`இந்தியாவில் சிலீப்பர் செல்கள்?!’ – தாவூத் இப்ராகிம், சோட்டா சகீல் மீது புதிய வழக்கு பதிந்த என்.ஐ.ஏ

மும்பையில் தொடர் குண்டு வெடிப்புக்களை நிகழ்த்திய தாவூத் இப்ராகிமும், அவனின் கூட்டாளிகளும் பாகிஸ்தானில் மறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறி வருகிறது. மத்திய அரசு தாவூத் இப்ராகிமை பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வர முயற்சிகளை மேற்கொண்டுகொண்டே இருக்கிறது. தற்போது தாவூத் இப்ராகிம், அவனின் கூட்டாளிகள் சோட்டா சகீல் உட்பட 5 பேர் மீது தேசிய புலனாய்வு ஏஜென்சி புதிதாக வழக்கு பதிவு செய்திருக்கிறது. தாவூத் கும்பல் இந்தியாவில் … Read more

நீட் விலக்கு மசோதா: `நீட் என்பது தேர்வு இல்லை… பலிபீடம்!’ – முதல்வர் ஸ்டாலின் உரையின் ஹைலைட்ஸ்

மு.க.ஸ்டாலின் “சில மாணவர்களைக் கல்லறைக்கும், சிறைச்சாலைக்கும் அனுப்பிய நீட் தேர்வு தேவையா?” ஸ்டாலின் ஆவேசம் “ஒரு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றி , அதை ஒரு ஆளுநரால் நிறுத்தி வைக்க முடியுமென்றால் மாநிலங்களின் கதி என்ன?” பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் “நீட் தேர்வு என்பது பணக்கார நீதியைப் பேசுகிறது. அரசியல் அமைப்பு என்பதே சட்டத்தின் நீதியைப் பேசுகிறது.” சட்டசபையில் முதலவர் மு.க ஸ்டாலின் “நீட் தேர்வு அரசியலமைப்பு சட்டத்தால் உருவானது இல்லை. நீட் தேர்வு தேவை என்பது … Read more

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: நம்பிக்கை நட்சத்திரங்களாகக் களம் காணும் திருநங்கைகள்!

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற பிப்ரவரி 19-ம் தேதி வாக்கு பதிவு நடைபெறவிருக்கிறது. அதன்படி, மொத்தமுள்ள 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த பிப்ரவரி 4-ம் தேதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்துள்ள நிலையில் நேற்று (07/02/2022) பரிசீலனை செய்யப்பட்டு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் இந்த தேர்தலில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணியுடனும், தனித்தும் … Read more

முறிந்த சிறகுகள் #WorldCinema #MyVikatan

எகிப்திய திரைப்படமான ‘ஃபெதர்ஸ்’ வறுமைக்குள் பிழைத்துக் கிடத்தல் என்கிற உயிர்வாழ்வு பற்றிய கதை. ’அபத்தம்’, ’காமெடி’ ஆகிய வார்த்தைகள் மனித நிலையை நையாண்டி செய்யும் ஒரு வகை திரைப்படங்களை விமர்சிக்க அடிக்கடி பயன்படுத்தப்படுவது வழக்கம். எகிப்திய திரைக்கலைஞரான ஓமர் எல் ஜோஹேரியின் இந்தப் படைப்பு அதுபோன்ற வார்த்தைகளைப் பொய்யாக்கி, ஒரு சினிமா பற்றிய அனுமானங்களைத் தகர்த்துவிட்டது. ஆண்களால் நடத்தப்படும் உலகில் ஓர் ஏழைப் பெண் திடீரென்று அதீத துக்கத்துக்கு ஆளாவதைப் பற்றிய ஒரு துரதிர்ஷ்டவசமான படம் இது. … Read more

