள் காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர். குறித்த மஞ்சள் இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக … Read more

புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் இன்று (11) நள்ளிரவு முதல் தடை

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக வகுப்புக்கள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (11) நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான எதிர்பார்ப்பு வினாக்கள் அடங்கிய வினாத்தாளை அச்சடித்து விநியோகிப்பதும் இன்று நள்ளிரவு முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பரீட்சை வினாத்தாள்களின் வினாக்களை வழங்குதல் அல்லது அதனை ஒத்த வினாக்களை பெற்றுக்கொடுப்பதாக சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், கையேடுகள் விநியோகித்தல், அவற்றை … Read more

2025 அரசாங்க ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு   – நிதி இராஜாங்க அமைச்சர்

அமைச்சரவை ஊடாக இரண்டு தடவைகள் அனுமதி வழங்கப்பட்டு, 2025ஆம் ஆண்டு அரசாங்க சேவை சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு எவ்வித இடையூறுகளும் இல்லை என  நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிடிய குறிப்பிட்டார். அத்துடன் 25000 ரூபா வாழ்க்கைச் செலவுப் படி மற்றும் 24 வீதம் குறைந்த அடிப்படைச் சம்பளம் அதிகரிப்பதற்கு சகல சட்ட ரீதியான அனுமதிகளும் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். பல வருடங்களாக இடம்பெற்ற சம்பள முரண்பாடு தொடர்பாக கண்டடிறிவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை 2024 மே 27ஆம் … Read more

தபால் மூல வாக்களிக்க தவறியவர்கள் இன்று வாக்களிக்க முடியும்

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிக தவறியவர்கள்  இன்றும் (11) நாளையும் (12) வாக்களிக்க முடியும் என்று    தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூலம் வாக்களிப்பதற்காக கடந்த 4, 5 மற்றும் 6ம் திகதிகளில் வாக்களிக்க முடியாத அனைத்து அரசு ஊழியர்களும் இந்த இரண்டு நாட்களிலும் தபால் மூலம் வாக்களிக்கலாம். இந்த இரண்டு தினங்களில் தபால் மூல வாக்குகளைப் அடையாளப்படுத்தாவிட்டால் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் செப்டம்பர் 21ஆம் திகதி அல்லது வேறு எந்த நாளிலோ வாக்குகளை … Read more

3 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி

இலங்கை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் லண்டன்-ஓவல் மைதானத்தில் இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது. 219 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 4ஆம் நாளில் 2 விக்கட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. அந்தவகையில், இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெத்தும் நிஸ்ஸங்க தனது இரண்டாவது சதத்தை பெற்றுக்கொண்டார். இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் … Read more

ஜனாதிபதி தேர்தல் – அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும். மேலும், வாக்குச் சாவடி மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை செப்டம்பர் 19 ஆம் திகதி பாடசாலை நேரம் முடிந்த பின்னர் கிராம அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தொடர்புடைய காலங்களில் … Read more

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியான செய்திகள் பொய்யானவை

• அதற்கான அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளது. • நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி 12-08-2024 ஆம் திகதி குறித்த அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். • உணர்வுபூர்வமான விடயங்களின் போது மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம். 2025 ஆம் ஆண்டு அமுல்படுத்தப்படவுள்ள சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவில்லை என வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை என்பதோடு அதற்கான அனுமதி ஏற்கனவே கிடைத்துள்ளது.   2024 மே மாதம் 27 திகதியிட்ட … Read more

அக்ரஹார மருத்துவக் காப்புறுதி பயன்களை அதிகரித்தல்

அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்களுக்கும் அக்ரஹார மருத்துவக் காப்புறுதி பயன்களை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்து ஓய்வூதியர்கள் மற்றும் அரச துறையிலுள்ள அனைத்து ஊழியர்களின் சம்பளத்தில் 1,000ஃ- ரூபா பங்களிப்புத் தொகையை அறவிட்டு தேசிய காப்புறுதி நிதியத்திற்கு வைப்பிலிடுவதற்கும், அதன்மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ள விரிவான வசதிகளுடன் கூடிய மருத்துவப் பாதுகாப்புத் திட்டத்தை 2025 ஆம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்துவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் மிகவும் … Read more

புகையிரத நிலையங்களுக்கு அருகாமையில் உள்ள கட்டிடங்கள் வணிக மையங்களாக உருவாக்கப்படும்..

புகையிரத திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளை அரச-தனியார் பங்ககளிப்புடன், அபிவிருத்தி செய்ய விரும்பும் முதலீட்டாளர்களை இனங்காண்பதற்கு, தமது ஆரவத்தை வெளிப்படுத்துமாறு போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (10) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அதனடிப்படையில், கொழும்பு நகரை அண்மித்துள்ள கொள்ளுப்பிட்டி, பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, கொம்பனித்தெரு, தெஹிவளை ஆகிய புகையிரத நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான … Read more