மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவில் கலந்துகொள்ளாமை தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழு வருத்தம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் ஆராய்வதற்காக அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த மத்திய வங்கி ஆளுநர், மத்திய வங்கி உயரதிகாரிகள் மற்றும் நாணயச் சபையின் உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமை தொடர்பில் வருந்துவதாக அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். அரசாங்க நிதி பற்றிய குழு பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நேற்று (24)  கூடிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். அதற்கமைய, மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட … Read more

உலக நாடுகளில் கொரோனா:மக்கள் விழிப்புடனிருக்க வேண்டும்

உலக நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆசிய, ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழ்நிலையில், முதல்வர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், தமிழ்நாட்டில் தற்போது வரையில், முதல் தவணை தடுப்பூசி போடாத சுமார் 50 லட்சம் நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டிய சுமார் 1.32 கோடி நபர்களை கண்டறிந்து, அனைத்து மாவட்டங்களிலும் … Read more

இந்தியாவில் கொரோனா பாதிப்பு – சற்று குறைந்தது

இந்தியாவில் தினசரி கொரோனா வைரசுபாதிப்பு நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையை விட சற்று குறைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார துறை இன்று (25) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,685 பேருக்கு கொரோனா வைரசு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 1,938-ஐ விட சற்று  அதிகமாகும். இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் … Read more

எரிபொருளுக்கான 'வரிசைகள்' குறைவு

நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் வந்துள்ள போதிலும், நேற்றிரவும் சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக பொது மக்கள் வரிசைகளில் காணப்பட்டனர். எவ்வாறாயினும், கடந்த நாட்களை விட தற்போது எரிபொருளுக்கான இந்த வரிசைகள் வெகுவாகக் குறைவடைந்துள்ளன இந்திய கடனுதவியுடன் டீசலை ஏற்றிய  மேலுமொரு கப்பல் நேற்று இலங்கையை வந்தடைந்ததையடுத்து, நாடுபூராகவும் எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனூடாக எரிபொருளுக்காக பொதுமக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை விரைவில் முடிவுக்கு வரும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், … Read more

அரச ஊழியர்களுக்கு இடையிலான ஆக்கத்திறன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கௌரவ பிரதமரினால் விருதுகள் வழங்கிவைப்பு

அரச ஊழியர்களுக்கு இடையிலான ஆக்கத்திறன் போட்டி – 2021 விருது வழங்கும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (23) பிற்பகல் நடைபெற்றது. அரச ஊழியர்களின் ஆக்கப்பூர்வமான திறன்களை மேம்படுத்தி மதிப்பீடு செய்து அந்த படைப்புகளை வெளியிடுவதற்கான வாய்ப்பை வழங்குதல் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் கலாசார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார … Read more

வீடுகளில் பெற்றோல்: சேமித்து வைப்பது ஆபத்தானது

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியுடன் வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பதால் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை விசேட வைத்திய நிபுணர் கயான் முனசிங்க குறிப்பிட்டுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த நாட்களில் பெற்றோல் போன்ற எரிபொருட்களினால் ஏற்படுகின்ற தீச் சம்பவங்கள் … Read more

நாடு முழுவதும் இதுவரையில் 16,995,787 பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி

நாட்டில் கொவிட் 19 தடுப்பூசி வேலைத்திட்டத்தின் கீழ் , 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு செவ்வாயன்று 14 ஆயிரத்து 41 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. தொற்றுநோயியல் பிரிவு அறிக்கையின்படி, 1 கோடி 69 இலட்சத்து 95 ஆயிரத்து 787 பேர் கொவிட் 19 தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுள்ளதோடு, 1 கோடியே 43 இலட்சத்து 87 ஆயிரத்து 77 பேருக்கு இரண்டாவது வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது டோஸ் 77 இலட்சத்து 19 ஆயிரத்து 703 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளன.. இதில் செவ்வாய்க்கிழமை (22) 7 ஆயிரத்து … Read more

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தி நிறைவேற்றப்பட்டது

சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் விவாதித்து நிறைவேற்றப்பட்டது. வரவுசெலவுத்திட்ட பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட MF/FP/32/CM/2021/212  மற்றும் 2021 டிசம்பர் 14ஆம் திகதிய அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரிக் கொள்கை முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த இந்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.   • இலங்கை அரசாங்கத்திற்கும், துருக்கி குடியரசின் அரசாங்கத்துக்கும் இடையிலான உடன்படிக்கைக்கு அனுமதி • விலங்கின நலம்பேணல் தொடர்பில் புதிய சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் இதற்கமைய 2022 ஜனவரி 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் … Read more

அரசியல் பழிவாங்கும் நோக்கில் நல்லாட்சி அரசாங்கம் தாக்கல் செய்த வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச மற்றும் பகுதியளவிலான அரச அதிகாரிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை கௌரவ பிரதமரிடம் கையளிப்பு

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் அரசியல் பழிவாங்கல் நோக்கில் அரச மற்றும் பகுதியளவிலான அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையை ஓய்வுபெற்ற பிரதம நீதியரசர் அசோக டி சில்வா அவர்கள் இன்று (24) அலரி மாளிகையில் வைத்து கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடம் கையளித்தார். அதன்படி, இந்தக் குழுவின் அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பிரதமர் உடனடியாக தனது அதிகாரிகளுக்கு பணிப்புரை … Read more

சிறுபோக வேளாண்மை:மட்டக்களப்பு மாவட்டத்திற்கென இரண்டு உரக் கம்பனிகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் சிறுபோகத்தினை மேற்கொள்வதற்காக விவசாயிகளுக்கு தேவையான சேதனைப்பசளை வழங்குவது தொடர்பான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலொன்று நேற்று (23) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த், பசுமை உற்பத்தி செயலணியின் மாவட்ட இணைப்பாளரும் 231 வது படைப்பிரிவின் பிறிகேட் கொமாண்டர் திலீப பண்டார, தேசிய உரச் செயலகத்தின் மாவட்ட … Read more