இந்தியாவில் 6G சேவை எப்போது? பிரதமர் மோடி அறிவிப்பு!

சமீபத்தில் நடந்த ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் 2022 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி அவர்கள் அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்தியாவில் 6G சேவை அறிமுக படுத்தும் அளவிற்கு நாம் வளர்ந்துவிடுவோம் என பேசியுள்ளார்.மேலும் 5G சேவையால் நாட்டுக்கு கிடைக்க போகும் பொருளாதார வளர்ச்சி மற்றும் நன்மைகள் குறித்தும் பேசியுள்ளார். இந்தியாவின் இளம் தலைமுறை மூளைகளை ஊக்குவிக்கும் விதத்தில் வருடா வருடம் நடத்த படும் நிகழ்வுதான் ஸ்மார்ட் இந்தியா ஹாக்கத்தான் நிகழ்வு. இதன் மூலம் இந்திய அறிவியல் … Read more

சிவகங்கையில் குடிநீர் வருவதை அறிய அலாரம் உருவாக்கிய தொழிலாளி

சிவகங்கையில் நகராட்சி குடிநீர் குழாயில் வருவதை அறிந்து கொள்ளும் வகையில் தொழிலாளி ஒருவர் அலாரம் கண்டுபிடித்துள்ளார். சிவகங்கையில் பொதுமக்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தண்ணீர் வரும் நேரத்தை அறிந்து குடங்களில் பிடிக்கின்றனர். சிபி காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இளங்கோவன். இவரது மனைவி சுமதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் காத்திருந்து தண்ணீர் பிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் தண்ணீரும் வீணாகியது. இதை சரிசெய்ய யோசித்த இளங்கோவன், நகராட்சி குடிநீர் வந்ததும் அலாரம் ஓலிக்கும் … Read more

Apple iPhone: 15 வருட பழைய ஐபோன் ரூ.28 லட்சத்திற்கு ஏலம், அப்படி என்ன ஸ்பெஷல்?

அமெரிக்காவில் ஆர்ஆர் என்ற ஏல நிறுவனத்தின் சார்பாக சமீபத்தில் 70கும் மேற்பட்ட பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டன. அதில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளான ஆப்பிள் 1 சர்க்யூட் போர்டு , ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனரான ஸ்டீவ் வோஸ்னியாக் பயன்படுத்திய சால்டரிங் மெசின் , முதல் தலைமுறை ஆப்பிள் ஐபாட்(5GB) ஆகியவை வைக்கப்பட்டிருந்தன. இந்த முதல் தலைமுறை ஐபோன் ஜனவரி மாதம் 2007 ஆம் ஆண்டு அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாபால் வெளியிடப்பட்டது. இந்த ஐபோன் 3.5இன்ச் டிஸ்பிளேவுடன் … Read more

Pegasus Case: உளவு மன்னன் பெகாசஸ்! பெகாசஸ் தனி மனிதரை எப்படி பாதிக்கும், எப்படி தப்பிப்பது?

சமீபத்தில் உலகையே உலுக்கிய பெகாசஸ் என்ற ஸ்பைவேரை யாரும் மறந்திருக்க மாட்டோம். பெரிய பெரிய அரசியல் புள்ளிகள் முதல் பிரபலங்கள் வரை பயந்து கொண்டிருந்த தருணம். ஒரு வேளை இருக்குமோ? என எல்லார் மனதிற்குள்ளும் அச்சம் ஊஞ்சலாடி கொண்டிருந்த சமயம். வேறொன்றுமிலை சில மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலை சேர்ந்த பெகாசஸ் என்ற உளவு பார்க்கும் மால்வேர்(malware) தான் இப்படி பலரையும் பீதியில் ஆழ்த்தியது. ஒரு மெசேஜ், மெயில், ஏன் ஒரு வாட்சப் மிஸ்ட்கால் மூலமாக கூட உங்கள் … Read more

Pratik: எலான் மஸ்க்கோட ஐடியா என்கிட்டயும் இருந்துச்சி. 13 வயதில் ரோபோ. சாதனை படைத்த சென்னை சிறுவன்.

