Secret of Death: சாகாவரம் பெற்ற உயிரினத்திற்கும் எண்ட் கார்ட் போடும் நத்தை

லண்டன்: ‘அழியாத உயிரினம் என்று அழைக்கப்படும் நீர்க் கரடிகள்’ எவ்வாறு இறக்கின்றன என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். கொதிக்கும் நீராலோ அணுகுண்டுகளாலோ கொல்ல முடியாத உயிரினத்தை நத்தையால் கொன்றுவிட முடியும் என்ற ரகசியத்தை அவிழ்த்துள்ளனர் விஞ்ஞானிகள். ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, நுண் விலங்குகள் இனத்தைச் சார்ந்த நீரில் வாழும் விலங்கு நீர்க் கரடி டார்டிகிரேட்ஸ் (Tardigrade). இவை, மிகவும் பன்முகத்தன்மை வாய்ந்த சூழலில் வாழக்கூடியவை. ஆனால் நத்தை வெளியிடும் திரவத்தால் இவை இறக்கக்கூடும் என்ற ரகசியத்தை ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். உலகில் … Read more

Environmental Disaster: 750 டன் டீசலுடன் கவிழ்ந்த கப்பல் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பேரழிவு

Environmental Disaster: எகிப்தில் இருந்து மால்டாவுக்கு டீசல் எரிபொருளை ஏற்றிச் சென்ற கப்பல், துனிசியாவின் கடற்கரைக்கு அருகில் கவிழ்ந்த விபத்து மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. சுற்றுச்சூழல் பேரழிவை உருவாக்கும் என்று அஞ்சப்படும் அந்தக் கப்பல் 750 டன் டீசலுடன் சென்றுக் கொண்டிருந்தபோது, துனிசியாவின் கடற்கரைக்கு அருகில் மூழ்கியதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.   “சுற்றுச்சூழல் பேரழிவு” ஏற்படக்கூடிய நிலையில், எரிபொருள் நிரப்பப்பட்ட கப்பல் கவிந்த சம்பவம் துனிசியா கடற்கரையை சுற்றியுள்ள பகுதிகளில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை (2022 … Read more

Rashi Parivartan on Russia: ரஷ்யாவின் பொருளாதாரத்தை பாழாக்கும் கிரகங்களின் ராசி மாற்றம்

புதுடெல்லி: ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையேயான போர் திடீரென உலகம் முன் ஒரு புதிய நெருக்கடியை உருவாக்கியது, இது பல வழிகளில் எதிர்பாராதது மற்றும் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தற்போதைய கிரகங்களின் மாற்றம் ரஷ்யாவின் பொருளாதாரத்தை பாதிக்குமா? ஆச்சார்யா டாக்டர் விக்ரமாதித்யா ரஷ்யாவின் பொருளாதாரத்தின் மீதான கிரகங்களின் கோசார பரிவர்த்தனையை கணித்து சொல்கிறார். இந்திய ஜோதிடத்தின்படி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உலகம் முழுவதும் பதற்றமான காலகட்டமாகவே இருக்கும் என்கிறார் ஆச்ச்சார்யா விக்ரமாதித்யா. நண்பன் எப்போது எதிரியாகிறான் என்பது … Read more

திவால் நிலையை அறிவித்த அரசு: இலங்கை வாங்கியுள்ள கடன் விவரம் என்ன?

Sri Lanka Economic Crisis: அண்டை நாடான இலங்கையின் பொருளாதார நிலை மோசமடைந்து வருகிறது. ஒரு வருடத்திற்குள் இலங்கை மீதான மொத்தக் கடன் 1600 கோடி டாலர் அதிகரித்துள்ளது.

உக்ரைனுக்கு செல்லத் தயார்…ஜோ பைடன் அறிவிப்பு

உக்ரைன் மீது ரஷ்யா 51-வது நாளாக தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகள் உதவி வரும் நிலையில், மரியுபோல் நகரில் உக்ரைனின் 36-வது படைப்பிரிவை சேர்ந்த 1,062 வீரர்கள் தங்கள் ராணுவத்திடம் சரணடைந்துள்ளதாக ரஷ்யா அறிவித்தது. ஆனால், மரியுபோலில் தாக்குதல் தொடர்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.  மேலும் படிக்க | உக்ரைக்கு $800 மில்லியன் இராணுவ உதவி; அமெரிக்க அதிபர் பைடன் அறிவிப்பு நேற்று முன் தினம் அமெரிக்கா உக்ரைனுக்கு 800 மில்லியன் … Read more

