சென்னை – பலாலிக்கிடையிலான புதிய விமான சேவை நேற்று ஆரம்பம்

சென்னைக்கும் யாழ். பலாலிக்குமிடையேயான இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று (01) முதல் ஆரம்பமாகியது. நேற்று முதல் தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ். பலாலிக்கு விமான சேவை நடத்தப்படவுள்ளதாக இண்டிகோ ( Indigo ) ஏயார்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது யாழ். பலாலிக்கு தினசரி விமான சேவையை இந்தியாவின் அலையன்ஸ் ஏயார் விமானம் ( Alliance Air ) நடத்துகிறது. சென்னையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த விமானமானது 52 பயணிகளுடன் நேற்று பிற்பகல் 3.07 … Read more

டெங்கு அபாயமுள்ள மாவட்டங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய 5 மாவட்டங்களில் டெங்கு அபாய வலயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இன்று (02) முதல் எதிர்வரும் 04 ஆம் திகதி வரை 03 நாட்களுக்கு அந்த வைத்திய அதிகாரி பிரிவுகளில் விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 36,728 ஆகவும் அதில் … Read more

பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 40 ஆவது வருட பூர்த்தி நிகழ்வு…

இலங்கை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் 40ஆவது வீர நிறைவை முன்னிட்ட நிகழ்வு நேற்று (01) அதிரடிப் படைப் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது. சிரேஷ்ட உதவிப் பொலிஸ் மா அதிபர், விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி சட்டத்தரணி வருண ஜயசுந்தரவின் தலைமை மற்றும் ஒழுங்கமைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது. உதவிப் பொலிஸ் மா அதிபர் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரி டி. டி. டி. கே. ஹெட்டிஆரச்சி யின் ஒருங்கிணைப்பு மற்றும் ஏற்பாட்டில் இவ் 40ஆண்டுப் … Read more

அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடுதல் மற்றும் செல்லுபடியான அடையாள அட்டைகள்…

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்கு அடையாளமிடுதல் மற்றும் அதற்குரிய செல்லுபடியான அடையாள அட்டைகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை….

நாட்டின் சில பிரதேசங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  செப்டம்பர் 02ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 செப்டம்பர் 01ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு … Read more

எவ்வித தரமற்ற மருந்துகளையும் பெறுகை முறையில்  பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை… 

உயர்தரமற்ற எந்தவொரு மருந்துப் பொருளையும் பெறுகை முறையின் மூலம் பெற்றுக் கொள்வதற்கு  நடவடிக்கை எடுக்கவில்லை என சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார். சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.   இவ் ஊடக கலந்துரையாடலில் விடயங்களைத் தெளிவு படுத்திய சுகாதார அமைச்சர்;….   “தற்போது சுகாதாரத் தறை தொடர்பாகவும், மருந்து கொள்வனவு குறித்தும் தவறான மற்றும் பொய்யான … Read more

நாட்டின் சில பிரதேசங்களில் இன்றும் அவ்வப்போது மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 செப்டம்பர் 01ஆம் திகதிக்கான  வானிலை முன்னறிவிப்பு 2024 ஓகஸ்ட் 01ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ … Read more

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த ஆராயப்பட்டது. • கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் பொதுச் செயலகத்தை நிறுவுவதற்கான சாசனம் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.   • தொழில்நுட்ப முன்னேற்றங்களால் ஏற்படும் உள்ளக சவால்களை நிர்வகிப்பது தேசிய பாதுகாப்புக்குட்பட்டது – தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பணிக்குழாம் பிரதானியுமானசாகல ரத்நாயக்க.   இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தொவால் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க … Read more

எரிபொருள் விலைகளில் மாற்றம்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 344 ரூபாயாக காணப்பட்ட 92 ரக பெற்றோல் லீற்றரின் விலை 12 ரூபாவினால் குறைக்கப்பட்டுளதுடன், அதன் புதிய விலை 332 ரூபாவாகும். 379 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 02 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 377 ரூபாவாகும். 317 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை … Read more

வர்த்தக வெடிபொருட்களைப் பயன்படுத்தப்படுத்தி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை மீன்களுடன் சந்தேக நபர்கள் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்… 

இலங்கை கடற்படை திருகோணமலை மாவட்டத்தில் நிலாவெளி கடற்பிரதேசத்தில் நேற்று (30) இடம்பெற்ற சுற்றிவளைப்பில், சட்ட விரோதமாக வர்த்தக வெடிபொருட்களைப் பயன்படுத்தப்படுத்தி பிடித்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை மீன்கள் ஆயிரத்து எண்ணூற்று அறுபத்தைந்து (1865) கிலோ கிராமுடன் விற்பனை செய்வதற்கு தன் தயாராகிய நபர் ஒருவரை மீன்களுடன் கடற்படையிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு சொந்தமான கடல் மற்றும் கடற்கரை பிராந்தியத்தில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடி செயல்பாடுகளை நிறுத்தி, சட்ட ரீதியாக மீன்படி செயற்பாடுகளில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்துவதற்காக … Read more