அரசு ஊழியர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு – பள்ளி, கல்லூரிகளுக்கு லீவு!

உத்தரகண்ட் மாநிலத்தில், வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

உத்தரகண்ட் மாநிலத்தில், முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

ஆளுங்கட்சியான பாஜக, கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று பேரை முதலமைச்சராக பதவி அமர்த்தி உள்ளது. திரிவேந்திர சிங் ராவத், திரத் சிங் ராவத் ஆகியோருக்கு பிறகு, புஷ்கர் சிங் தாமி முதலமைச்சராக பதவி ஏற்றார். தற்போது இவரது தலைமையில், சட்டப்பேரவைத் தேர்தலை பாஜக எதிர்கொள்கிறது. எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் முதலமைச்சர் ஹரிஷ் சிங் ராவத் தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கிறது.

இந்நிலையில், வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளித்து உத்தரகண்ட் மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது குறித்து அம்மாநில தலைமை செயலாளர் சுக்பிர் சிங் சந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 14 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அன்று ஒரு நாள் மட்டும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள், தங்களது ஊழியர்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றும் வகையில்
ஊதியத்துடன் விடுப்பு
வழங்க வேண்டும். இல்லை எனில் கடும் நடவடிக்ககை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பொதுத் தேர்தல் என்பதால், பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.