தருமபுரி: உணவு தேடிச் சென்ற மக்னா யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்த சோகம்! – வனத்துறையினர் விசாரணை

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட எல்லைப் பகுதிகளில் அவ்வப்போது காட்டு யானைகளின் நடமாட்டம் இருக்கும். அதிலும், கோடைக் காலங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடிக் காட்டு யானைகள் வனப்பகுதிக்கு அருகில் உள்ள ஊருக்குள் வருவது அதிகரித்துக் காணப்படும். மின்சாரம் தாக்கி பலியான யானை தற்போது கோடை வெயில் அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த சூழலில்தான், தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகில் உள்ள நல்லாம்பட்டி பகுதியில் மின்சாரம் தாக்கி காட்டுயானை ஒன்று உயிரிழந்திருப்பதாக அந்த சரக வனத்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, … Read more

பாகிஸ்தான் டு இந்தியா; சைக்கிள் டு மோட்டார் பைக்; ஹீரோ மோட்டார்ஸின் சாகசப் பயணம்! திருப்புமுனை – 11

தற்போது இரு சக்கர வாகன விற்பனையில் முதல் இடத்தில் இருக்கும் ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் வரலாற்றை உற்று கவனித்தால், அதில் பலவிதமான திருப்புமுனைகள் குவிந்துகிடப்பதை நாம் பார்க்கலாம். அந்தத் திருப்புமுனைகளை பற்றி விரிவாகப் பார்ப்போம்… தொலைநோக்கு சிந்தனை தொலைநோக்கு சிந்தனை, காலம் தாண்டி யோசித்து வெற்றி கண்டவர் என்றெல்லாம் நாம் கேள்விபட்டிருப்போம். இன்றைக்கு இணையதளம், தொலைக்காட்சி என தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், எந்த விதமான தகவல்களும் இல்லாமல் ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்து ஜெயித்திருக்கிறது ஹீரோ … Read more

உக்ரைன்: மீண்டும் கீவில் செயல்படத் தயாராகும் இந்தியத் தூதரகம் – வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

ரஷ்யா- உக்ரைன் இடையே தொடர்ந்து வரும் போரால், உக்ரைன் பெருமளவு பாதிக்கப்பட்டுவருகிறது. பாதுகாப்பு கருதி உக்ரைனை விட்டு அனைத்து நாட்டுத் தூதரகங்களும் அங்கிருந்து வெளியேறினார்கள். அந்த வகையில், மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், உக்ரைனில் சிக்கியிருந்த 20,000-க்கும் மேற்பட்ட இந்தியர்களைத் இந்தியா மீட்டு வந்தது. அதைத் தொடர்ந்து, இந்தியத் தூதரகம் கடந்த மார்ச் 13-ம் தேதி தற்காலிகமாக உக்ரைனின் அண்டை நாடான போலந்தில் உள்ள வர்சா நகருக்கு மாற்றப்பட்டது. உக்ரைன் இந்த நிலையில், தற்போது … Read more

மகளிடம் அத்துமீறிய ஆண் நண்பர்… உடந்தையாக இருந்த தாய் – இறுதியில் விபரீதம்!

வடசென்னையைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. கணவரைப் பிரிந்து 17 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளன. புவனேஸ்வரியுடன் முத்துக்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டது. அதனால் முத்துக்குமார், தன்னுடைய குடும்பத்தை விட்டுப் பிரிந்து புவனேஸ்வரியுடன் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சிறுமிக்குப் பாலியல் தொல்லை இந்த நிலையில் புவனேஸ்வரி வீட்டில் இல்லாத நேரத்தில் முத்துக்குமார், அவரின் 17 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்து வந்திருக்கிறார். அதை சிறுமி, தன்னுடைய அம்மா … Read more