பொதுவாக ரோபோக்கள் வெறும் சொல்கின்ற கட்டளையை நிறைவேற்றும் இயந்திரமாக மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு 13 வயது சிறுவன் மனித உணர்வுகளோடு இருக்கக்கூடிய ரோபோ ஒன்றை உருவாக்கி டெக் உலகை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அப்துல் கலாம் தான் என்னோட ஹீரோன்னு ஆரம்பிச்சி எலான் மஸ்க் போல வரணும்னு சொல்லிருக்காரு பிரதிக். நல்லா இருக்கிங்களா என்று புன்சிரிப்புடன் பேச துவங்கிய பிரதிக்கின் சிறப்பு பேட்டி நமது சமயம் தமிழ் நேயர்களுக்காக. நிருபர் : உங்களை பற்றி சொல்லுங்கள் பிரதிக் பிரதிக்: … Read more

இந்தியாவில் ரூ.20,000-க்கு குறைவான பட்ஜெட்டில் கிட்டும் 5ஜி ஸமார்ட்போன்கள் – ஒரு பட்டியல்

இந்தியாவில் வெகு விரைவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதற்கான பணியில் டெலிகாம் நிறுவனங்கள் பிசியாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்திய சந்தையில் ரூ.20,000-க்கும் குறைவாக பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்ப்போம். இந்த ஸ்மார்ட்டான டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது ஸ்மார்ட்போன்கள். அது பள்ளி செல்லும் குழந்தைகள் தொடங்கி அனைத்து வயதினருக்கும் பொருந்தும். செல்போனை வடிவமைத்த மார்ட்டின் கூப்பர் கூட பின்னாளில் அதன் பரிணாம வளர்ச்சியானது இப்படி எல்லாம் … Read more

நம்பி நாராயணனை மிகைப்படுத்தி காட்டியது ‘ராக்கெட்ரி’ – முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் பரபரப்பு பேட்டி

விண்வெளி திட்டத்தில் முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் தனிநபர் பங்களிப்பு தொடர்பான சில கூற்றுகளுக்கு, அவருடன் பணியாற்றிய முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். அண்மையில் நம்பி நாராயணனின் வாழ்க்கை கதையை மையமாக கொண்டு ‘ராக்கெட்ரி: தி நம்பி விளைவு’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில் விஞ்ஞானி நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடித்திருந்தார். அந்தப் படத்தில் இஸ்ரோ பயன்படுத்தி வரும் கிரையோஜெனிக் புரோபல்ஷன் (Propulsion) தொழில்நுட்பத்தில் நம்பி நாராயணின் பங்களிப்பு குறித்து … Read more

BSNL Rs 321 Plan: ஒரே ரீசார்ஜ், ஒரு வருஷ வேலிடிட்டி! காவலர்கள் பேசிக்கொள்ள முழுக்க முழுக்க இலவசம்!

பாரத் சன்சார் நிகம் லிமிட்டெட் நிறுவனம் இன்னும் சில நாட்களில் 4G சேவையை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள காவல்துறையினருக்காக புதிய அதிரடி சலுகை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் ரீச்சார்ஜ் தளத்திற்கு சென்று தமிழகத்திற்கான ரீச்சார்ஜ் திட்டங்களின் கீழ் தேடினால் இது கிடைக்கும். திட்டத்தின் பலன்கள் என்னென்ன? Bsnl அறிவித்துள்ள இந்த ரீச்சார்ஜ் திட்டமானது சிறப்பு சலுகையாக தமிழக காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்காக பிரத்தியேகமாக வழங்கப்பட்டுள்ளது.இதன்படி ரூபாய் 321 செலுத்தி ரீச்சார்ஜ் … Read more

Online Game Addiction: ஆன்லைன் கேம் மோகம், தந்தையின் மரணத்திற்கு காரணமான 12 வயது சிறுவன்!

உலகம் முழுவதிலும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பணம் கட்டி விளையாட கூடிய ஆன்லைன் விளையாட்டுகள் அதிகரித்த பின்னர் அதற்காக தற்கொலை செய்து கொள்வதும் பிறரை கொலை செய்வதும் கூட தற்போது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. சீனாவை சேர்ந்த ஹுவாங் ஜெங்சியாங் என்ற கட்டுமான தொழிலாளி சமீப காலமாக மூளையில் புற்றுநோய் ஏற்பட்டு அதனால் அவதி பட்டு வந்தார். இவருக்கு 12 வயதில் ஒரு மகனும், 15 வயதில் … Read more

Whatsapp Scam: ஒரே வாட்சப் மெசேஜில் 21லட்சத்தை அபேஸ் செய்த ஹாக்கர்கள், உஷார்!

உலகம் அதிவேகமாக டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. எந்தளவு அது வளர்ச்சிக்கு சாதமாக இருந்தாலும் அதே அளவு சமூகத்திற்கு பாதகமாகவும் இருக்கிறது. முன்பை விட இணைய வழி குற்றங்கள் அதிகரித்து விட்டன. இந்தியாவில் மட்டும் இந்த ஆண்டில் முதல் இரண்டு மாதங்களில் பதிவான சைபர் குற்றங்கள் 2018ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த எண்ணிகையை விட அதிகம். அந்தளவு நாளுக்கு நாள் உலக அளவில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதில் பிரதானமாக இருப்பது வயதானவர்கள், படிக்க தெரியாதவர்களை … Read more