இன்றைய ராசி பலன் | 18/02/2022 | Daily Rasi Palan | Daily Horoscope | Astrology | Sakthi Vikatan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். #இன்றையராசிபலன் Today’s Horoscope | rasi palan #DailyHoroscope​ | #Rasipalan​ | #Horoscope​ #Raasi​ #Raasipalan #mesham #rishabam #mithunam #kadagam #simmam #kanni #thulam #viruchigam #dhanusu #magaram #kumbam #meenam #சந்திராஷ்டமம் #chandrastamam 12 ராசிகளுக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2022 : https://bit.ly/3srMOs Source link

பஞ்சாப்: `முதல்வர் பதவியிலிருந்து அமரீந்தர் சிங் நீக்கப்பட்டது இதனால்தான்…' – ரகசிய உடைத்த ராகுல்!

2017-ம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தவர் பஞ்சாப்பின் அமரீந்தர் சிங். அதைத் தொடர்ந்து, பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராகவும் அமரீந்தர் சிங் பதவி வகித்து வந்தார். இந்த நிலையில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரஸ் கட்சியில் முக்கியத் தலைவர்களுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அமரீந்தர் சிங் அறிவித்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை அமரீந்தர் … Read more

`சுப நிகழ்ச்சிக்கு ஷாமியானா; துக்க நிகழ்வுக்கு ஐஸ் பாக்ஸ்' – அமமுக வேட்பாளரின் `அடடே' வாக்குறுதிகள்!

தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் நிறைவடைந்தது. பிரசாரத்தின் போது, பல்வேறு அரசியல் கட்சியினரும் புதுமையான வகையில் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு, மக்களை கவர்ந்தனர். பொதுவாக சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களாக இருந்தால், அதில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை வசீகரிக்க தாங்கள் வெற்றிப் பெற்றால், பேருந்து நிலையம், கல்லூரி, தொழிற்சாலை உள்ளிட்டவைகளை கொண்டு வருவோம் என வாக்குறுதி கொடுப்பார்கள். அதே உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களை … Read more

காரைக்குடி: தொழிற்பயிற்சி நிறுவன ஆசிரியருக்கு கத்திக்குத்து: மாணவர் கைது! – நடந்தது என்ன?

காரைக்குடி அமராவதிப்புதூரில் அரசு ஐ.டி.ஐ உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இயந்திரவியல் பிரிவில் ஓவிய ஆசிரியராக அரியக்குடியைச் சேர்ந்த ராஜா ஆனந்த் என்பவர் (48) பணியாற்றி வருகிறார். கடந்த 8-ம் தேதி ஓவிய வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது, 18 வயது மாணவன் ஒருவன் வகுப்பறையில் செல்போன் பார்த்துக் கொண்டு இருந்துள்ளான். அதைக் கண்ட ஆசிரியர் ராஜா ஆனந்த், அவனைக் கண்டித்ததுடன் செல்போனை பறித்துள்ளார். ஆத்திரமடைந்த மாணவன், ஆசிரியருடன் தகராறில் … Read more

`வலிமை' கார்த்திகேயா Exclusive: "அஜித் சார் என் பைக்கை செக் பண்ணிட்டுத்தான் ஷூட்டிங்குக்கு விட்டார்!"

“ஒரு தெலுங்குப் படம் பண்ணிட்டு இருந்த நேரத்துல ‘வலிமை’ படத்துக்காக என்னோட மேனேஜருக்கு ஒரு மெசேஜ் வந்துச்சு. என்னால நம்ப முடியல. உண்மையா இல்ல பொய்யானு டவுட் இருந்தது. வில்லன் கேரக்டருக்கு நடிக்கக் கேட்டு மெசேஜ் வந்திருந்தது. அப்புறம், உண்மைன்னு தெரிஞ்சதுக்குப் பிறகு ரொம்ப சந்தோஷமாகிட்டேன். ‘வலிமை’க்கு முன்னாடி வரைக்கும் தமிழ்ல படம் பண்ணதில்லை. முதல் படமே அஜித் சார்கூட வந்தப்போ சந்தோஷப்பட்டேன். ஹெச்.வினோத் சார் படங்களெல்லாம் பார்த்திருக்கேன். அப்புறம், என்னோட ரோல் பற்றிக் கேட்டேன். வினோத் … Read more

`மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே’ தலைப்பில் மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி… அதிகாரி பணி இடைநீக்கம்!