`ஆரம்பம் சரியில்லைதான்; ஆனால்…' – தேசிய சாதனை படைத்த தடகள வீராங்கனை ஜோதி யாரஜி

கடந்த சில தினங்களாக விளையாட்டு ஆர்வலர்கள் ஜோதி யாரஜியைத்தான் கூகுளில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மே 10-ம் தேதி சைப்ரஸில் நடந்த சர்வதேச தடகளப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டிய ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றதோடு, 20 ஆண்டுக்கால தேசிய சாதனையையும் முறியடித்திருக்கிறார் ஜோதி யாரஜி. 2002-ல் தடைதாண்டிய 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 13.38 நிமிடங்களில் தங்கம் வென்றார் அனுராதா பிஸ்வால். அதே தூரத்தை 13.23 நிமிடங்களில் ஓடி முடித்து, தங்கம் வென்று, அனுராதாவின் ரெக்கார்டை முறியடித்து மொத்த … Read more

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுவையில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது. இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுவையில் ஒரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மழை நாளை தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான … Read more

எவரெஸ்ட்டில் 10 முறை ஏறி சாதனை படைத்த முதல் பெண்; லக்பா ஷெர்பா சாதித்தது எப்படி?

பத்தாவது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை நிகழ்த்தியுள்ளார், நேபாளத்தை சேர்ந்த 48 வயதாகும் லக்பா ஷெர்பா. தற்போது அமெரிக்காவில் தன் மூன்று குழந்தைகளுடன் வசித்து வரும் இவர், ‘அடுத்ததாக உலகின் இரண்டாவது மிகப் பெரிய சிகரமான K2-வில் ஏறவிருக்கிறேன்’ என்று கூறுகிறார். Lhakpa Sherpa நேபாள நாட்டை சேர்ந்த லக்பா ஷெர்பா, நேற்று எவரெஸ்ட் சிகரத்தில் 10வது முறையாக ஏறியுள்ளார். இதன் மூலம் தன்னுடைய சொந்த சாதனையை தானே முறியடித்துள்ளார். 10 முறை எவரெஸ்ட் சிகரத்தில் … Read more

கோலிவுட் ஸ்பைடர்: தயாராகும் ஸ்டாலினின் பயோபிக்; வாய்ப்புகள் குறைந்த நடிகைக்கு மகள்களின் அட்வைஸ்!

குற்றப்பரம்பரை சம்பந்தமாக முன்பு பட உலகில் நிறைய பஞ்சாயத்துக்கள் நடந்தன. அந்தக் கதையைக் கையாள்வதில் இயக்குநர்கள் பாலா, பாரதிராஜா இருவருக்கும் கடும் கருத்து மோதல்களும், கடுமையான வார்த்தை பிரயோகங்களும் அரங்கேறியது. பின்னர் இருவருக்கும் வேண்டியவர்கள் சமாதானம் செய்து வைக்க, இருவரும் சமாதானம் ஆனார்கள். அதன்பின், அந்த பட கதையை படமாக்கும் முயற்சியில் இருந்து பரஸ்பரம் விலகிக் கொண்டார்கள். அப்புறம் கேட்பாரற்று அந்த ஸ்கிரிப்ட் அப்படியே கிடந்தது. புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் உள்ள சசிகுமார் இந்தப் புத்தகத்தை எடுத்துப் … Read more

NSE முறைகேடு; சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்பிரணியன் இருவருக்கும் ஜாமீன் மறுப்பு!

பங்குச் சந்தையை உலுக்கிய அதேசமயம் இன்னமும் பதில் கிடைக்காத பல நூறு கோடி மதிப்பிலான என்.எஸ்.இ முறைகேட்டில் சமப்ந்தப்பட்ட சித்ரா ராமகிருஷ்ணன், ஆனந்த் சுப்ரமணியன் இருவரின் ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 2013 முதல் 2016-ம் ஆண்டு வரை தேசிய பங்கு சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பதவி வகித்த சித்ரா ராமகிருஷ்ணன், பதவிக்காலத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி விசாரணையை மேற்கொண்டது. விசாரணையில் … Read more