ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி அல்பேனிஸ் பதவியேற்பு

ஆஸ்திரேலிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான பொதுத்தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன், தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோணி நார்மன் அல்பேனீஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது. இதில் அதிக இடங்களை கைப்பற்றி அந்தோணி அல்பேனீஸ் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகத் தேர்வானார்.  கேன்பரா நகரில் உள்ள அரசு இல்லத்தில் இன்று காலை அந்தோணி அல்பேனீஸ் பதவியேற்றுக் கொண்டார். இவர் ஆஸ்திரேலியாவின் 31-வது பிரதமர் ஆவார். அவருடன் 4 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். … Read more

பலரின் வலி சிலருக்கு லாபம்: 30 மணி நேரத்திற்கு ஒரு கோடீஸ்வரரை உருவாக்கிய கொரோனா

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகை உலுக்கத் தொடங்கிய கோவிட், பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. கொரோனாவால் ஏற்பட்ட இரண்டாண்டு இடைவெளிக்குப் பிறகு உலகப் பொருளாதார மன்றத்திம் கூடியது. அதில், ​​ஏழைகளுக்கு உதவ பணக்காரர்களுக்கு வரி விதிக்க வேண்டிய நேரம் இது என்று ஆக்ஸ்பாம் கோருகிறது. சமீபத்திய ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, “வலியிலிருந்து லாபம்” என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. கோவிட்-19 தொற்றுநோய் ஒவ்வொரு 30 மணி நேரத்திற்கும் ஒரு புதிய கோடீஸ்வரரை உருவாக்குகிறது என்ற செய்தி சந்தர்ப்பங்களின் பலன் சிலருக்கு … Read more

Monkeypox: உலகை அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல்; அறிகுறிகளும் தடுக்கும் முறைகளும்

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து உலக நாடுகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் நிலையில், மங்கி பாக்ஸ் எனப்படும் ஒரு வகை குரங்கு காய்ச்சல் நோய் பரவத் தொடங்கி உள்ளது. இது அடுத்த பெருந்தொற்றாக உருவெடுக்குமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அமெரிக்கா, போர்ச்சுகல், இஸ்ரேல் உள்ளிட்ட உலகின் சுமார் 12 நாடுகளில், 92 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் குரங்கு … Read more

தமிழகத்தின் நிவாரணப் பொருட்கள் விரைவில் இலங்கை மக்களுக்கு விநியோகம்

கொழும்பு: தமிழக அரசு அனுப்பிய 45 கோடி ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள் இலங்கை அரசிடம் கையளிப்பு – எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு விநியோகிக்கப்படும் என்று தெரிகிறது. கடந்த 18ம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட 45 கோடி ரூபாய் பெறுமதியான நிவாரண பொருட்கள், இலங்கை கொழும்பு துறைமுகத்தை இன்று (22) மாலை சென்றடைந்தது. அவற்றை, கொழும்பில் உள்ள இந்திய ஹை-கமிஷனர் கோபால் பாக்லே, இலங்கை பிரதிநிதிகளிடம் ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் … Read more

பிளாஸ்டிக்கை சிதைக்கும் என்சைம்கள்; விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள புதிய தொழில்நுட்பம்

பிளாஸ்டிக் கழிவுகள் உலகில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்து வரும் நிலையில், பிளாஸ்டிக்கை சில மணி நேரங்களிலேயே எளிதில் அழிக்கும் வழியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருப்பது உலகிற்கு பெரும் நிம்மதி அளிக்கும் விஷயம் என்றால் மிகையில்லை. நிலத்திலும் நீரிலும் ஆண்டு தோறும் கொட்டப்படும் லட்சக்கணக்கான டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள், நிலம் மற்றும் நீர் வாழ் உயிரினங்களுக்கு எமனாக மாறுகிறது. அந்த வகையில் பிளாஸ்டிக்கை அழிக்கும் நொதி, உலகில் பேரழிவை தடுக்கும் ஒரு மைல்கல்லாக இருக்கும் என நம்பப்படுகிறது. பிளாஸ்டிக்குகள் … Read more

ஆடு பகை குட்டி உறவா: விளாடிமிர் புடினின் மகளுடன் ரகசியமாக வாழும் இகோர் ஜெலென்ஸ்கி

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான மோதல் போராக வெடித்து, உலகையே பொருளாதார ரீதியில் பாதித்துள்ள நிலையில், அதிர்ச்சியூட்டும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பிரபல ஜெர்மன் பத்திரிக்கையான Der Spiegel மற்றும் ரஷ்ய ஊடகமான iStories இணைந்து நடத்திய ஆய்வில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் மகள்களில் ஒருவர் ஜெர்மனியில் ரகசியமாக ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாக தெரிவிக்கிறது. ரஷ்ய அதிபர் புடினின் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மகள்களின் ஒருவரான கேத்தரினாவைப் பற்றித்தான் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. மேலும் படிக்க | ரஷ்ய அதிபர் … Read more

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி கூறிய இலங்கை பிரதமர்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு தமிழக அரசு சார்பாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 40 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, 50 மெட்ரிக் டன் பால் பவுடர் மற்றும் 137 வகையான மருந்து பொருட்கள் என 136 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.  இதற்காக தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கைக்கு தமிழக அரசு நிவாரண பொருட்களை … Read more

காதலியின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளாத புடின்; அதிர வைக்கும் தகவல்கள்

விளாடிமிர் புடினின் உடல்நிலை குறித்து பல வகையான கூற்றுக்கள் தினம் தினம் வெளிவருகின்றன. தற்போது, அவருக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உடல் நிலை சீர் குலைந்துள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. சில அறிக்கைகளில், அவர் ஒரு புற்றுநோயாளி என்று கூறப்படுகிறது. தி சன் நாளிதழின்ல் வெளியான ஒரு புதிய அறிக்கையில், புடின் சமீபத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. புற்றுநோய் அறுவை சிகிச்சை காரணமாக, அவர் … Read more

கிரிப்டோவில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை; காரணத்தை விளக்கும் பில் கேட்ஸ்

கிரிப்டோ முதலீட்டில் சிறு முதலீட்டாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் கூட முதலீடுகளின் அளவை பார்க்கும் போது பெரும் பணக்காரர்கள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் தான் அதிகம். பிட்காயின் உட்பட அனைத்து முன்னணி கிரிப்டோகரன்சியின் மதிப்புகள் தற்போது சரிந்துள்ள வேளையில் பில் கேட்ஸ் தற்போது தான் ஏன் கிரிப்டோகரன்சியில் ஒரு டாலர் கூட முதலீடு செய்யவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் சமீபத்தில் Reddit தளத்தில் ‘Ask Me Anything’  என்ற … Read more

அமெரிக்க அதிபர் ரஷ்யாவுக்க்குள் செல்ல நிரந்தரத் தடை: விளாடிமிர் புடின்

ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடி கொடுக்க அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் எடுத்த நடவடிக்கை சர்வதேச கவனங்களை ஈர்த்துள்ளது. ரஷ்யாவிற்குள் நுழைவதற்கு, அமெரிக்க அதிபருக்கு நிரந்தர தடை விதித்துள்ளார் புடின். இது மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைக்கு எதிரான ஒரு அடையாள நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்ட குறிப்பிடத்தக்க அமெரிக்கர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை ரஷ்யா வெளியிட்டுள்ளது என்று சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.  மேலும் படிக்க | மேற்கத்திய நாடுகள் தடைக்கு … Read more