பன்னாட்டு நாணய நிதியத்தின் உறுப்புரை IV அறிக்கை மீதான இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்கள்

பன்னாட்டு நாணய நிதியத்தின் உறுப்புரை IV அறிக்கை மீதான இலங்கை மத்திய வங்கியின் கருத்துக்கள் பன்னாட்டு நாணய நிதியம் இலங்கை மீது அதன் பிந்திய உறுப்புரை IV அலுவலர் அறிக்கையினை வெளியிட்டுள்ளது. உறுப்புரை IV செயன்முறை உள்ளடக்குவது; அ) 2021 திசெம்பரில் பன்னாட்டு நாணய நிதிய அலுவலர் குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுதல், இவ்விஜயத்தின் போது நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி அதேபோன்று பல்வேறு அரசாங்க முகவராண்மைகள், நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் … Read more

நீரேந்து பகுதிகளில் கடும் வறட்சி – நீர் மட்டம் வெகுவாக வீழ்ச்சி

தற்போது நிலவும் வறட்சியான காலநிலையையடுத்து காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீர் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் நீரில் மூழ்கி இருந்த பல கட்டிடங்கள், ஆலயங்கள், முதலானவற்றை தற்போது காணக்கூடியதாகவுள்ளது. நீர்த்தேக்கத்தில் நேற்று (25) 12.4 வீத நீர் மாத்திரமே எஞ்சியிருப்பதாக மின்சாரதுறை பொறியியலாளர் தெரிவித்துள்ளனர். மவுசாகலை நீர்த்தேக்கத்தில் 29.7 வீத நீர் மாத்திரம் எஞ்சியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதேபோன்று கொத்மலை நீர்த்தேகத்தில் 21.5 வீத நீரும் விக்டோரியா நீர்த்தேகத்தில் 33.2 வீதமும், ரந்தனிகலை நீர்த்தேக்கத்தில் 56.1 வீதமும் சமனலவெவவில் 14.6 வீத நீரும் எஞ்சியிருப்பதாகவும் … Read more

IOC நிறுவனம் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது – எரிசக்தி அமைச்சர்

இந்திய எரிபொருள் நிறுவனம் நேற்று இரவு தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து ரக பெற்றோலின் விலைகளையும் அதிகரித்துள்ளது. இந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள விலை அதிகரிப்பு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இதேவேளை ,எரிபொருள் விலையை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரிக்காது என்றும் அமைச்சர் காமினி லொக்குகே கூறினார். 30 ஆயிரத்து 500 மெற்றிக் தொன் எரிபொருளுடன் கப்பல் ஒன்று நாளை இலங்கை வரவிருப்பதாக ,அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய – இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ரி-ருவன்ரி போட்டிகள் ஜுன் மாதம் கொழும்பில்

அவுஸ்திரேலிய அணி – இலங்கைக்கு எதிர்வரும் ஜுன் மாதம் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. ஆறு வருடங்களின் பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி – இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் இரு அணிகளும் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 3 ரி-ருவன்ரி போட்டிகளில் விளையாடவுள்ளன. ரி-ருவன்ரி போட்டிகள் ஜுன் மாதம் 7ம், 8ம், 11ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ளன. ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் ஜுன் மாதம் … Read more

பிரெஞ்சுக் குடியரசின் செனட்டர்கள் குழுவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பிரெஞ்சுக் குடியரசின் செனட்டர்கள் குழுவை 2022 மார்ச் 24, வியாழக்கிழமை கொழும்பில் சந்தித்தார். இதன் போது, சுகாதாரச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளிலான ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, அரசியலமைப்பு சீர்திருத்தம், இலங்கையில் பிரெஞ்சு நிறுவனங்களின் முதலீடு, இலங்கையில் இருந்தான பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதிக்கான சந்தைகளை பிரான்சில் விரிவுபடுத்துதல் (குறிப்பாக தேயிலை, மீன்பிடிப் பொருட்கள், ஆடைகள், இரத்திணங்கள் மற்றும் ஆபரணங்கள்), மற்றும் சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு … Read more

அரசாங்க கணக்குகள் பற்றிய குழு கொழும்பு மாநகர சபைக்கு அறிவிப்பு

வருடாந்த வரவுசெலவுத்திட்டத்துக்கு சமாந்தரமாக 01/2014 ஆம் இலக்க அரசாங்க நிதி சுற்றுநிருபத்தின் ஆலோசனைக்கு அமைய முறையான செயற்திட்டமொன்றுக்கு அனுமதி பெற்று அதற்கமைய செயற்பட வேண்டும் என அரசங்க கணக்குகள் பற்றிய குழு கொழும்பு மாநகர சபைக்கு வலியுறுத்தியது. 2020 மற்றும் 2021 வருடங்களுக்கான முறையான செயற்திட்டமொன்றுக்கு அனுமதி பெறாமல் செயற்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மூலம் புலப்பட்டுள்ளதால் இந்த நிலையை இல்லாமல் செய்வதற்கு துரிதமாக செயற்படவேண்டும் என குழு இதன்போது வலியுறுத்தியது. கொழும்பு மாநகர சபையின் 2017/2018 … Read more

மிகைக் கட்டணவரி சட்டமூலம் இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் ஏப்ரல் 07ஆம் திகதி

மிகைக் கட்டணவரி இரண்டாவது மதிப்பீட்டு விவாதத்தை ஏப்ரல் 07ஆம் திகதி நடத்துவதற்கு பிரதி சாபநாயகர் கௌரவ ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் நேற்றுப் பிற்பகல் (24) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. பாராளுமன்றத்தை எதிர்வரும் ஏப்ரல் 05 முதல் ஏப்ரல் 08 திகதிவரைக் கூட்டுவதற்கு இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன், ஏப்ரல் 06 தவிர ஏனைய நாட்களில் மு.ப 10.00 மணி முதல் மு.ப 11.00 வரையான நேரம் பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more

ஐந்தாவது பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டை கொழும்பில் இலங்கை நடாத்துகின்றது

பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (பிம்ஸ்டெக்) மாநாட்டை இலங்கை அரசாங்கம் அடுத்த வாரம் 2022 மார்ச் 28-30 வரை கொழும்பில் கலப்பின முறைமையில் நடாத்தவுள்ளது. பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளிநாட்டு அமைச்சர்கள் முறையே 2022 மார்ச் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ள பிம்ஸ்டெக் சிரேஷ்ட அதிகாரிகள் சந்திப்பு மற்றும் அமைச்சர்கள் சந்திப்பிற்காக இலங்கைக்கு வருகை … Read more

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்26ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டின் வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் … Read more

நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது மழை நிலைமை: மன்னாரிலிருந்து புத்தளம் மற்றும் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள … Read more