கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை… நிதியுதவி அளிக்க முன்வரும் சீனா!

1948 சுதந்திரத்துக்குப் பிறகு முதன்முதலாக இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதால், அங்கு அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. இலங்கையில் தற்போது தினமும் 8 மணிநேரம் மின்தடை நிலவுகிறது. அதே சமயம் ஒரு டீ 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒட்டுமொத்த இலங்கையுமே கடந்த 1 மாதமாக மின், எரிபொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரமான கொழும்பு கூட இதற்கு விதிவிலக்கல்ல. தினமும் அட்டவணை போடப்பட்டு மின்தடை செயல்படுத்தப்படுகிறது. … Read more

மயிலாடுதுறை: இடிந்து விழும் நிலையில் பள்ளிக்கட்டடம் – அச்சத்தில் மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்!

மயிலாடுதுறை அருகே சேதமடைந்த பள்ளிக் கட்டடத்தை  உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி  மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் மயிலாடுதுறை மாவட்டம் பட்டவர்த்தி அருகேயுள்ள தலைஞாயிறு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியிலுள்ள வகுப்பறைகளில் மேற்கூரைகள் முழுவதுமாக சேதமடைந்து காணப்படுகின்றன. இந்த நிலையில், மேற்கூரையிலிருந்து காரைகள் பெயர்ந்து வகுப்பறையில் விழுந்துள்ளன. இதனால் பள்ளிக்கு மாணவர்களை … Read more

ஜெயிச்சா கல்யாணம்! – இத்தாலியின் சதுரங்க சுயம்வரம்

பேஷன் நகரம் (Milan), தங்க நகரம் (Vincenza), மிதக்கும் நகரம் (Venice) இப்படி பல நகரங்கள் கேள்விப்பட்டிருப்பீங்க. ஏன், இத்தாலியில் உள்ள பேய் கிராமம் பற்றி கூட நாம் பதிவிட்டுள்ளோம். சதுரங்க நகரம் (City of Chess) கேள்விப்பட்டதுண்டா? ஆம், இந்நகரம் இத்தாலியில் வெனிஸ் நகரத்தின் மிக அருகாமையில் தான் இருக்கிறது. இந்நகருக்கு ஏன் இந்த பெயர் வந்தது? இந்நகரத்திற்கு அப்படி என்ன சிறப்பு என்பதை பற்றி தான் நாம் இன்று இந்த பதிவில் காணவுள்ளோம். இத்தாலியில் … Read more

காதல் வலை; அந்தரங்க வீடியோ பதிவு; கூட்டு பாலியல் வன்கொடுமை – பள்ளிச் சிறுவர்கள் உட்பட 8 பேர் கைது!

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பாண்டியன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணும், விருதுநகர் மேலத்தெருவில் மெடிக்கல் கடை நடத்திவரும் ஹரிஹரன் என்பவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஹரிஹரன் அந்த இளம்பெண்ணுடன் தனிமையில் இருக்கும்போது, அதை அந்தப் பெண்ணுக்குத் தெரியாமல் மொபைலில் வீடியோ பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. ஹரிஹரன் மேலும், அவர் அந்த வீடியோவை தன் நண்பர்கள் மாடசாமி (37), பிரவீன்(22), ஜீனத் அகமது(27) ஆகியோரிடம் காட்டியிருக்கிறார். அதைப்பார்த்த நண்பர்கள் மூவரும், இளம்பெண்ணுடன் தாங்களும் தனிமையில் இருக்க வேண்டுமெனக் … Read more

உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி பிபின் ராவத்துக்கு பத்ம விபூஷன்!

இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தை முன்னிட்டு வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, அறிவியல், பொறியியல், வணிகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ், போன்ற பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களைக் கௌரவிக்க இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகள் உள்ளன. இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை வழங்கினார். … Read more

பிரைம் டைம் பெருமாளு: சர்ச்சை காட்சியால் சீரியலுக்குக் கிடைத்த பப்ளிசிட்டி; காசிக்குப் போன நடிகை!

