கதாநாயகனா கதையின் நாயகனா… கார்த்தியின் நாயக பிம்பம் எத்தகையது? | 15 years of Karthi

நூறாண்டைக் கடந்த தமிழ் சினிமாவில் வியாபார ரீதியாகவும், திரைப்பட உருவாக்க ரீதியாகவும் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. திரையரங்கத்தின் திரைகள் ஆயிரக்கணக்கான படங்களை, நூற்றுக்கணக்கான நடிகர்களைக் கடந்து ஒளிர்ந்துகொண்டிருக்கின்றன. சில படைப்புகளும், சில நடிகர்களும் திரையோடில்லாமல், மக்களின் வாழ்வோடும் கலந்திடும் விந்தை அவ்வப்போது நிகழ்கிறது. வழமையான கதைகள், ஒன்றாத காட்சியமைப்புகள் என படைப்புலகமும் மக்களும் சோர்வாகும்போது கலை மீதான நம்பிக்கையைத் தளரவிடாதிருக்க ஒரு படைப்பு வெளியாகும். அந்தப் படைப்பு ஒட்டுமொத்த படைப்பாளிகளுக்கும் நம்பிக்கைத் தரக்கூடியதாக அமைந்துநிற்கும். 2007 அப்படியானதொரு … Read more

உக்ரைன் விவகாரம்: “கிழக்கு ஐரோப்பாவுக்கு கனேடிய படை அனுப்பப்படும்" – ஜஸ்டின் ட்ரூடோ

கடந்த சில நாள்களுக்கு முன்பு உக்ரைன் எல்லையிலிருந்து ரஷ்யா தனது படைகளின் ஒரு பகுதியினை திரும்பப்பெற்றதாக அறிவித்திருந்தது. ஆனால், உக்ரைன் எல்லையில் முன்பு இருந்ததை விடவும் தற்போது அதிக ராணுவ வீரர்களை ரஷ்யா குவித்து வைத்துள்ளதாக பல நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனால் போர் பதட்டமும் அதிதீவிரமாகியுள்ளது. இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை ரஷ்ய அதிபர் புதின், பிரிந்து சென்ற டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய குடியரசு மக்களின் சுதந்திரத்தை அங்கீகரிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு … Read more

Chennai Book Fair: "வடசென்னைக்கும் மதுரைக்கும் ஒரே நிறம்" – எழுத்தாளர் பாக்கியம் சங்கர்!

‘வடசென்னை இன்னும் விரிவாக இலக்கியத்தில் பதியப்பட்ட வேண்டும்’ எனச் சொல்லும் எழுத்தாளர் பாக்கியம் சங்கர், அறியப்படாத சென்னையின் பக்கங்களையும் அதன் எளிய மனிதர்களின் கதையையும் தொடர்ச்சியாக எழுதி வருபவர். அவரிடம் புத்தகக் காட்சி குறித்து உரையாடினோம். “புத்தகக் கண்காட்சிக்கும் உங்களுக்குமான உறவு பற்றி…” “எனக்கும் புத்தகக் கண்காட்சிக்குமான உறவு குறைந்தது 20 வருடங்கள் இருக்கும். அப்போதெல்லாம் புத்தகம் வாங்க காசு இருக்குமா எனத் தெரியாது. அங்க போனால் நிறைய சீனியர் எழுத்தாளர்களை பார்க்க முடியும் என மட்டும் … Read more

கோவை: சொல்லியடித்த செந்தில் பாலாஜி… வேலுமணி சறுக்கியது எங்கே?!

2021 மே 2-ம் தேதி 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை பிடித்தது தி.மு.க. ஆட்சியைப் பிடித்தாலும், கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியை கூட பிடிக்க முடியாதது முதல்வர் மு.க. ஸ்டாலின் மனதில் கவலையை ஏற்படுத்தியது. ஸ்டாலினுக்கும், தி.மு.க-வுக்கும் சிம்மசொப்பனமாக இருந்தார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி. எஸ்.பி வேலுமணி ‘கோவை ஃபார்முலா’ – ரூ.750 கோடி… கேலிக்கூத்தான தேர்தல்! இந்தப் பிரச்னைகளை போக்க ஸ்டாலின் கோவைக்கு அனுப்பிய அஸ்திரம் அமைச்சர் செந்தில் பாலாஜி. … Read more

550 படங்கள்; தலைமுறைகள் கடந்த குணச்சித்திர நடிகை KPAC லலிதா மறைந்தார்; கண்ணீரில் கேரள திரையுலகம்!

