அடையாளம் காணப்படாத காச நோயாளர்கள் பலர் சமூகத்தில்….

அடையாளம் காணப்படாத காச நோயாளர்கள் பலர் சமூகத்தில் இருப்பதாக காச நோய் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் சமூக சுகாதார விசேட வைத்தியர் திருமதி ஒனாலி ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். வருடத்தில் 14 ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுகின்றனர்.இதற்கு அமைவாக கடந்த வருடத்தில் 6,700 நோயாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் காரணமாக காச நோயாளர்களை அடையாளம் கண்டு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்று ஒனாலி ராஜபக்க்ஷ குறிப்பிட்டார். காச நோய் ஏற்பட்ட நோயாளர் என்ற அனர்த்தத்துடனான பலரை … Read more

இலங்கையில் ,தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 

கடந்த சனிக்கிழமை வரையில் நாட்டின் சனத்தொகையில் 77.48 வீதமானவர்களுக்கு முதலாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 20 ஆம் திகதி தரவின்படி மொத்த சனத்தொகையில் 65.05 வீதமானவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை தொற்று நோயியல் பிரிவு தகவலின்படி, கொரோனா தடுப்பூசியின் முதலாவது டோஸ் 1 கோடியே 69 இலட்சத்து 21 ஆயிரத்து 171 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது . இரண்டாவது … Read more

பூஸ்டர் தடுப்பூசி கையிருப்பு குறைவடைந்தால் …………

நாட்டில் தற்பொழுது பயன்படுத்தப்படும் கொவிட் வைரசு தொற்றை தடுப்பதற்காக. 3 ஆவது டோசுக்காக பயன்படுத்தப்படும் மருந்து கையிருப்பு முடிவடைந்தால் அதனை மீண்டும் இறக்குமதி செய்வதற்கு சில காலம் செல்லும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் இதுவரையில் பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளாதவர்கள் முடிந்தவரை விரைவாக mjid பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருப்பதாகவும் அவர் … Read more

கடற்றொழிலாளர்கள் முன்னறிவிப்புகள் தொடர்பில் ….

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு 2022 மார்ச் 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த ஆழமான தாழமுக்கம் மார்ச் 21 ஆம் திகதி பிற்பகல் 11.30 மணிக்கு தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அண்மையாகவுள்ள தென் அந்தமான் கடற்பரப்புகளுக்கு மேலாக வட அகலாங்கு 14.00 N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 94.00 E இற்கும் அருகில் மையம் கொண்டுள்ளது. அது வடக்கு திசையில் அந்தமான் தீவுகளை விட்டு விலகி நகரக்கூடிய … Read more

இலங்கைக்கு தேவையான எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க சீன அரசாங்கம் தயார்

இலங்கைக்கு தேவையான எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்க சீன அரசாங்கம் தயார் என இலங்கைக்கான சீனத் தூதுவர் ஷீ ஷெங் ஹேங் தெரிவித்துள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட சீன திட்டங்கள் ஊடாக 11 ஆயிரம் தொழில்வாய்ப்புக்கள் உருவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பு துறைமுக நகரத்துக்கு 1.5 அமெரிக்க மில்லியன் டொலர்கள் முதலீடு கிடைத்திருப்பதாகவும் சீன தூதுவர் குறிப்பிட்டார். உத்தேச அம்பாந்தோட்டை தொழிற்சாலை வலயத்தில் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். இலங்கைக்கு ஒன்று தசம் ஐந்து … Read more

இலங்கையில், எதிர்வரும் 30ம் திகதி பிம்ஸ்ரெக்ஸ் தலைவர்கள் மாநாடு

பிம்ஸ்ரெக்ஸ் அமைப்பின் தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 30ம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் என அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இம்முறை இந்த அமைப்பின் தலைமைத்துவம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் வரவுள்ளார். அடுத்த தலைமைத்துவம் அவருக்கு வழங்கப்படவுள்ளது. ஏனைய நாடுகளின் தலைவர்கள் சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். எதிர்வரும் 29ம் திகதி 7 உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த … Read more

இலங்கை மத்திய வங்கி, கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நாணயக்குற்றியினை வெளியிடுகிறது

நாட்டின் முதலாவது மருத்துவபீடம் என்ற ரீதியில் நாட்டிற்கு அது வழங்கிய பங்களிப்பினை அங்கீகரிக்கின்ற விதத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவபீடத்தின் 150 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதத்தில் ரூ.20 முகப்புப் பெறுமதியுடன்கூடிய சுற்றோட்ட நியமத்திலான ஞாபகார்த்த நாணயக்குற்றியொன்றினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இந்நாணயக்குற்றியானது கொழும்பு பல்கலைக்கழக்கத்தின் மருத்துவபீடத்தின் கோரிக்கைக்கிணங்க வெளியிடப்பட்டது. முழுவடிவம் https://www.cbsl.gov.lk/sites/default/files/press_20220321_cbsl_issues_150th_anniversary_of_faculty_of_medicine_uoc_commemorative_coin_t.pdf

20 ரூபாய் மதிப்புள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள்…

கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினதும் இந்நாட்டின் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பினதும் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 20 ரூபாய் பெறுமதியுள்ள இரண்டு புதிய நினைவு நாணயங்கள் வெளியிடப்பட்டன. கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் திருமதி சந்திரிகா எல். விஜேரத்ன மற்றும் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பி.எம்.பி.அனுர குமார ஆகியோர் இன்று, (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கு நினைவு நாணயங்களை வழங்கி வைத்தனர். மத்திய வங்கி … Read more

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிலையான தேசிய கொள்கை ஒன்று அவசியம்…

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட  பல தரப்பு மாநாட்டை கூட்டி, நிலையான அபிவிருத்திக்காக திட்டமொன்றை வகுப்பதன் முக்கியத்துவம் மற்றும் ஏனைய 13 விடயங்களை உள்ளடக்கிய வகையில், மல்வத்து அஸ்கிரிய மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர். மல்வத்து பீடத்தின் மகாநாயக்க வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க வண.வரகாகொட ஞானரதன தேரர் ஆகியோரின் கையொப்பத்துடன் இந்தக் கடிதம் ஜனாதிபதி அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. … Read more

மஹர பிரதேச சபையின் நான்கு மாடி பல்நோக்கு கட்டிடம் கௌரவ பிரதமரின் தலைமையில் திறந்து வைப்பு

மஹர பிரதேச சபையின் நான்கு மாடி பல்நோக்கு கட்டிடம் இன்று (21) முற்பகல் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. பிரித் பாராயணத்திற்கு மத்தியில் நினைவு பலகை திரைநீக்கம் செய்யப்பட்டதுடன், அதனை தொடர்ந்து கட்டிடத்தை திறந்துவைத்த கௌரவ பிரதமர் வாழ்த்துக் குறிப்பு ஒன்றையும் முன்வைத்தார். தன்போது மஹர பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ஏ.சுதீமா சாந்தனி கௌரவ பிரதமருக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கி வைத்தார். 108 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த பல்நோக்குக் கட்டிடமானது … Read more