“ஆயுதம் எடுக்க மாட்டோம் என நினைக்காதீர்கள்..!" – திருச்சியில் கொதித்த காங்கிரஸ் தலைவர்கள்

ஏப்ரல்-13 உப்புச் சத்தியாகிரக நினைவு நாளையொட்டி, திருச்சி ஜங்ஷன் அருகிலுள்ள தியாகி டி.எஸ்.எஸ்.ராஜன் இல்லத்திலிருந்து வேதாரண்யத்திற்கு ‘உப்பு சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை’யினை காங்கிரஸ் கட்சியினர் துவங்கினர். இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய நிதியமைச்சர் பா.சிதம்பரம், முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர்களான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு மற்றும் திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொண்டனர். ப.சிதம்பரம் ப.சிதம்பரம் பேசுகையில், “உப்பு என்பது ஒரு அடையாளப் பொருள். உப்புக்கு ஆங்கிலேயர்கள் வரி விதித்தார்கள். … Read more

நீலகிரி: பாகற்காயை வாங்க மறுக்கும் இடைத்தரகர்கள்; வேதனையில் விவசாயிகள்!

மலையகத்தின் சமவெளி என அழைக்கப்படும் நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் தேயிலைத் தோட்டங்களும் நெல் வயல்களும் நிறைந்த பகுதியாக காணப்படுகின்றன. காபி,குறுமிளகு, ஏலக்காய் போன்றவை பயிரிடப்படும் அதே வேளையில் நாட்டு காய்கறிகளும் பயிரிடப்படுகின்றன. கோடை வெயிலில் நல்ல மகசூல் தரக்கூடிய பாகற்காய்,பஜ்ஜி மிளகாய் போன்றவற்றைப் பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டுவது வழக்கம்.கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிடப்பட்டிருக்கும் பாகற்காய்கள் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளன. பாகற்காய்களை கீழே கொட்டும் விவசாயிகள் கூடலூர் விவசாயிகளிடம் … Read more

மரியுபோல் நகரில் 1000-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் சரண்! – ரஷ்ய அமைச்சகம் தகவல்

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய போர், இன்னும் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உக்ரைனின் மிக முக்கிய நகரமான மரியுபோல் நகரை ரஷ்யா மிகக் கடுமையாக தாக்கி வருகிறது. போரில் தாக்குதலுக்கு உள்ளான உடல்களை எரிப்பதற்குக் கூட இடமில்லாமல் மக்கள் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உக்ரைனின் மரியுபோல் நகரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என தென்கொரிய நாடாளுமன்றத்தில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உரையாற்றியதாகக் கூறப்படுகிறது. உக்ரைன் அதிபர் … Read more

“திமுக-வுக்கு ஜால்ரா மட்டுமல்ல, மிருதங்கம்கூட அடிப்பேன்!" – ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

1930-ம் ஆண்டு ஏப்ரல் 13-ம் தேதி, உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ற நாள். காந்தி சபர்மதி ஆசிரமத்தில் இருந்து இந்த போராட்டத்தை தொடங்க, மூதறிஞர் ராஜாஜி தலைமையில் திருச்சியிலிருந்து வேதாரண்யத்தை நோக்கி உப்பு சத்தியாகிரகப் பேரணி ஒன்று புறப்பட்டது. இந்த நினைவு நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் கட்சியினர் திருச்சியிலிருந்து வேதாரண்யத்தை நோக்கி, ‘உப்புச் சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை’ நிகழ்வை மேற்கொண்டு வருகின்றனர். உப்புச் சத்தியாகிரக நினைவு பாத யாத்திரை அந்த வகையில் இந்த ஆண்டும் … Read more

