“போக்சோ குழந்தைகளை காப்பதற்குதானே தவிர காதலிக்கும் இளைஞர்களை தண்டிக்க அல்ல!" – அலகாபாத் நீதிமன்றம்
உத்தரப்பிரதேசத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பட்டியலினத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவரை மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் காதலித்திருக்கிறார். இவர்களின் காதலுக்கு இருதரப்பு வீட்டாரிடமிருந்தும் பெரும் எதிர்ப்பு கிளம்பவே, இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்திருக்கின்றனர். இந்த நிலையில், திருமணத்தின் போது சிறுவனாக இருந்தவர் தற்போது இளைஞராகியுள்ளார். இன்னும் அந்த சிறுமி 18 வயதை அடையவில்லை என்பதால், சிறுமியை திருமணம் செய்துள்ளார் … Read more