ட்விட்டர வாங்கணும், விலை என்ன: கேட்ட Elon Musk அடுத்து செய்தது என்ன

எலோன் மஸ்க்: உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், தனது கருத்துக்கணிப்பு ஒன்றன் மூலம் தற்போது விவாதத்தில் உள்ளார். ட்விட்டரில் வெளியிடப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், ட்விட்டர் பங்குகளை வாங்குவது குறித்து அவர் கருத்து கேட்டுள்ளார். ட்விட்டரின் 100% பங்குகளை வாங்குவதற்கான சிறந்த மற்றும் இறுதி ஆஃபர் என்ன என்று பங்குதாரர்களிடம் மஸ்க் கேட்டுள்ளார். மஸ்க் ட்விட்டரின் ஒரு பங்கின் விலையை ஒரு பங்குக்கு $54.20 என நிர்ணயித்துள்ளார். கார்ப்பரேட் ரைடர்-பாணி உத்தி கார்ப்பரேட் ரைடர் பாணியில் … Read more

எலன் மஸ்க்கால் ட்விட்டர் நிறுவனத்தில் சலசலப்பு…ஊழியர்கள் பணயக் கைதிகளா?

டெஸ்லா நிறுவன தலைவர் எலன் மஸ்க் அண்மையில் ட்விட்டர் நிறுவனத்தின் 9 சதவீத பங்குகளை வாங்கினார். இதனைத் தொடர்ந்து, ட்விட்டர் நிறுவன இயக்குநர்கள் குழுவில் அவர் இணைய உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இயக்குநர் குழுவில் இணையப் போவதில்லை என எலன் மஸ்க் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து ட்விட்டர் இறுவனத் தலைவர் பிரெட் டெய்லருக்கு கடிதம் எழுதிய எலன் மஸ்க், அந்நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு வாங்கத் தயாராக உள்ளதாக கூறினார். இந்திய ரூபாயில் இதன் … Read more

பேச்சுவார்த்தைக்கான இலங்கை அரசின் அழைப்பை நிராகரிக்கும் போராட்டக்காரர்கள்

கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில், போராட்டக் குழுவினரின் பிரதிநிதிகளை சந்தித்து பேசத் தயார் என்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்தார்.  இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, மக்களின் அடிப்படை தேவைகள் கூட பூர்த்தி செய்ய முடியாத அளவு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  விலை வாசி உயர்வு மற்றும் உணவுப் பொருள் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைவாழ் மக்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். பொருளாதார நெருக் கடிக்கு … Read more

பிங்க் லேடிக்கு ஆடம்பர வீட்டை கிம் ஜாங் உன் பரிசளித்த காரணம் இதுதான்

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்ன செய்தாலும் அது வித்தியாசமானதாகவும், சர்வதேச அளவில் பேசுபொருளாகவும் மாறுகிறது. அது அணு ஆயுத சோதனை செய்யும் தைரியமாக இருந்தாலும் சரி, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடும் துணிச்சலாக இருந்தாலும் அவர் செய்திகளில் அவ்வப்போது இடம் பெறுவது வழக்கமாகிவிட்டது. தற்போது கிம் ஜாங் உன் அனைவரின் கவனத்தை பெற்றிருப்பது பரிசளித்த விஷயம் தொடர்பான விஷயம். 79 வயதான பிரபல வட கொரிய செய்தி தொகுப்பாளருக்கு, நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் … Read more

Tropical Storm: பிலிப்பைன்ஸில் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்திற்கு 138 பேர் பலி

பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெப்பமண்டல புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. நிலச்சரி மற்றும் வெள்ளத்தினால் குறைந்தது 138 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்திய பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட வெப்ப மண்டலப் புயல் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. கேபிஸ், அக்லான், ஆண்டிக் மற்றும் இலோய்லோ மாகாணங்களில் 159 பகுதிகளில் கடந்த புதன்கிழமை  (ஏப்ரல் 13ம் தேதி) வெப்பமண்டலப் புயல் தாக்கியது. மெகி  என்று பெயரிடப்பட்ட இந்த புயலால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்குப் … Read more