550 க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த மலையாள நடிகை KPAC லலிதா உடல்நலக் குறைவால் நேற்று இரவு மறைந்தார். அவருக்கு வயது 74. தன்னுடைய ஆரம்ப காலங்களில் நாடங்களில் நடித்தார் லலிதா. அவர் பணிபுரிந்த கேரளா இடதுசாரி நாடக நிறுவனத்தின் பெயர் KPAC என்பதே பின்னாளில் அவர் பெயரின் முன்னொட்டாக மாறிப்போனது. தன்னுடைய வெள்ளந்தியான பாவனை, நகைச்சுவை நடிப்பின் வழியாகத் திரைப்படங்களின் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தவர். “நான் கதாநாயகி போல முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க … Read more

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கில் கைது!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் வாக்குப்பதிவானது கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அன்று சென்னை ராயபுரம் பகுதியில், திமுக பிரமுகர் ஒருவர் கள்ள ஓட்டு செலுத்த வந்ததாக கூறி, அ.தி.மு.கவினர் பலர் அந்த திமுக நபரை அரைநிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தின் போது, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் அங்கு இருந்தார். இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும் ஒரு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது இதையடுத்து, சென்னை தண்டையார்பேட்டை காவல்துறையினர் ஜெயக்குமார் உட்பட … Read more

ஒரு ஓட்டுக்கூட பெற விடாமல் அதிமுக-வை தோற்கடித்த சுயேச்சை! -வென்றதும் அதே கட்சியில் இணைந்த சுவாரஸ்யம்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சி 7வது வார்டு பதவிக்கு திமுக சார்பில் பரூக், அதிமுக சார்பில் முகமது இப்ராம்ஷா, சுயேச்சையாக பிரதிவிராஜா மற்றும் இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் இறங்கினர். இதில், சுயேச்சையாகக் களமிறங்கிய பிரிதிவிராஜா 175 வாக்குகள் பெற்று வெற்றியை வசப்படுத்தினார். 149 வாக்குகள் வாங்கிய திமுக பரூக் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அதே நேரத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்ட இப்ராம்ஷாவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்ததிலிருந்தே அவருக்குப் பதிவான … Read more

இன்றைய ராசி பலன் | 23/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

ரிசார்ட்டுக்கு அழைத்துச் செல்லப்படும் திமுக கவுன்சிலர்கள்? – என்ன நடக்கிறது நெல்லையில்?

நெல்லை மாநகராட்சி தேர்தலில் தி.மு.க சார்பாக 48 பேரும், கூட்டணிக் கட்சிகள் சார்பாக ஏழு பேர் என 55 வார்டுகளுக்கும் போட்டியிட்டதில் 51 வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். தி.மு.க மட்டும் தனியாக 44 வார்டுகளில் வென்றிருக்கிறது. அதனால் தனிப்பெரும்பான்மையுடன் இருப்பதால் தி.மு.க கவுன்சிலர்கள் சார்பில் மேயர் வேட்பாளர் அறிவிக்கப்பட இருக்கிறது. வாக்கு எண்ணிக்கை மையம் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற வேட்பாளர்களில் ஒரு சிலர் மட்டுமே உடனடியாக வெற்றி பெற்றதற்கான சான்றிதழைப் பெற்றுக் கொண்டனர். பெரும்பாலான வேட்பாளர்கள் … Read more

“வரலாறு காணாத வெற்றி… தமிழக மக்களின் அன்பை பிரதமர் மோடிக்கு அர்ப்பணிப்போம்!" – அண்ணாமலை ட்வீட்

கடந்த பத்து ஆண்டுகளாகத் தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமலே இருந்த நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதியன்று தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து, தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதலே பரபரப்பாகத் தொடங்கி, மாலையில் தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. அதன்படி, தமிழகத்திலுள்ள 21 மாநகராட்சிகளையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றியுள்ளது. ஸ்டாலின் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு தனித்துப் போட்டியிட்ட தமிழக பா.ஜ.க பெரிய அளவில் நகராட்சி, … Read more