அரசியலமைப்பை திருத்துவதற்கான கௌரவ பிரதமரின் முன்மொழிவு

மக்களுக்கு பொறுப்புக்கூறும் அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் முன்வைத்த கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு, அது தொடர்பில் கௌரவ பிரதமர் கவனம் செலுத்தியுள்ளார். நிறைவேற்று அதிகாரம் மற்றும் சட்டவாக்க சபை போன்றே நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பை திருத்துவதற்கான முன்மொழிவொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எதிர்பார்த்துள்ளார். அத்திருத்தப்பட்ட அரசியலமைப்பினூடாக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியும் என்பது கௌரவ பிரதமரின் எதிர்பார்ப்பாகும்.   பிரதமர் ஊடக பிரிவு

“புதிய அமைச்சரவையின் நோக்கம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதுமாகும்.” நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத்

நெடுஞ்சாலைகள் அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்ற புதிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத், நாட்டில் இது போன்ற ஒரு முக்கியமான தருணத்தில் நெடுஞ்சாலைகள் போன்ற பாரிய அமைச்சுப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தமைக்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்தார். . இன்று (04/18) பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் அமைந்துள்ள மக நெகும மஹமெதுர வளாகத்தில் அமைந்துள்ள அமைச்சின் காரியாலயத்தில் கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் ஊழியர்களிடம் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது, “எமது வரலாற்றில் … Read more

மின் துண்டிப்பு ஒரு மணித்தியாலத்தில் குறைப்பு

இன்று (18) இடம்பெறவிருந்த, மின் துண்டிப்பு நேரத்தை ஒரு மணித்தியாலத்தில்  குறைக்க, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அத்துடன், இன்று நான்கு மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் துண்டிப்பு .இடம்பெறவுள்ளது. அதன்படி A முதல்  L வரையிலான 12 வலயங்களுக்கும், P முதல் W வரையிலான 8 வலயங்களுக்கும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையிலான காலப்பகுதிக்குள் மூன்று மணித்தியாலங்களும், மாலை 6 மணிக்கும் இரவு 10 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் 1 … Read more

அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்…ஜனாதிபதி தெரிவிப்பு

அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பாகும். எந்தவொரு கூடுதல் சலுகைகளையும் பயன்படுத்தாமல் நேர்மையான, திறமையான மற்றும் தூய்மையான நிர்வாகத்திற்கு அர்ப்பணிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் புதிய அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டார். தங்களின் கீழ் உள்ள நிறுவனங்கள் ஊழலற்றதும் மக்கள் சேவைக்கு அர்ப்பணிப்புடன் செயற்படும் நிறுவனங்களாகவும் மாற்றப்பட வேண்டும். பல நிறுவனங்கள் பாரிய நிதி நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள நிலையில், அதனை வேலை வாய்ப்பில் நிரப்பாமல், அவற்றை வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களாக … Read more

நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

நாட்டின் இரண்டு பிரதேசங்களில், நீரில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மரணங்களில் ஒன்று நேற்று (17) பண்டாரகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பண்டாரகம உயவத்த குளத்தில் நீராடச் சென்ற அத்துருகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மற்றைய மரணமும் நேற்று (17) கந்தர தலல்ல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. தலல்ல பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கிய குழுவொன்றை காப்பாற்றச் சென்ற அதே பிரதேசத்தைச் சேர்ந்த … Read more

முன்னாள் மத்திய வங்கி ஆளுனருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு செல்வதற்கான தடை நீடிப்பு

முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால், வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை, எதிர்வரும் மே மாதம் 2ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. அந்த தினத்தில் அவரை நீதிமன்றத்தில் ஆஜார் ஆகுமாறு  கொழும்பு நீதிவான் நீதிமன்றம் மீண்டும் அழைப்பாணை விடுத்துள்ளது.  இதற்கு முன்னர் அழைப்பாணை விடுக்கப்பட்டபோதிலும், அவர் ஆஜராகவில்லை.

இன்று முதல் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெறும்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் இன்று (18) முதல் வழமைபோன்று இடம்பெறும் என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அத்துடன், தற்போது நாட்டிற்கு தேவையான எரிபொருள் இருப்பில் இருப்பதாகவும் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, பல பிரதேசங்களில் இடம்பெறும் எரிபொருள் பற்றாககுறை இன்று முதல் தீர்ந்துவிடும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

17 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்…

புதிய அமைச்சரவை அமைச்சர்கள் 17 பேர் இன்று, (18) முற்பகல் கொழும்பு, கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். 01. திரு. தினேஷ் குணவர்தன                             – பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள்                           … Read more

ஜனாதிபதியின் உரை இன்று இரவு 7.30 க்கு அனைத்து தொலைக்காட்சி வானொலிகளிலும் இடம்பெறவுள்ளது

புதிய அமைச்சவை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டது. இதன்போது ஜனாதிபதி நிகழ்த்திய உரை இன்று இரவு 7.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், வானொலிகளிலும் ஒலிபரப்பப்படவிருப்பதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

இலங்கை கிரிக்கெட் அணி பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம்: பயிற்றுவிப்பாளர்கள் நியமனம்

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு பயிற்றுவிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் நவீட் நவாஸ் இரண்டு வருட காலத்திற்கு உதவிப் பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் பங்களாதேஷ் 19 வயதிற்கு உட்பட்ட கிரிக்கெட் அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராகச் செயற்பட்டார். இலங்கை அணியின் பிரதம பயிற்றுவிப்பாளராக கிறிஸ் சில்வர்வூட் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்தவாஸ் செயற்படவுள்ளார். சுழல் பந்து பயிற்றுவிப்பாளராக பியல் விஜேதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். களத்தடுப்புப் பயிற்றுவிப்பாளராக மனோஜ் அபேவிக்ரம … Read more