குஜராத் மாநிலத்தில் உள்ள வல்சாத் மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14 அன்று 5 முதல் 8 வகுப்பு வரை உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் பேச்சு போட்டி நடைபெற்றது. இந்தப் பேச்சு போட்டியில் ‘மை ரோல் மாடல் நாதுராம் கோட்சே’, ‘வானத்தில் பறக்கும் பறவைகளை மட்டுமே நான் விரும்புகிறேன்’ மற்றும் ‘நான் ஒரு விஞ்ஞானியாக மாறுவேன். ஆனால் அமெரிக்கா செல்ல மாட்டேன்’ என்ற மூன்று தலைப்புகளின் கீழ் மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் … Read more

“தைரியமிருந்தால் பாஜக வேட்பாளர்களைக் கடத்துங்கள்" – சீமான் காட்டம்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்துத்தான் போட்டியிடுகிறது. நாங்கள் தோற்றால் அது மக்கள் தோற்றதற்குச் சமம். பணம் உள்ளவர்கள் தான் அரசியல் செய்ய வேண்டுமென்றால், இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லக்கூடாது. பணநாயக நாடு என்றுதான் சொல்ல வேண்டும். சீமான் அ.தி.மு.க-விற்கும், தி.மு.க-விற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. அ.தி.மு.க-வில் நடந்த லஞ்சம், அராஜகம், ஊழல்தான் தி.மு.க-விலும் நடந்துவருகிறது. தி.மு.க-வை விட்டால் … Read more

AK- 61: அஜித்துடன் முதல்முறை இணையும் இசையமைப்பாளர்! லுக்கை வடிவமைத்தது யார்? – ஆச்சர்யத் தகவல்கள்!

அஜித்தின் ரசிகர்கள் `வலிமை’ ரிலீஸில் பரபரப்பாக இருக்கிறார்கள். ஆனால் ஹெச்.வினோத்தின் டீமோ ‘ஏகே61’க்கான வேலைகளில் மும்முரமாக இறங்கிவிட்டனர். ஹைதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. இப்போது அரங்கம் அமைக்கும் வேலைகள் நடந்து வருகின்றன. செட் வேலைகள் நிறைவடைந்த பின்பு, படப்பிடிப்புக்கான தேதிகள் முடிவாகின்றன. ஹீரோயினாக தபுவை கமிட் செய்துள்ளனர். ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்திற்குப் பிறகு 22 ஆண்டுகள் கழித்து தற்போது அஜித்துடன் நடிக்கிறார் தபு. ‘வலிமை’யில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கை மாற்றிய அஜித், இதிலும் … Read more

ஆபாச வசனங்கள்; `கங்குபாய்' அலியாவை காபி அடித்த சிறுமி; குவியும் கண்டனங்கள்!

ஆலியா பட் நடித்துள்ள இந்தி திரைப்படம் `கங்குபாய் கத்தியவாடி’. இதனை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 25 அன்று திரையரங்கில் வெளியாகவுள்ளது. ஆனால் இப்படம் வெளியாவதற்கு முன்பே சர்ச்சையில் சிக்கியுள்ளது. மும்பை பாலியல் தொழிலாளியான கங்குபாய் என்ற பெண்ணை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில், பாலியல் தொழில் பற்றிய வசனம் ஒன்றை பீடி பிடித்தபடி ஆலியா பட் பேசியுள்ளார். ஆலியா “திரைப்படம் என்ற பெயரில் … Read more

`தங்கள் வீட்டில் பாதுகாப்பு இல்லாதவர்கள்தான் ஹிஜாப் அணியவேண்டும்!' – பாஜக எம்.பி பிரக்யா சிங்

கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பள்ளிக் கல்லூரிகளுக்கு வரக்கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரும் இந்த விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளைக் கூறி வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாகூர் இந்த விவகாரத்தில் சர்ச்சையாக கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “வீட்டில் பாதுகாப்பு இல்லாத பெண்கள்தான் ஹிஜாப் அணியவேண்டும். பள்ளி, கல்லூரியில் அணியவேண்டிய அவசியம் இல்லை. மாணவிகள் … Read more