காற்றால் கண்டம் வரும்: கோடி மடாதிபதி ஆரூடம்| Dinamalar

சிக்கபல்லாபூர்-“கொரோனாவுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். சங்கடம் வரும் போது, ‘வெங்கடரமணா’ என கூற வேண்டும். மக்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற காரணத்தாலேயே, கொரோனா பூமிக்கு வந்தது. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்,” என கோடி சுவாமிகள் தெரிவித்தார்.சிக்கபல்லாபூரில், அவர் நேற்று கூறியதாவது:கொரோனா எப்படி இருந்தது என்பதற்கு கோவில்களின் கதவு மூடப்பட்டதே சாட்சியாக இருந்தது. பிரபலமான திருப்பதி, தர்மஸ்தலா, சாமுண்டேஸ்வரி கோவில்கள் மூடப்பட்டிருந்தன. மடங்களும் கதவை மூட வேண்டிய நிலை உருவானது.கொரோனாவுக்கு முன்பே நான் கூறியிருந்தேன். சங்கடம் … Read more

கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்துக்கு ரூ.73 ஆயிரம் கோடி நிதி – நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

புதுடெல்லி, நாடாளுமன்ற மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று பதில் அளித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட், ஒரு தொடர்ச்சியை குறிக்கிறது. இது பொருளாதாரத்தில் நிலைத்தன்மை, வரிவிதிப்பு முன்கணிப்பு ஆகியவற்றை கொண்டு வருகிறது. பட்ஜெட்டின் நோக்கம், பொருளாதாரத்தில் நிலையான, நீடித்து நிற்கத்தக்க மீட்புதான். 2008-09 நிதி நெருக்கடியின்போது சில்லரை பணவீக்க விகிதம் 9.1 சதவீதமாக இருந்தது. இருப்பினும், பொருளாதாரத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிற கொரோனா வைரஸ் … Read more

வேலை தேடுபவர்களுக்கு குட் நியூஸ்.. கிளியர் ட்ரிப் சூப்பர் அறிவிப்பு..!

ஆன்லைன் பயண சேவை நிறுவனமான கிளியர் ட்ரிப் அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை வரும் காலாண்டில் 40% அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளது. இது டிசம்பர் 2022ல் மொத்த ஊழியர்கள் தொகுப்பினை 700 பேராக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 3 நாளில் 65% உயர்வு.. அசத்தும் அதானி நிறுவனம்.. முதலீட்டாளர்களுக்கு செம லாபம்..! இது கடந்த 2021ல் 240 ஊழியர்களை கொண்டிருந்தது என இந்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட துறைகளில் போக்குவரத்து … Read more

அமெரிக்க மக்களுக்கு 48 மணி நேர கெடு: இராணுவம் மீட்காது என எச்சரிக்கை

உக்ரைனில் தங்கியுள்ள அமெரிக்க மக்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் வெளியேற வேண்டும் என அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி புடின் எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது போர் தொடுக்கலாம் எனவும், அமெரிக்க மக்கள் எவரையும் மீட்க இராணுவம் உக்ரைனுக்கு வர வாய்ப்பில்லை எனவும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அடுத்த 48 மணி நேரத்திற்குள் அனைத்து அமெரிக்க மக்களும் உக்ரைன் நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – இரவு 10 மணி வரை பிரசார செய்ய மாநில தேர்தல் ஆணையம் அனுமதி

சென்னை,  வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி ஆளும் கட்சி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகின்றனர்.  இந்தநிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் அரசியல் கட்சியினர் பிரசாரத்துக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.  காலை 6 மணி முதல் இரவு 10 … Read more

திமிரி பேரூராட்சியில் திமுக வேட்பாளர்களாக களம் காணும் தம்பதி

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த திமிரி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. திமுக 12 வார்டுகள், விசிக ஒரு வார்டு, அதிமுக 5 வார்டுகள்,  பாஜ ஒரு வார்டு, நாம் தமிழர் கட்சி ஒரு வார்டு, சுயேச்சை வேட்பாளர்கள் பல்வேறு வார்டுகளில் 24 பேர் என மொத்தம் 44 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 11வது வார்டில்  நகர செயலாளர் ஜி.இளஞ்செழியன் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அதேபோல், அவரது மனைவி இளஞ்செழியன் 2வது வார்டில் திமுக … Read more

ஆயுஷ்மான் டிஜிட்டல் திட்டம் ஆரோக்கிய சேதுவுடன் இணைப்பு| Dinamalar

புதுடில்லி:ஆரோக்கிய சேது செயலியுடன், ஆயுஷ்மான் பாரத், ‘டிஜிட்டல்’ திட்டத்தை ஒருங்கிணைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு மருத்துவ அடையாள எண் வழங்கும், ஆயுஷ்மான் பாரத், ‘டிஜிட்டல்’ திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு துவங்கி வைத்தார். இத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நபருக்கும் மருத்துவ அடையாள எண் தரப்படும்.இதன் வாயிலாக, மக்கள் தங்கள் மருத்துவ ஆவணங்கள், டாக்டர்களின் மருந்து சீட்டு, பரிசோதனை சான்றுகள் உள்ளிட்ட அனைத்தையும் டிஜிட்டல் வடிவில் சேகரித்து வைக்க முடியும்.இந்நிலையில், … Read more

இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் 22.54 லட்சம் பேர் புற்றுநோயால் உயிரிழப்பு..!

புதுடெல்லி, கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை இந்தியாவில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதில் சுமார் 22.54 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சிகரமான தகவலை மக்களவையில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-  புற்றுநோய் என்பது பல்வேறு காரணிகளால் ஏற்படும் ஒரு நோயாகும். குறிப்பாக உயர்ந்து வரும் மக்கள் தொகை, உட்கார்ந்த வாழ்க்கை முறை, புகையிலை பொருட்கள் பயன்படுத்துதல், மது … Read more

மத்திய அரசின் ட்ரோன் இறக்குமதி தடை..இந்த 4 பங்குகளுக்கு கைகொடுக்கலாம்..!

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ட்ரோன் எனப்படும் ஆளில்லா சிறு விமானங்கள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 2021லேயே ட்ரோன் தொடர்பான விதிமுறைகளை மத்திய அரசு அறிவித்தது. அதே சமயம் ட்ரோன் தயாரிப்பு தொழிலை ஊக்குவிக்கும் நோக்கில் தயாரிப்புக்கு பல ஊக்கவிப்பு சலுகைகளையும் அறிவித்தது. கிரிப்டோகரன்சி மீது வரி உயர்வு..புதிதாக ஜிஎஸ்டி வரி விதிக்க மோடி அரசு திட்டம்.. யாருக்கு பாதிப்பு..! இறக்குமதி ட்ரோன்களுக்கு தடை மத்திய அரசு வெளி நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் … Read more