“அமெரிக்கர்களே உக்ரைனை விட்டு வெளியேறுங்கள்" – அறைகூவல் விடுத்த அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்கா அங்கம் வகிக்கும் நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைனை அச்சுறுத்தும் விதமாக ஆயுதங்களுடன் கூடிய ஒரு லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் எல்லைப்பகுதியில் ரஷ்யா நிறுத்தியுள்ளது. இதனால் பல நாள்களாகவே உக்ரைனில் போர் பதற்றம் நிலவிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து ஐ.நா பாதுகாப்பு அவையில் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் இந்த விவகாரம் ஓய்ந்தபாடில்லை. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக, அமெரிக்கா ரஷ்யாவை கடுமையாக எச்சரித்தும் வருகிறது. அண்மையில் கூட அமெரிக்கா, உக்ரைன் தலைநகரை ரஷ்யா கைப்பற்ற முயன்றால் … Read more

சூப்பர்கள் இணைந்தால்… சூப்பரோ சூப்பர்தானே! #MyVikatan

‘மரியாதை! மரியாதை!’ – இந்த வார்த்தைகளுக்கு மரியாதை கொடுத்து விட்டால், வாழ்வின் பெரும்பாலான இக்கட்டுகளிலிருந்து மனித இனத்தை மட்டுமல்ல… எல்லா உயிரினங்களையுமே நாம் அமைதி பெறச் செய்து விடலாம். ஆனாலும் ‘நான்தான் உயர்ந்தவன் என்ற அகங்காரம்’ – அதாங்க ‘ஈகோ’, அதற்கு இடம் தருவதில்லை. ‘எல்லாவற்றிலும் நானே, எல்லாம் எனக்கே. பதவிக்கும் நானே, பரிசும் எனக்கே’ என்ற எண்ணத்தால்தானே இங்கு உயிரினங்கள் ஏகத்துக்கும் அல்லல்படுகின்றன. அதற்காக ஆசையே படக் கூடாதா என்கிறீர்களா?படலாம். அதில் நியாயம் வேண்டும். மரியாதை … Read more

ஓர் ஏழைத் தாயின் பிரச்னை #MyVikatan

எழுத்தாளர் பிரியா தம்பி சில வருடங்களுக்கு முன் விகடனுக்கு எழுதிய தொடர் ‘பேசாத பேச்செல்லாம்’. அந்தத் தொடரில் எழுத்தாளர் லட்சுமண பெருமாள் எழுதிய ‘கனவெது நிஜமெது’ சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் ஓர் ஏழைத் தாயின் உள்ளாடை பிரச்னையை பற்றிய சிறுகதை குறித்து எழுதியிருந்தார் எழுத்தாளர் பிரியா தம்பி. படிக்கும்போதே என் மனதை கனக்க வைத்த சிறுகதை அது. அந்தச் சிறுகதையை ’பேசாத பேச்செல்லாம்’ என்ற பெயரிலயே குறும்படமாக எடுத்துள்ளார் இளம் இயக்குனர் ஜெய் லட்சுமி. சினிமாவுக்காக தன்னுடைய … Read more

`போனது போகட்டும்… விட்டுடக்கூடாது இந்தமுறை!' – மநீம நிர்வாகிகளுக்கு கமல் இட்ட கட்டளை என்ன?!

“40 ஆண்டுகளாக நற்பணி இயக்கமாக இருக்கும்போது நான் சொல்லிக்கொண்டிருந்த அதே அறிவுரைகள் இன்று கொள்கைகளாக மாறி இருக்கின்றன. நாம் தலைவர்களைத் தேடக்கூடாது. சமூக சேவகர்களைத் தேட வேண்டும். நமக்கு அவர்கள் சேவகம் செய்ய வேண்டும். அரசு, ஆட்சி என்பதை இருண்ட காலத்துக்கு எடுத்துச் செல்ல முற்படுகிறார்கள் இவர்கள். ஏழ்மையை இவர்கள் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அதை நீக்க ஒவ்வொருவரும் வேலை செய்ய வேண்டும்” சென்னை ஆழ்வார்பேட்டையில் நடந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் … Read more