மட்டக்களப்பில் ,விசேட தேவையுடைய மாணவர்களின் ஆசிரியர்களுக்கு கலைக்கூறு பயிற்சி

விசேட தேவையுடைய கல்வி அலகுகளில் நிறுவனங்களில் மாணவர்களை வழிப்படுத்தும் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கான கலைகூறு பயிற்சி நெறி,  செயலமர்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட விசேட தேவையுடைய மாணவர்களுக்கான சாரண பயிற்சியினை ஆரம்பிக்கும் முகமாக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் சமூக சேவைகள் அபிவிருத்தி கிளையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட சாரணர் சங்கத்தினர் இணைந்து நடத்திய இந்தஇரண்டு நாள் பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ.பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. பயிற்சிநெறியின் ஆரம்ப நிகழ்வில், … Read more

சிறுவர்கள் மேற்கொள்ளும் அபாயகரமான தொழில்கள் 71

திருகோணமலை மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றைய தினம் (22) மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை ஆணையாளர் றிஸ்வானி றிபாஸ் கருத்து தெரிவிக்கையில் சிறுவர்கள் மேற்கொள்ளும் அபாயகரமான தொழில்களாக 71 தொழில்கள் இனங்காணப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். அந்த தொழில்களில் சிறுவர்களை ஈடுபடுத்தல் தண்டனைக்குரிய குற்றமாகும். 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை சில நிபந்தனைகளை தவிர அவர்களை ஒருபோதும் வேலைக்கு அமர்த்த முடியாது. தமது பெற்றோர்கள் மேற்கொள்கின்ற … Read more

இணையவழி On line யூடாக ரயில் ஆசன முன்பதிவுக்கான புதிய முறை அறிமுகம்

இலங்கையில் முதன்முறையாக ரயில் ஆசனங்களை இணையவழியூடாக On line முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத்தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரயில் பயணிகள் எதிர்காலத்தில் அனைத்து ரயில்களுக்குமான ஆசனங்களையும் இணையவழியூடாக முன்பதிவு செய்து கொள்ள முடியும். கொழும்பு கோட்டை – பெலியத்த, பதுளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, தலைமன்னார் மற்றும் கண்டி போன்ற நீண்ட தூர ரயில்களுக்கான பயணச் சீட்டுக்களையும் முன்பதிவு செய்வதற்கான வசதியும் கிட்டவுள்ளது. தற்போது புகையிரத பயணச் சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறை டிஜிடல் மயப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் … Read more

ஒரு கிலோ மர முந்திரி(கஜூ)யின் விலை ரூ. 7,000

துப்பரவு செய்யப்படாத மர முந்திரி (கஜூ) இறக்குமதி நிறுத்தப்பட்டதையடுத்து, ஒரு கிலோ மர  முந்திரி விலை ரூ.7,000 ஆக அதிகரித்துள்ளது. புத்தாண்டு காலங்களிலும் மர முந்திரிக்கான கேள்வி அதிகரிக்கும். உள்நாட்டு மர முந்திரிக்கு (கஜூ) சிறந்த சந்தை வாப்பை ஏற்படுத்தும் நோக்கில், முந்திரி (கஜூ) இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியுள்ளது. அண்மையில் ஒரு கிலோ கிராம் மர முந்திரி (கஜூ) 250 ரூபா முதல் 350 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ முந்திரியின் … Read more

சர்வகட்சி மாநாடு ஆரம்பம்…  

சர்வகட்சி மாநாடு இன்று (23) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்கள் மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ஆகியோரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி குறித்து கலந்துரையாடவும் ஆலோசனைகளை முன்வைக்கவும் இந்த  சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேசிய காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மலையக மக்கள் … Read more

சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கு சலுகை

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போக்கள் ஊடாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களுக்கு, அவசர தேவைகளில் ஒன்றாகக் கருதி எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சு இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அறிவித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, சிரமங்களுக்கு உள்ளான சுற்றுலா பஸ்களுக்கு டிப்போக்களின் ஊடாக எரிபொருள் வழங்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் சுற்றுலா பஸ்களுக்கு மாத்திரமே இந்த எரிபொருள் வழங்கப்படுகிறது. … Read more

எதிர்வரும் நாட்களில் பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது

மேலும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் பெற்றோலுக்காக வரிசைகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் போதிய பெற்றோல் கையிருப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும் நேற்று இரவும் சில பகுதிகளில் பெற்றோலுக்கான நீண்ட வரிசைகள் காணப்பட்டன. இது தொடர்பாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவரிடம் வினவியபோது, மேலும் ஒரு மாதத்திற்கு போதுமான அளவு பெற்றோல் கொள்வனவுக்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தற்போது பெற்றோல் மற்றும் டீசல் … Read more

ஓய்வூதிய திட்டத்தில் அதிகமான பயனாளிகள்: தம்பலகாமம் பிரதேச செயலகத்திற்கு பாராட்டு

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் ஓய்வூதிய திட்டத்தில் அதிகமான பயனாளிகளை இணைத்து தேசிய விருது பெற்றுக் கொண்ட தம்பலகாமம் பிரதேச செயலகத்தை பாராட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் (21) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. 2021 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலகப் பிரிவுகளிலும் இணைத்துக் கொள்ளப்பட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டு நோக்குகின்ற அடிப்படையில் தம்பலகாமம் பிரதேச செயலகம் 1019 பயனாளிகளை ஓய்வூதியத் திட்டத்திற்கு இணைத்துக்கொண்டுள்ளது. பிரதேச செயலகம் தேசிய விருது பெறுவதற்கு வழிகாட்டல்களை … Read more

அடுத்த சில நாட்களில்  மாலையில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2022 மார்ச்23ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது நாட்டில்,அடுத்த சில நாட்களில்  மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான நிலைமை காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் … Read more

கடற்பகுதிகளில் பலமான காற்று

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 23ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மழை நிலைமை: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து … Read more