யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் கௌரவ பிரதமரினால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம், மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாணம் விசேட பொருளாதார மத்தியநிலையம் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களினால் இன்று (20) திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகள் தங்கள் உற்பத்தி பொருட்களுக்கு தகுந்த விலையைப் பெறவும், நுகர்வோருக்கு மலிவு விலையில் காய்கறிகள் மற்றும் பழங்களை கொள்வனவு செய்வதற்கும் வசதியாக இந்த விசேட பொருளாதார மத்தியநிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. யாழ்ப்பாணம், மட்டுவில் நகருக்கு வருகை தந்த கௌரவ பிரதமருக்கு அப்பகுதி மக்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டதுடன், யாழ் … Read more

மில்கோ பால் மா அடுத்த மாதம் 1ம் திகதி தொடக்கம் சந்தைக்கு

தமது தயாரிப்புக்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என்று மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வேறு எந்த நிறுவனமும் பால்மா விலையை அதிகரிக்குமாயின் அதுதொடர்பில் தமது நிறுவனம்  கவனத்திற்கொள்ளாது என்று இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தமது நிறுவனம் மீண்டும் பால்மா உற்பத்தி நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இவை அடுத்த மாதம் 1ம் திகதி தொடக்கம் சந்தைக்கு விநியோகிக்கப்படவுள்ளன. இதேவேளை, பால்மா விலை அதிகரிக்கப்பட்டால் பெரும் அனர்த்தத்தை எதிர்நோக்க வேண்டியிருக்குமென பால்மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். பாவனையாளர்கள் கூடுதல் விலைக்கு பால்மாவை கொள்வனவு செய்ய மாட்டார்கள் … Read more

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி விலை

வர்த்தகர்களின் வருகை குறைவடைந்ததினால் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறி வகைகள் மேலதிகமாக குவிந்துள்ளன. இதனால் விலைகள் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு தொகை மரக்கறி  மத்திய நிலையத்திற்குக் கிடைத்துள்ளன. அனைத்து மரக்கறி வகைகளும் ஒரு கிலோ மொத்த விலை 150 ரூபாவிற்கும் குறைவாகவே காணப்படுவதாக குறிப்பிடப்பட்டது.

ஒரு மாத காலமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு சில நாடுகளில் மீண்டும்…

ஒரு மாத காலமாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு சில நாடுகளில் மீண்டும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்புகள் படிப்படியாக குறைந்து வரும் நிலையில்இ உலக நாடுகளில் மீண்டும் தொற்றின் பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில்இ உலக சுகாதார அமைப்பை சேர்ந்த மரியா வான் கெர்கோவ் Dr Maria D Van Kerkhove  மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வைரஸ் பற்றிய மூன்று தவறான தகவல்களை … Read more

அந்தமான் கடல் பகுதியில் 'அசானி புயல்'

அசானி புயல்’ அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு நிலையம் மதிப்பிட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று மேலும் வலுப்பெற்றது. தற்போது தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு … Read more

Laugf எரிவாயு விலை

Laugf எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, 12.5 கிலோ கிராம் எடையைக் கொண்ட எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 4,199 ரூபாவாகும். 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,680 ரூபாவாகும். 2 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 672 ரூபாவாகும். டொலரின் பெறுமதிக்கு அமைவாக ரூபாவின் மதிப்பு வீழ்ச்சியடைந்தமையே இந்த விலை அதிகரிப்பிற்குக் காரணமாகும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சீனத் தூதுவர் மரியாதை நிமித்தம் சந்திப்பு

சீனத் தூதுவர் குய் சென்ஹோங்குடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் 2022 மார்ச் 18ஆந் திகதி கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். இச்சந்திப்பின் போது, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராஜதந்திர உறவுகள் ஸ்தாபிக்கப்பட்டதன் 65ஆவது ஆண்டு நிறைவையும், 1952ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கிடையிலான ரப்பர்-அரிசி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவையும் நினைவுகூரும் வகையில் சீன அதிகாரிகளால் வெளியிடப்பட்ட முதல் நாள் அட்டைப்படம் சீனத் தூதுவரால் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. அண்மையில் நடைபெற்ற 49வது மனித … Read more

நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரிப்பு  

தற்போது நிலவும் சமையல் எரிவாயுவின் தட்டுப்பாட்டின் காரணமாக நாட்டில் மண்ணெண்ணெய் பாவனை அதிகரித்துள்ளது. பொதுவாக நாட்டில் நாளாந்த மண்ணெண்ணெய் பாவனை கடந்த காலத்தில் 600 மெற்றிக் தொன்களாகும். ஆனால் தற்போது நாளாந்த பாவனை 850 மெற்றிக் தொன்களாக அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெயை விற்பனை செய்யும் எரிபொருள் நிலையங்களுக்கு ஆகக் கூடுதலான வகையில், மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதேவேளை ,நாட்டில் எதிர்வரும் சில தினங்களில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு முழு அளவில் … Read more

2022 ஆசிய ரி-20 கிரிக்கட் போட்டி ,ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி இலங்கையில் ஆரம்பம்

2022 ஆண்டின் ,ஆசிய ரி-20 கிரிக்கட் வெற்றிக் கிண்ண போட்டியை இலங்கையில் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டித் தொடர் ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி தொடக்கம் செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ளது. கொழும்பில் நேற்று (19)  நடைபெற்ற ஆசிய கிரிக்கட் பேரவையின் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் 40ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வணக்கத்திற்குரிய வனவாசி ராகுல தேரரின் அளப்பரிய அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தினாலேயே நாமல் உயன தேசிய பூங்கா பாதுகாக்கப்பட்டுள்ளது – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ

வணக்கத்திற்குரிய வனவாசி ராகுல தேரரின் அளப்பரிய அர்ப்பணிப்பு மற்றும் தைரியத்தினாலேயே நாமல் உயன தேசிய பூங்கா பாதுகாக்கப்பட்டுள்ளது என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் தெரிவித்தார். தேசிய நாமல் உயன 31வது ஆண்டு நிறைவு விழா மற்றும் தேசிய நாமல் உயன சர்வதேச சுற்றாடல் அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வில் நேற்று (18) பிற்பகல் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இவ்வாறு தெரிவித்தார். தேசிய நாமல் உயன சர்வதேச சுற்றாடல் … Read more