'அனைவருக்கும் சம உரிமை!'- முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி!

மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் சம உரிமையை அளிக்கும் வகையில், சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்ததும், ஒரே மாதிரியான குடியுரிமை சட்டம் அமல்படுத்தப்படும் என, உத்தரகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்து உள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு … Read more

குடும்ப அரசியலைச் சாடிய பிரதமர் மோடி <!– குடும்ப அரசியலைச் சாடிய பிரதமர் மோடி –>

அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பக் கட்சிகள் மக்களாட்சியின் சாரத்தையே மாற்றிவிட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் கன்னோசியில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முதற்கட்டத் தேர்தல் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதிப்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். சாதி, மதம் ஆகியற்றின் அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என உலகில் இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் பல தலைமுறையாக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பக் கட்சிகள் … Read more

இடிந்து விழுந்த பாதாள கால்வாய் – சிக்கி தவித்த தொழிலாளர்களில் 5 பேர் மீட்பு

ஸ்லீமனாபாத்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் கட்னி மாவட்டத்தில் உள்ள ஸ்லீமனாபாத் என்ற இடத்தில் நர்மதா நதி வலது கரையில் பர்கி பாதாளக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன.  நேற்று தொழிலாளர்கள் பணியில் இருந்த போது மண் சரிவால் பாதாளக் கால்வாய் இடிந்து விழுந்தது. இதில் 9 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.  #WATCH | Of the 9 labourers trapped, … Read more

கலாசாரம், பாரம்பரியம் பற்றி எதுவும் தெரியவில்லை இந்தியாவை ஒரு நாடாகவே காங்கிரஸ் நினைக்கவில்லை: உத்தரகாண்டில் மோடி ஆவேசம்

டேராடூன்: ‘இந்தியாவை ஒரு நாடாகவே காங்கிரஸ் கருதவில்லை. ,’ என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது. கடைசி கட்ட ஓட்டு வேட்டைக்காக பாஜ வேட்பாளர்களை ஆதரித்து, இம்மாநிலத்தின் ருத்ராபூரில் நேற்று பிரசாரம் செய்தபோது பிரதமர் மோடி பேசியதாவது: பெரும்பான்மையான மாநிலங்களில் நிராகரிக்கப்பட்ட காங்கிரசை அழிக்கும் வாய்ப்பாக இந்த தேர்தலை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தேவபூமியில் முஸ்லிம் பல்கலைக் கழகத்தை நிறுவ திட்டமிட்டுள்ள காங்கிரசின் திட்டத்தையும், எல்லாவற்றிலும் … Read more

சென்னை – பெங்களூரு உள்ளிட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடம் குறித்து ஆய்வு: ரயில்வே அமைச்சர் தகவல்

புதுடெல்லி: சென்னை – பெங்களூரு புதிய புல்லட் ரயில் வழித்தடம் குறித்து ஆய்வு நடப்பதாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மாநிலங்களவையில் எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளார். எழுத்து மூலம் அளித்த பதிலில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை-பெங்களூரு- மைசூரு, டெல்லி-வாரணாசி, மும்பை – நாக்பூர், மும்பை – ஐதராபாத் உள்பட 8 புதிய புல்லட் ரயில் வழித்தடங்களை உருவாக்குவது தொடர்பான ஆய்வை மேற்கொள்ள ரயில்வே தீர்மானித்துள்ளது. டெல்லி-வாரணாசி, மும்பை-நாக்பூர், தில்லி-அகமதாபாத், மும்பை- ஐதராபாத், சென்னை-பெங்களூரு- மைசூரு, … Read more

அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு – பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!

உத்தரகண்ட் மாநிலத்தில், வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் மாதம் 10 … Read more

முகக் கவசம் அணிவதில் விலக்கு? அறிக்கை தர தொற்று தடுப்பு குழுவுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்? <!– முகக் கவசம் அணிவதில் விலக்கு? அறிக்கை தர தொற்று தடுப்பு க… –>

பொது இடங்களில் முகக் கவசம் அணிவதை தவிர்க்கலாமா என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு கொரோனா தடுப்பு நடவடிக்கை குழுவுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முகக் கவசம் அணிவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மகாராஷ்டிர அரசு பரிசீலித்து வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்திருந்தார். இது குறித்து தகவல் அளிக்க மத்திய, மாநில அரசுகளின் தொற்று தடுப்பு குழுவை கேட்டுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இது குறித்து விளக்கமளித்த … Read more

கோவா சட்டசபை தேர்தல் பிரச்சாரம் நிறைவு – நாளை வாக்குப் பதிவு

பனாஜி: கோவா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து அங்கு நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. கோவா சட்ட சபைக்கு மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் இந்த முறை 332வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். உத்தர பிரதேச சட்ட சபைக்கு மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி, முதல் கட்டமாக 58 தொகுதிகளுக்கு கடந்த 10-ம் தேதி தேர்தல் … Read more

மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலையில் நடை திறப்பு: இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மாசி மாத பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று (12ம் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. நேற்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு  கோயில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷ பூஜை உள்பட வழக்கமான பூஜைகள் தொடங்கும். … Read more

திடீரென மேற்குவங்க சட்டப்பேரவையை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்த ஆளுநர் ஜக்தீப்!

மேற்கு வங்கத்தில் ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, திடீரென சட்டப்பேரவையை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்ததால் சட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அதேநேரத்தில், ஆளுநர் ஜக்தீப் தன்கருக்கும் ஆளும் கட்சிக்கும் இடையேயான பனிப்போர் தொடர்ந்தது. இந்த நிலையில் ஆளுநர் பதிவிட்ட டிவிட்டர் பதிவில், அரசமைப்பு சட்டம் 174-ன் படி, தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, மேற்கு … Read more