“திண்ணையில கிடந்தவனுக்கு திடுக்னு வந்துச்சாம் கல்யாணம்!” வரும் போதே பழமொழியுடன் வந்தார் பிரைம் டைம் பெருமாளு. “நீங்க கேட்ட மாதிரியே லெமன் ஜூஸ் ரெடி. குடிச்சிட்டு கல்யாணமோ, கச்சேரியோ எடுத்து விட‌லாம்” எனச் செய்திக்கு ஆவலானோம். ”கல்யாணம்தான் மேட்டர். சன் டிவியில சமீபத்துல புதுசா ஒளிபரப்பாகத் தொடங்கின ‘எதிர் நீச்சல்’ சீரியல்ல ஒரு சீன். அந்தக் காலத்துலெல்லாம் கல்யாணம் எப்படி நடந்திச்சு? இப்ப மாதிரியா பொண்ணு மாப்பிள்ளையும் கல்யாணத்துக்கு முன்னாடியே சேர்ந்து டான்ஸ் ஆடிட்டிருந்தாங்க? கேட்டா ட்ரெண்டிங், … Read more

நடிகர் சங்கத் தேர்தல்: "விஷாலும், கார்த்தியும் பொறுப்பேற்பர்; அதன்பிறகு…" – மனோபாலா

மகிழ்ச்சியில் திளைக்கிறது நாசர் தலைமையிலான பாண்டவர் அணி. கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பு நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் பிரச்னையின் காரணமாக வாக்குகள் எண்ணப்படாமல் இருந்தன. இந்நிலையில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் பாண்டவர் அணியினர் வெற்றி பெற்றனர். இது குறித்து பொருளாளராக வெற்றி பெற்ற நடிகர் கார்த்தி, ”ரெண்டு ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பிறகு கிடைத்த வெற்றி இது. பதவியேற்கும் நாளில் இருந்து மூன்றாண்டுகள் பதவி வகிப்போம். மூன்று ஆண்டுகளில் நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்படும்.”‘ … Read more

விழுப்புரம்: திருவிழாவுக்காக ஊருக்கு சென்று வந்த மாணவன்; கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சதீஷ் (23). இவர் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், மத்திய அரசு செயல்படுத்தி வரும் 3 மாத தொழிற்கல்வியை பயின்று வந்துள்ளார். சதீஷ், ஆத்தூர் அருகே உள்ள தனது கிராமத்தில் நடைபெறும் கோயில் திருவிழாவிற்காக கடந்த 11-ம் தேதி கல்லூரியிலிருந்து விடுப்பில் சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று (20.03.2022) மாலை 4 மணிக்கு மீண்டும் கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது, சதீஷ் தன் நண்பர்களுடன் வழக்கம்போல் பேசாமல் சற்று … Read more

“ `காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் மீது கவர்னருக்கு என்ன அக்கறை?" – தமிழிசையைத் தாக்கும் நாராயணசாமி

காஷ்மீரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட `தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு நாடு முழுவதும் ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்திருக்கிறது. இந்த நிலையில், அந்த திரைப்படத்தை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் திரையரங்கில் பார்த்தது விவாதப் பொருளாகியிருக்கிறது. இது தொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ பதிவில், “சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. பிரதமர் மோடி குறிப்பாக … Read more

"ஒரே ஒரு பாரதிராஜாதான், ஒரே ஒரு இளையராஜாதான்!" – இசைஞானியின் கலகல பேச்சு

புதுமுகங்கள் நடித்த ‘காதல் செய்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று இசைஞானியின் ஸ்டூடியோவில் நடந்தது. இந்த விழாவிற்கு இயக்குநர்கள் பாரதிராஜா, பி.வாசு உள்பட பலர் வந்திருந்தனர். ட்ரெய்லர் வெளியிட்ட இளையராஜா பேசியதிலிருந்து… “எதிர்கால பாரதிராஜாக்களே… நிகழ்கால பி.வாசுக்களே… எதிர்கால இளையராஜாக்களே…” என்றவர் ஒரு சிரிப்பை சிந்திவிட்டு, “ஏன்யா, காலகாலத்துக்கும் பாரதிராஜாக்கள், இளையராஜாக்கள் வருவாங்களா? கிடையவே கிடையாது. ஒரே ஒரு பாரதிராஜாதான். ஒரே ஒரு பி.வாசுதான். ஒரே ஒரு இளையராஜாதான். ஏன்யா, சூரியன் மாதிரி இன்னொரு சூரியன் … Read more