உக்ரைனுக்கு எதிராக மனித உடலை ஆவியாக்கும் vacuum bomb-ஐ பயன்படுத்தியதா ரஷ்யா?

ரஷ்யா உக்ரைன் இடையில் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றம் நாளுக்கு நாள் புதிய திருப்புமுனைகளை சந்தித்து வருகிறது.  தற்போது கிடைத்துள்ள சமீபத்திய தகவல்களின் படி, தங்கள் நாட்டு முக்கிய கட்டுமானங்களையும் மக்களையும் தாக்க, ரஷ்யா வேக்குவம் குண்டுகளை பயன்படுத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் திங்களன்று இதை தெரிவித்தார்.  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களை சந்தித்த பின்னர், அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா செய்தியாளர்களிடம் கூறுகையில், நடந்து வரும் மோதலில் ரஷ்யா வேக்குவம் வெடிகுண்டு … Read more

சிவாலயத்திற்கு உரிமை கொண்டாடிய நாடுகள்! சர்வதேச நீதிமன்றத்தில் வென்றது யார்?

புதுடெல்லி: இந்து மதத்தின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான மகாசிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. மகாசிவராத்திரி நாள் இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகள் கொண்டாடுகின்றன.  பல நாடுகளில் சிவபெருமானின் புராதனமான கோயில்கள் உள்ளன. ஒரு சிவன் கோவிலுக்கு (Lord Shiva Temple) இரு நாடுகள் உரிமை கொண்டாடி, அதற்காக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது. இறுதியில்  எந்த நாட்டுக்கு அந்த முக்கியமான சிவன் அருள்பாலித்தார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம். இதிலிருந்து புரியும் முக்கியமான விஷயம் என்னவென்றால், சிவ வழிபாடு என்பது … Read more

மைக்ரோசாப்ட் CEO சத்யா நாதெல்லாவின் 26 வயது மகன் ஜைன் நாதெல்லா காலமானார்

மைக்ரோசாப்ட் தலைமை  செயல் அதிகாரி (CEO) சத்யா நாதெல்லாவின் (Satya Nadella) மகன் ஜைன் நாதெல்லா (Zain Nadella) திங்கள்கிழமை காலமானார். அவருக்கு வயது 26. அறிக்கைகளின்படி, ஜெயின் பெருமூளை வாதம் என்னும் இந்த குறைபாடு  இருந்தது. பெருமூளை பாதிப்படைவதால் ஏற்படும் பெருமூளை வாதம் அல்லது பெருமூளை முடக்கு நோயினால் பாதிப்படைந்தவரால் பொதுவாக நிற்கவோ நடக்கவோ இயலாது. சாஃப்ட்வேர் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில், ஜெயின் இறந்துவிட்ட தக்வல் குறிப்பிடப்பட்டுள்ளது. ” இறந்தவரது குடும்பத்தை மன … Read more

Russia Ukraine Crisis: ‘மிருகத்தனமான’ கிளஸ்டர் வெடிபொருட்களை பயன்படுத்துகிறது ரஷ்யா – உக்ரைன் புகார்

ரஷ்யாவின் உக்ரைன் மீதான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில்,அமெரிக்காவுக்கான உக்ரைன் தூதர் ரஷ்யாவின் அடாவடி தாக்குதல் பற்றி குற்றம் சாட்டுகிறார். மேலும், மனித உரிமைக் குழுக்களும் ரஷ்யாவின் மீது மிகவும் பயங்கரமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றன. . திங்களன்று உக்ரேனியர்களை வெடிபொருட்கள் மற்றும் வேக்குவம் குண்டுகளால் தாக்கியதாக ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யப் படைகள் பரவலாக தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியதாகத் தெரிகிறது என்று சர்வதேச மன்னிப்புச் சபையும், மனித உரிமை கண்காணிப்பகமும் (Amnesty International and Human … Read more

‘எங்கள் கண்ணீரைப் பாருங்கள்; ரஷ்யாவின் பொய்யை அல்ல’ : ஐநாவில் உக்ரைன்

ஜெனிவா: ரஷ்யா – உக்ரைன் போர் தொடர்பான ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின்  (UNGA)  அவசரக் கூட்டத்தில், பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்பதை இந்தியா மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்தியுள்ளது. ஐநாவின் 11வது அவசரகால சிறப்பு அமர்வில்  உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ராஜீய நிலையிலான பாதைக்குத் திரும்புவதைத் தவிர வேறு வழியில்லை என்று புது தில்லி உறுதியாக நம்புகிறது என்றார். ‘இயன்ற அனைத்தையும் செய்கிறோம்’ டிஎஸ் திருமூர்த்தி உக்ரைனில் … Read more

Safety Pin: சேப்டி பின் கண்டுபிடிப்பு குறித்த ஆச்சர்ய தகவல்கள் !

சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி பின் என்ற பொருள் மிகவும் பயனுள்ளது. புடவையை அணிந்து கொள்ளும் போது மடிப்புகளை பின் செய்வது முதல், அவசரகாலத்தில் நம் மானத்தைக் காப்பாற்றுவது வரை, பல விதமான விஷயங்களுக்கு நாம் சேப்டி பின்னை பயன்படுத்துகிறோம் . அத்தகைய சேப்டி பின்னின் வரலாறு பற்றி உங்களுக்கு தெரியுமா? அதன் பெயருக்குப் பின்னால் உள்ள கதை என்ன, அது ஏன், எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதை இன்று அறிந்து கொள்ளலாம்.  ஹூக்கு எனப்படும் … Read more

உக்ரைன்: கண்ணீருடன் இசைக்கப்பட்ட தேசிய கீதம்; மனதை உருக்கும் வீடியோ

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஏவுகணை மற்றும் ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டு பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது. உக்ரைனில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வெளியேறியுள்ளனர், மேலும் தாக்குதலில் இருந்து தப்ப, பதுங்கு குழிகளிலும், மெட்ரோ நிலையங்களிலும், பாதுகாப்பான இடங்களிலும் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளனர். இருப்பினும், ரஷ்ய துருப்புக்களின் தாக்குதலில், வெடிகுண்டு வெடிக்கும் சத்தத்திற்கு மத்தியில், பலர் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் உட்பட உக்ரைனின் பொதுமக்கள் சமூக … Read more

உக்ரைனிற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய 'Mriya' விமானத்தை வீழ்த்திய ரஷ்யா!

ரஷ்யா-உக்ரைன் போரால், இப்போது உலக அளவில், பெரும் பதற்றத்தையும்,மூன்றாம் உலக போர் மூளுமோ என்ற அச்சத்தையும் விதைத்துள்ளது. அதே நேரத்தில், பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் மறுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா தனது தாக்குதல்களின் தீவிரத்தை அதிகரித்துள்ளது.   இந்நிலையில் இதுவரை உக்ரைனில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய விமானத்தை ரஷ்யா அழித்துள்ளதாக முக்கிய செய்தி வந்துள்ளது. இந்த விமானத்தின் பெயர் ‘மரியா’ என்றும், இந்த தகவலை உக்ரைன் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன் வெளியுறவு அமைச்சர் வெளியிட்ட  தகவல்  உக்ரைனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ … Read more

இந்திய மாணவர்கள் உக்ரைனில் மருத்துவ படிப்புக்கு செல்ல விரும்பும் காரணம் என்ன?

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் எதிரொலியால், யுத்த பூமியாய் உருமாறியிருக்கும் உக்ரைனில் படிக்கும்  ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் நிலைமை கவலையளிக்கிறது. உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடையே பயமும், அச்சமும் எப்போது தீரும்? போரினால் படிப்பு தடைபட்ட நிலையில், அங்கு சிக்கியுள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்களை வெளியேற்றும் இந்திய அரசின் முயற்சியும் தடைபட்டுள்ளது. உக்ரைன் தனது வான்வெளியில் சிவிலியன்கள் விமான பறப்புக்கு தடை செய்ததால், இந்தியர்களை வெளியேற்றுவதற்கான இந்தியாவின் முயற்சிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் பல இந்திய … Read more

Toilet Rules: கழிப்பறை பயன்பாடு தொடர்பாக கடுமையான விதிகள் உள்ள ‘நாடுகள்’ !

ஒவ்வொரு நாட்டிலும் சட்ட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் அமலில் உள்ளன. சட்ட ஒழுங்கை பாதுகாக்க சட்ட விதிக்கப்படுவது மிகவும் அவசியம். ஆனால், உலகில் கழிப்பறையைப் பயன்படுத்துவது தொடர்பாக சில விதிகள் உள்ளன என்றால், ஆச்சர்யமாக இருக்கிறது இல்லையா. இதில் சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளும் அடங்கும். சிங்கப்பூரில் மோசமான பழக்கவழக்கங்களுக்கு கடுமையான தண்டனைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், கழிப்பறையை உபயோகப்படுத்தியக்குப் பிறகு ஃப்ளஷ் செய்யாத பலரை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பொது கழிப்பறையை பயன்படுத்தும் பலர் இது போன்று பொறுப்பில்லாமல் … Read more