இனி நடுங்க வேண்டாம், நலம் மட்டுமே… ஆண்களை அதிகம் பாதிக்கும் பார்க்கின்சன்'ஸ்

1998… அப்போது அவருக்கு வயது 55. சில வருடங்களில் பணி ஓய்வு பெற்று அமைதியான வாழ்வை வாழ நினைத்தவரை உலுக்கியது அந்த நிகழ்வு… திடீரென ஒருநாள் அவரின் கைகள் நடுங்க ஆரம்பித்தன. ஏதாவது சத்துக் குறைபாடாக இருக்கும் என்று விட நினைத்தாலும் நடுக்கம் குறைந்தபாடில்லை. கொஞ்சம் கொஞ்சமாய் நடுக்கம் மோசமாக, நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டார். அவருக்கு வந்திருப்பது மூளை சம்பந்தப்பட்ட பார்க்கின்சன்’ஸ் நோய் (Parkinson’s Disease)! நிறைய மருத்துவர்களைப் பார்த்தும் எந்தப் பலனும் இல்லை. அன்றாட வாழ்வை … Read more

“தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலிலுள்ள வெற்றிடத்தை மதிமுக நிரப்பும்!" – துரை வைகோ

விருதுநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் சூலக்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் குழுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ம.தி.மு.க. கட்சியின் தலைமை நிலைய பொதுச்செயலாளர் துரை வையாபுரி தலைமைத்தாங்கி தொடங்கி வைத்துப் பேசினார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ம.தி.மு.க-வின் அமைப்பு நிர்வாகத்துக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான மாவட்ட நிர்வாகிகள் குழுக்கூட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தி வருகிறோம். இதுவரை 6 மாவட்டங்களில் மாவட்டக்குழு கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டு 7-வது மாவட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் … Read more

'பீஸ்ட்' விஜய், அடுத்த பட வாய்ப்பு, அன்பு சூழ் குடும்பம்! நியூஸ் ரீடர் சுஜாதா பாபு ஷேரிங்ஸ்

ஃபாத்திமா பாபு, அனிதா சம்பத் உள்பட எத்தனையோ செய்தி வாசிப்பாளர்கள் நடிப்பில் களமிறங்கிப் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் சுஜாதா பாபு. சன் டி.வியின் செய்திவாசிப்பாளரான இவர், நெல்சன் இயக்கத்தில், விஜய்யின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பட வாய்ப்பு கிடைத்தது பற்றி, விஜய்யுடன் நடித்தது, நியூஸ் ரீடிங், குடும்பம் என பல விஷயங்களையும் பகிர்ந்து கொள்கிறார் அவர். சுஜாதா பாபு “நானே விஜய்யின் ரசிகன்தான்!” – பீஸ்ட், KGF 2 படங்களோடு வெளியாகும் `ஜெர்ஸி’ … Read more

How to: ஆடைகளில் படிந்த கறைகளை நீக்குவது எப்படி? I How to remove stains from clothes?

அதிக விலைகொடுத்து வாங்கிய ஆடைகளிலும், மிகவும் விரும்பும் ஆடைகளிலும் கறை பட்டுவிட்டால், மனது ஏற்றுக்கொள்ளாது. சில கறைகளை, சில வழிமுறைகள் மூலம் நீக்கிவிட வாய்ப்பிருக்கிது. அதற்கான வழிகாட்டல் இங்கே. ஆனால், ஒரே முயற்சியில் கறை நீங்கும் என்று உத்தரவாதம் இல்லை. கறை நீங்கும் வரை அதை தொடர்ந்து சில வாஷ்களுக்குச் செய்ய வேண்டி வரலாம். மேலும், கறை இருக்கும் துணிகளை அயர்ன் செய்தால் அந்தக் கறை இன்னும் நன்றாக செட் ஆகிவிடக்கூடும் என்பதால், அதை தவிர்க்கவும். டீ … Read more

இலங்கை: அதிபரை பதவி நீக்கம் செய்ய நம்பிக்கையில்லாத் தீர்மானம்… எதிர்க்கட்சிகள் கையெழுத்து!

இலங்கையில் நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதன் காரணமாக, அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டுமென பொதுமக்கள் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்திவருகின்றனர். விலைவாசி அதிகரித்து வருவதால், மக்கள் வாழ்வாதாரம் இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர். அதிபரை எதிர்த்து இலங்கை மக்கள் விடிய விடிய கொட்டும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. WITHOUT CHANGE, WE WILL NOT STOP. @sjbsrilanka … Read more